தை முதல் வெள்ளிக்கிழமை பெண்கள் செய்ய வேண்டிய வழிபாடு

amman1
- Advertisement -

அப்படி என்ன இன்று அற்புதம் வாய்ந்த நாள். தை மாதம் முதல் வெள்ளிக்கிழமை. இது நாம் எல்லோருக்கும் தெரியும். இது தவிர இன்று மூன்று திதிகளும் சங்கமிக்கின்ற ஒரு நல்ல நாளாக நமக்கு சொல்லப்பட்டுள்ளது. அதாவது, இன்று அதிகாலை நேரம் 1:26 மணி வரை அஷ்டமி திதி இருந்தது. இன்று இரவு 11:49 வரை நவமி திதி இருக்கின்றது.

அதற்கு மேல் பட்ட நேரம் தசமி திதி. ஆக இந்த மூன்று திதிகளும் சங்கமிக்கக்கூடிய சக்தி வாய்ந்த வெள்ளிக்கிழமை தான் இன்று. இந்த நாளை நாம் தவறு விடலாமா. குடும்பம் சுபிட்சம் பெற வீட்டில் இருக்கும் பெண்கள் செய்ய வேண்டிய சில ஆன்மீகம் சார்ந்த பரிகாரங்களை இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

- Advertisement -

வீட்டில் சுப காரிய தடை இருக்கிறது. கணவருக்கு வருமானம் இல்லை. தொழிலில் லாபம் அதிகம் கிடைக்கவில்லை. நோய்நொடி பிரச்சனை இருக்கிறது. இப்படி குடும்பத்தில் எந்த பிரச்சனை இருந்தாலும் அது சரியாக வீட்டில் இருக்கும் பெண்கள் வேண்டுதல் வைத்து, பின் சொல்லக்கூடிய வழிபாடுகளை மேற்கொண்டால் உங்கள் பிரச்சனைகள் அனைத்தும் உடனடியாக தீரும்.

தை முதல் வெள்ளிக்கிழமை பெண்கள் செய்ய வேண்டிய பரிகாரம்

பெண்கள் என்றாலே அவர்கள் சக்தி வடிவம் கொண்டவர்கள். இன்று நீங்கள் கட்டாயமாக வீட்டு பக்கத்தில் இருக்கும் அம்மன் கோவிலுக்கு செல்ல வேண்டும். இன்று வீட்டில் இருக்கும் பெண்கள் அம்பாள் வழிபாடு செய்தால் அம்பாளுக்கு இருக்கும் பாதி சக்தி உங்களுக்கு வந்து விடும். உங்கள் கையால் வாச மிகுந்த தாழம்பு குங்குமத்தை வாங்கி அம்மன் கோவிலுக்கு தானமாக கொடுங்கள்.

- Advertisement -

அந்த குங்குமத்தில் அம்பாளுக்கு குங்குமம் அர்ச்சனை செய்து வைப்பது இன்னும் சிறப்பான பலனை தரும். அர்ச்சனை செய்த குங்குமத்தை வாங்கி வந்து தினமும் உங்கள் நெற்றியில் இட்டு வந்தால் நீங்கள் முழு சக்தி சொரூபமாகவே மாறிடுவீங்க. அம்பாளும் நீங்களும் வேறு வேறு இல்லை. பிறகு குடும்பத்தை சுபிட்சமாக நடத்திச் செல்லா அத்தனை அம்சங்களும் உங்களுக்கு கிடைத்துவிடும்.

இது தவிர உங்க வீட்டு பக்கத்தில் கோசாலை இருக்கிறது. பசுமாடு இருக்கிறது என்றால் அந்த மாடுகளுக்கு உங்களால் முடிந்த தானத்தை இன்று நீங்கள் செய்யலாம். வீட்டில் இருக்கும் பெண்களின் கையால் இந்த தானத்தை செய்யுங்கள். அகத்தைக் கீரை, வெல்லம், பச்சரிசி, வாழைப்பழம், இப்படி உங்களால் என்ன பொருள் வாங்கி தர முடியுமோ, அதை வாங்கிக் கொடுங்கள். வீட்டில் இருக்கும் பெண் பிள்ளைகளின் கையாலும் இந்த தானத்தை செய்வது சிறப்பு.

- Advertisement -

இன்று மாலை தை வெள்ளிக்கிழமை என்பதால், உங்கள் வீட்டு பூஜை அறையில் வழக்கம் போல பூஜைகள் நடைபெறும். பூஜை அறை அலங்காரத்தோடு தான் இருக்கும். வெள்ளை நிறத்தில் பால் பாயாசம், பசு நெய் ஊற்றி, பசும்பால் ஊற்றி, முந்திரி திராட்சை சேர்த்து, ருசியாக சமைத்து இந்த நிவேதியத்தை மகாலட்சுமிக்கு படைத்து, வழிபாடு செய்தால் உங்கள் குடும்பத்தில் பணம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் தீரும்.

இதையும் படிக்கலாமே: பித்ரு தோஷம் நீங்க

மேல் சொன்ன ஆன்மீகம் சார்ந்த இந்த எளிய வழிபாடு உங்கள் குடும்ப பிரச்சனைக்கு நிரந்தரமாக ஒரு முற்றுப்புள்ளியை வைத்து விடும் என்ற நம்பிக்கையில் ஆன்மீகம் சார்ந்த இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -