தை மாத ராசி பலன்

Thai matha Rasi palan
- Advertisement -

மேஷம்:

10 -ல் சூரியன், 7-ல் குரு,  7,8-ல் செவ்வாய், 9,10,11 -ல் புதன், சுக்கிரன், 9 -ல் சனி, 4-ல் ராகு, 10-ல் கேது உள்ளனர்.

- Advertisement -

மேஷராசி அன்பர்களே! குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை காணப்படும். சுபநிகழ்ச்சிகளுக்கான பேச்சுவார்த்தைகள் சாதகமாக முடியும். செல்வம் செல்வாக்கு அதிகரிக்கும். தேவைகளைப் பூர்த்தி செய்துகொள்ள முடியும். பிரச்னைகள் தீரும். காரியங்களில் அனுகூலம் உண்டாகும். கணவன் – மனைவிக்கு இடையில் இருந்து வந்த பிணக்குகள் நீங்கி அந்நியோன்யம் அதிகரிக்கும். விலை உயர்ந்த ஆடை, ஆபரணங்களை வாங்கி மகிழ்வீர்கள். வீட்டில் மகிழ்ச்சி நிலவும். வீட்டுக்குத் தேவையான பொருள்களை வாங்குவீர்கள். சிலர் இருக்கும் வீட்டில் இருந்து வசதியான வீட்டுக்கு மாறும் வாய்ப்பு ஏற்படக்கூடும். உறவினர் மற்றும் நண்பர்கள் வீட்டு விருந்து விசேஷங்களுக்குச் சென்று வருவீர்கள்.

வியாபாரிகளுக்கு லாபம் கூடுதலாகக் கிடைக்கும். சக வியாபாரிகளின் போட்டிகளைச் சமாளிப்பீர்கள். ஷேர் மூலம் லாபம் கிடைக்கும். வியாபாரம் வளர்ச்சிப் பாதையில் செல்லும். பற்று வரவில் நேரடி கவனம் தேவைப்படும்.

- Advertisement -

அலுவலகத்தில் இதுவரை இருந்து வந்த வேலைச்சுமை குறையும். எதிர்பார்த்த பதவி உயர்வு, ஊதிய உயர்வு போன்ற சலுகைகள் கிடைக்கும். சக பணியாளர்கள் அனுசரணையாக நடந்துகொள்வார்கள். உங்கள் ஆலோசனைகள் அதிகாரிகளால் ஏற்றுக்கொள்ளப்படும்.
கலைத்துறையைச் சேர்ந்த அன்பர்களுக்கு எதிர்பார்த்தபடி வாய்ப்புகள் அமையும். சக கலைஞர்களால் இருந்து வந்த போட்டிகள் மறையும். பணவரவு அதிகரிக்கும்.

மாணவர்கள் படிப்பில் ஆர்வத்துடன் ஈடுபடுவர். நல்ல நண்பர்களின் சேர்க்கை உண்டாகும். தேர்வுகளில் நல்ல மதிப்பெண்கள் பெற்று ஆசிரியர்களின் பாராட்டுகளைப் பெறுவீர்கள்.

- Advertisement -

பெண்மணிகளுக்கு குடும்பத்தில் உங்கள் மதிப்பு உயரும். அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் இணக்கமாக நடந்துகொள்வார்கள். வேலைக்குச் செல்லும் பெண்மணிகளுக்கு பதவி உயர்வு கிடைக்கும்.

சாதகமான நாள்கள்: ஜனவரி 18,19,21,24,25,29,30, பிப்ரவரி 4,5,7

சந்திராஷ்டம நாள்கள்: ஜனவரி 14, பிப்ரவரி 8,9,10

அதிர்ஷ்ட எண்கள்: 1,7,9

பரிகாரம்: செவ்வாயன்று துர்க்கைக்கு  நெய் தீபம் ஏற்றுவதுடன், கந்த சஷ்டி பாராயணம் செய்வதும் நல்லது. 

ரிஷபம்:

rishabam

9 -ல் சூரியன், 6-ல் குரு, 6,7-ல் செவ்வாய்,  8,9,10 -ல் புதன், சுக்கிரன், 8 -ல் சனி, 3-ல் ராகு, 9-ல் கேது உள்ளனர்.

ரிஷபராசி அன்பர்களே! மாதத் தொடக்கத்தில் பணவரவு அதிகரிக்கும். மனதில் தன்னம்பிக்கை அதிகரிக்கும். துணிச்சலாக சில முடிவுகளை எடுப்பீர்கள். மற்றவர்களுடன் பேசும்போது பொறுமையைக் கடைப்பிடிக்கவும். முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். கணவன் மனைவி இருவரும் ஒருவரை ஒருவர் அனுசரித்துச் செல்வது நல்லது. பிள்ளைகள் வகையில் செலவுகள் ஏற்பட்டாலும், மகிழ்ச்சி உண்டாகும். சகோதர வகையில் நன்மை உண்டாகும். உறவினர்கள் வருகை மகிழ்ச்சி தரும். சிலருக்கு வீட்டில் பொருள்கள் களவு போகக்கூடும் என்பதால் கவனம் தேவை. சிலருக்கு புதிய வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். தந்தையின் உடல்நலனில் கவனம் தேவை. தந்தை வழி உறவினர்களால் ஆதாயமும் அலைச்சலும் உண்டாகும். மாதப் பிற்பகுதியில் உறவினர்களுடன் கருத்துவேறுபாடு ஏற்படக்கூடும்.

வியாபாரிகளுக்கு லாபம் அதிகரிக்கும். வியாபாரத்தை விரிவுபடுத்தி நவீனப்படுத்தத் தேவையான கடனுதவி கிடைக்கும். ஆனால், வீண் செலவுகள் ஏற்படக்கூடும். சக வியாபாரிகளால் போட்டிகளைச் சந்திக்கவேண்டி வரும்.

அலுவலகத்தில் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். சக பணியாளர்கள் உங்கள் பணிகளில் உதவி செய்வார்கள். சிலருக்குத் தேவையில்லாத இடமாற்றமும் ஊர்மாற்றமும் ஏற்படக்கூடும். பணிகளில் கூடுதல் கவனம் தேவைப்படும் மாதம் இது.

கலைஞர்களுக்கு பாராட்டு கிடைக்கும். புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். ஆனால், சக கலைஞர்களால் மறைமுக எதிர்ப்புகள் தோன்றக்கூடும்.

மாணவர்கள் படிப்பில் ஆர்வத்துடன் ஈடுபடுவார்கள். ஆசிரியர்களின் பாராட்டுகள் மகிழ்ச்சி தரும். மாதப் பிற்பகுதியில் பாடங்களை கவனிப்பதில் கூடுதல் கவனம் தேவை.

பெண்மணிகளுக்கு பல வகைகளிலும் முன்னேற்றமான மாதம். அலுவலகத்துக்குச் செல்லும் பெண்மணிகளுக்கு எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும்.

நல்ல நாள்: ஜனவரி 20,21,22,23,27,28,31
பிப்ரவரி 1,6,7,8,9,10

சந்திராஷ்டம நாள்: ஜனவரி 15,16,பிப்ரவரி 11,12 

அதிர்ஷ்ட எண்கள்: 7,8

பரிகாரம்: வியாழனன்று தட்சிணாமூர்த்திக்கு நெய் தீபம் ஏற்றி வழிபடுவதும், சனிக்கிழமைகளில் ஆஞ்சநேயரை வழிபடுவதும் நன்மை தரும்.

மிதுனம்:

midhunam

8-ல் சூரியன், 5-ல் குரு, 5,6-ல் செவ்வாய்,  7,8,9 -ல் புதன், சுக்கிரன், 7-ல் சனி, 2-ல் ராகு, 8-ல் கேது உள்ளனர்.

மிதுனராசி அன்பர்களே! வெளிவட்டாரத்தில் செல்வாக்கு அதிகரிக்கும். புதிய முயற்சிகள் அனைத்தும் மிக எளிதாக வெற்றி அடையும். எதிர்பார்த்த பணவரவு கிடைப்பதுடன், எதிர்பாராத அதிர்ஷ்ட வாய்ப்புகளும் ஏற்படக்கூடும். குடும்பத்துக்குத் தேவையான பொருள்களை வாங்கி மகிழ்வீர்கள். கணவன் – மனைவி இடையில் அந்நியோன்யம் அதிகரிக்கும். சிலருக்குக் குழந்தை பாக்கியம் கிடைப்பதற்கான வாய்ப்பு உள்ளது. பிரிந்திருந்த கணவன் – மனைவி ஒன்று சேருவார்கள். திருமண முயற்சிகள் சாதகமாக முடியும். சுபநிகழ்ச்சிகளை திட்டமிட்டபடியே நடத்தி முடிப்பீர்கள். உறவினர் மற்றும் நண்பர்கள் வீட்டு விருந்து விசேஷங்களில் கலந்துகொள்வீர்கள். சிலருக்கு வெளிமாநிலங்களில் உள்ள புகழ் பெற்ற புண்ணியத் தலங்களுக்குச் செல்லும் வாய்ப்பு உண்டாகும்.  இதுவரை இருந்த உடல் உபாதைகள் நீங்கி, உடல் ஆரோக்கியம் மேம்படும். வாழ்க்கையில் நல்ல முன்னேற்றம் ஏற்படுவதற்கான திருப்புமுனை மாதமாக இந்த மாதம் அமையும்.

அலுவலகத்தில் உற்சாகமான சூழ்நிலை காணப்படும். பணிகளில் உற்சாகமாக ஈடுபடுவீர்கள். உயர் அதிகாரிகள் உங்கள் ஆலோசனைகளுக்கு உரிய அங்கீகாரம் கொடுப்பார்கள். எதிர்பார்த்த பதவி உயர்வு, ஊதிய உயர்வு போன்ற சலுகைகள் கிடைக்கும். உங்களுடைய கோரிக்கைகள் ஏற்றுக்கொள்ளப்படும்.

தொழில் மற்றும் வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விடவும் விற்பனையும் லாபமும் கூடுதலாகக் கிடைக்கும். அரசாங்க வகையில் எதிர்பார்த்த காரியங்கள் அனுகூலமாக முடியும். புதிய முயற்சிகள் வெற்றி பெறும். மாதப் பிற்பகுதியில் சக வியாபாரிகளால் மறைமுகப் போட்டிகள் ஏற்படக்கூடும். பற்று வரவில் கவனம் தேவை.

கலைத்துறையைச் சேர்ந்த அன்பர்களுக்கு நல்ல நல்ல வாய்ப்புகளும், தாராளமான பணவரவும் கிடைக்கும். பொது நிகழ்ச்சிகளில் கௌரவிக்கப்படுவீர்கள். புகழும், ரசிகர்களிடம் செல்வாக்கும் அதிகரிக்கும்.

மாணவ மாணவியர்க்கு, புதன் சாதகமாக இல்லாத காரணத்தால் படிப்பில் ஆர்வம் குறையக்கூடும். ஆனாலும், குருபலம் இருப்பதால், மனத் தெளிவு பெற்று ஓரளவு படிப்பில் கவனம் செலுத்த முயற்சி செய்வீர்கள். ஆசிரியர்களின் ஆலோசனைகள் பயன் தருவதாக இருக்கும்.

குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்மணிகளுக்கு மகிழ்ச்சி தரும் மாதம். புதிய ஆடை, ஆபரணங்கள் வாங்கி மகிழ்வீர்கள். விருந்து விசேஷங்களில் கலந்துகொள்ளும் வாய்ப்பு உண்டாகும். அலுவலகத்துக்குச்  செல்லும் பெண்மணிகளுக்கு பல வகைகளிலும் அனுகூலமான மாதம் இது.

நல்ல நாள்கள்: ஜனவரி  14,15,16,22,23,24,25,29,30
பிப்ரவரி 2,3,8,9,10,11,12.

சந்திராஷ்டம நாள்கள்: ஜனவரி  17,18,19

அதிர்ஷ்ட எண்கள்: 5,7

பரிகாரம்: திங்கள்கிழமைகளில் சிவாலயங்களில் நெய்தீபம் ஏற்றுவதும் வில்வத்தால் அர்ச்சனை செய்வதும் நன்மை தரும்.

கடகம்:

kadagam

7-ல் சூரியன், 4-ல் குரு, 4,5-ல் செவ்வாய்,  6,7,8-ல் புதன், சுக்கிரன், 6-சனி, 1-ல் ராகு, 7-ல் கேது உள்ளனர்.

கடகராசி அன்பர்களே!  குடும்பத்தில் சிற்சில பிரச்னைகள் ஏற்பட்டு மன அமைதியை பாதிக்கக்கூடும். கூடுமானவரை மற்றவர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. பிள்ளைகளை அவர்கள் போக்கிலேயே விட்டுப்பிடிப்பது நல்லது. எந்த ஒரு செயலையும் ஒருமுறைக்குப் பலமுறை போராடித்தான் முடிக்கவேண்டி இருக்கும். ஆனால், புதிய ஆடை, ஆபரணங்கள் சேரும். விருந்து விசேஷங்களில் கலந்துகொள்ளும் வாய்ப்பு உண்டாகும். கணவன் – மனைவி இடையில் அந்நியோன்யம் அதிகரிக்கும். வெளிவட்டாரத்தில் மதிப்பும் மரியாதையும் கூடும். அரசாங்க விவகாரங்கள் சாதகமாக முடியும். உறவினர்கள் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி நிலவும். சிலருக்குக் குழந்தை பாக்கியம் கிடைக்கும்.  ஆனால் உடல் நலனில் கூடுதல் கவனம் செலுத்துவது மிகவும் அவசியம்.

அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். எந்த ஒரு வேலையையும் சற்று கஷ்டப்பட்டுத்தான் முடிக்கவேண்டி இருக்கும். தீவிர முயற்சியின் பேரிலேயே உங்கள் கோரிக்கைகள் நிறைவேறும். சக ஊழியர்களால் ஓரளவு உதவி உண்டு.

தொழில், வியாபாரத்தில் கூடுதலாக உழைக்கவேண்டும். ஆனால், அதற்கேற்ற ஆதாயம் கிடைக்கும் என்று சொல்வதற்கில்லை. பங்குதாரர்களால் வியாபாரத்தில் லாபம் கூடுதலாகக் கிடைக்கும். மாதப் பிற்பகுதியில் அரசாங்க வகையில் எதிர்பார்க்கும் காரியங்கள் அனுகூலமாக முடியும். வியாபாரத்தை விரிவுபடுத்த வங்கிக் கடனுதவி கிடைக்கும்.

கலைத்துறையைச் சேர்ந்த அன்பர்களுக்கு பெரிய நிறுவனங்களில் இருந்து அழைப்பு வரும். புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். புகழும் கௌரவமும் அதிகரிக்கும். ரசிகர்களிடம் உங்கள் செல்வாக்கு கூடும். சிலருக்கு விருதுகளும் பட்டங்களும் கிடைக்கும்.

மாணவ – மாணவியர்க்கு படிப்பில் இருந்த தேக்க நிலை மாறும். பாடங்களை ஆர்வத்துடன் கவனிப்பீர்கள். ஆசிரியர்களின் கேள்விகளுக்கு உரிய பதில்களைக் கூறி, பாராட்டு பெறுவீர்கள். ஆனாலும், நண்பர்களிடம் பழகும்போது கவனம் தேவை.

குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்மணிகளுக்கு மகிழ்ச்சி தரும் மாதமாகவே இருக்கும். குடும்பப் பொறுப்புகளை நிறைவேற்றுவதில் சிரமம் எதுவும் இருக்காது. அக்கம்பக்கத்து வீடுகளில் உள்ளவர்கள் உதவிகரமாக இருப்பார்கள். அலுவலகத்துக்குச் செல்லும் பெண்மணிகளுக்கு பணிகளில் கூடுதல் கவனம் தேவை.

நல்ல நாள்கள்: ஜனவரி  15,16,17,18,19,24,25,26,27,28,31,

பிப்ரவரி 4,5,11,12

சந்திராஷ்டம நாள்கள்: ஜனவரி  20,21

அதிர்ஷ்ட எண்கள்: 4,6

பரிகாரம்: சங்கடஹர சதுர்த்தியன்று விநாயகர் வழிபாடு செய்வதும், ராகுகால வேளையில் துர்கைக்கு நெய்தீபம் ஏற்றுவதும் நலம் சேர்க்கும்.

சிம்மம்:

simmam

6-ல் சூரியன், 3-ல் குரு, 3,4-ல் செவ்வாய்,  5,6,7-ல் புதன், சுக்கிரன், 5-சனி, 12-ல் ராகு, 6-ல் கேது உள்ளனர்.

சிம்மராசி அன்பர்களே! திடீர் அதிர்ஷ்ட வாய்ப்புகள் ஏற்படும். குழந்தைகளால் மகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நிகழும். நண்பர்களும் அனுகூலமாக இருப்பார்கள். அவர்களிடம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். வெளிவட்டாரத்தில் செல்வாக்கு அதிகரிக்கும். தெய்வ பக்தி அதிகரிக்கும். எடுத்த செயலை வெற்றிகரமாக முடிப்பீர்கள். பணப்புழக்கம் அதிகரிக்கும். குடும்பத்தில் உறவினர்களிடையே இருந்த கருத்து வேறுபாடு நீங்கி, சுமுகமான சூழ்நிலை உண்டாகும். வெளிவட்டாரத்தில் மதிப்பு மரியாதை கூடும். சிலருக்கு புதிய வீடு, வாகனம் வாங்கும் வாய்ப்பு உண்டாகும். மாதப் பிற்பகுதியில் குடும்பப் பெரியவர்களும் நண்பர்களும் உதவிகரமாக இருப்பார்கள். புதிய ஆடை, ஆபரணங்களின் சேர்க்கை உண்டாகும். ஆண்களுக்கு பெண்களாலும் பெண்களுக்கு ஆண்களாலும் நன்மைகள் ஏற்படும். சிலருக்கு புண்ணியத் தலங்களுக்குச் செல்லும் வாய்ப்பு உண்டாகும்.  ஆனால், உடல்நலனில் கவனம் தேவைப்படுகிறது. தாயாருடன் கருத்து வேறுபாடுகள் ஏற்படக்கூடும்.அவருடைய உடல் ஆரோக்கியமும் சிறிய அளவில் பாதிக்கப்பட்டு, உடனே சரியாகிவிடும்.  தாய்வழி உறவினர்களிடம் அனுசரனையாக நடந்துகொள்ளவும்.

அலுவலகத்தில் அதிக பணிச்சுமை ஏற்படுவதால், மனதில் சோர்வும், உடல் அசதியும் உண்டாகும். உயர் அதிகாரிகளிடம் அனுசரித்துப் போவது எதிர்காலத்துக்கு நல்லது. சிலருக்கு திடீர் இடமாற்றம்,. பணிமாற்றம் ஏற்படக்கூடும். எதிர்பார்க்கும் சலுகைகள் கிடைப்பதில் தடை தாமதங்கள் ஏற்படக்கூடும்.

தொழில், வியாபாரத்தில் முன்னேற்றமான சூழ்நிலையே காணப்படுகிறது. உழைப்புக்கேற்ற ஆதாயம் கிடைக்கும். பங்குதாரர்களுடன் இணக்கமான சூழ்நிலை காணப்படுகிறது. ஆனாலும், மறைமுகப் பிரச்னைகளைச் சமாளிக்கவேண்டி இருக்கும். மாதப் பிற்பகுதியில் கொடுக்கல் – வாங்கல் விஷயத்தில் எச்சரிக்கை அவசியம்.

கலைத்துறையைச் சேர்ந்தவர்கள் சாமர்த்தியமாகப் பேசி வாய்ப்புகளைப் பெறுவார்கள். கலைஞர்களுக்கு  சக கலைஞர்களால் நன்மைகள் ஏற்பட சாத்தியம் உள்ளது.

மாணவ மாணவியர்க்கு பாடங்களில் கூடுதல் கவனம் தேவைப்படுகிறது. பெற்றோர் மற்றும் ஆசிரியர்களின் ஆலோசனைகளைக் கேட்டு நடப்பது நல்லது. தேவையற்ற சகவாசத்தைத் தவிர்க்கவேண்டியது அவசியம்.

குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்மணிகளுக்கு உறவினர்கள் மத்தியில் மதிப்பு மரியாதை கூடும். கணவரின் அன்பும் அவர் வழி உறவினர்களால் நன்மைகளும் ஏற்படும். சிலருக்கு வெளியூர் புண்ணிய தலங்களுக்குச் செல்லும் வாய்ப்பு உண்டாகும். அலுவலகத்துக்குச் செல்லும் பெண்மணிகளுக்கு சலுகைகள் கிடைப்பதில் தாமதம் ஏற்படும்.

நல்ல நாள்: ஜனவரி 17,18,19,20,21,26,27,28,29,30,பிப் 2,3,6,7

சந்திராஷ்டம நாள்: ஜன 22,23

அதிர்ஷ்ட எண்கள்: 3,5

பரிகாரம்: வியாழனன்று தட்சிணாமூர்த்தி வழிபாடும்,வெள்ளிக்கிழமை அம்பிகை வழிபாடும் நலம் தரும். அபிராமி அந்தாதி பாராயணம் செய்வதும் நல்லது.

கன்னி:

kanni

5 – சூரியன், 2-ல் குரு, 2,3- ல் செவ்வாய்,  4,5,6 -ல் புதன், சுக்கிரன், 4-ல் சனி, 11-ல் ராகு, 5-ல் கேது உள்ளனர்.

கன்னிராசி அன்பர்களே! பணப்புழக்கம் கணிசமாக அதிகரிக்கும். சுபச் செலவுகள் அதிகரிக்கும். உறவினர்கள் வருகையால் வீட்டில் மகிழ்ச்சியான சூழ்நிலை காணப்படும். முன்னேற்றத்துக்கான வழிவகைகள் பிறக்கும். புதிய ஆடை, ஆபரணங்கள் வாங்கும் யோகம் உண்டாகும். பிரிந்திருந்த கணவன் – மனைவி ஒன்று சேருவீர்கள். சிலருக்குக் குழந்தை பாக்கியம் கிடைக்கும். மாதப் பிற்பகுதியில் சிலருக்கு புது வீடு, வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். நவீன ரக மின்சார, மின்னணு சாதனங்கள் வாங்குவீர்கள். பிள்ளைகள் வழியில் பெருமைப்படத்தக்க செய்திகளைக் கேட்பீர்கள். திருமண முயற்சிகள் சாதகமாக முடியும். மகளுக்கு நல்ல இடத்தில் வரன் அமையும். ஆனால், குடும்பத்தில் அவ்வப்போது சிறுசிறு சங்கடங்கள் ஏற்படக்கூடும். மாதப் பிற்பகுதியில் உறவினர்களால் குடும்பத்தில் பிரச்னைகள் ஏற்படக்கூடும் என்பதால், உறவினர்களிடம் பேசும்போது பொறுமையைக் கடைப்பிடிக்கவும். குடும்ப விஷயங்களில் அவர்களின் தலையீட்டை அனுமதிக்க வேண்டாம். வாகனத்தில் செல்லும்போது சிறுசிறு விபத்துகள் ஏற்படக்கூடும் என்பதால்,கவனமாகச் செல்வதன் மூலம் விபத்துகளைத் தவிர்க்கலாம்.

அலுவலகத்தில் வேலைச்சுமை அதிகரிக்கும். சிலருக்கு பதவி மாற்றமும், இட மாற்றமும் ஏற்படக்கூடும். அலுவலகத்தில் உயர் அதிகாரிகளிடம் பேசும்போது பொறுமையைக் கடைப்பிடிக்கவும். சக ஊழியர்களிடமும் போதுமான ஒத்துழைப்பை எதிர்பார்க்க முடியாது.

தொழில் மற்றும் வியாபாரத்தில் லாபம் எதிர்பார்த்ததை விடவும் குறைவாகவே கிடைக்கும். மறைமுக எதிரிகளால் பிரச்னைகள் ஏற்படக்கூடும். வியாபாரத்தில் புதிய முயற்சிகள் எதுவும் இந்த மாதம் வேண்டாம். மாதப் பிற்பகுதியில் ஓரளவுக்கு நன்மைகளை எதிர்பார்க்கலாம்.

கலைத்துறையைச் சேர்ந்த அன்பர்களுக்கு எதிர்பார்த்தபடியே புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். நியாயமாக உங்களுக்குக் கிடைக்கவேண்டிய பாராட்டுகள் மறுக்கப்படும். மாதப் பிற்பகுதியில் நிலைமை சீரடையும்.

மாணவ – மாணவியர்க்கு பாடங்களில் கூடுதல் கவனம் தேவைப்படுகிறது. கஷ்டப்பட்டு படித்தால்தான், பாடங்களில் நல்ல மதிப்பெண்கள் பெற்று, ஆசிரியர்களின் பாராட்டுகளைப் பெற முடியும்.

குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்மணிகளுக்கு மகிழ்ச்சி தரும் மாதமாகவே இருக்கும். குடும்ப உறுப்பினர்கள் உங்கள் ஆலோசனைகளுக்கு மதிப்பு தருவார்கள். அலுவலகத்துக்குச் செல்லும் பெண்மணிகளுக்கு பதவி உயர்வு கிடைக்க வாய்ப்பு உள்ளது.

நல்ல நாள்: ஜன 14,20,21,22,23,29,30,31, பிப் 1,4,5,8,9,10

சந்திராஷ்டம நாள்: ஜன 24,25

அதிர்ஷ்ட எண்கள்: 5,9

பரிகாரம்: ஞாயிற்றுக்கிழமைகளில் சூரியனுக்கு நெய்தீபம்  ஏற்றி வழிபடுவதும், ராகுகால துர்கையை வழிபடுவதும் நன்மை தரும்.

துலாம்:

thulam

4-ல் சூரியன், 1-ல் குரு, 1,2-ல் செவ்வாய், 3,4,5 -ல் புதன், சுக்கிரன், 3-ல் சனி, 10-ல் ராகு, 4-ல் கேது உள்ளனர்.

துலாம்ராசி அன்பர்களே! வெளிவட்டாரத்தில் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். அரசாங்க வகையில் எதிர்பார்த்த காரியங்கள் அனுகூலமாக முடியும். தந்தை வழி உறவுகளால் ஆதாயம் உண்டாகும். பணவரவு கணிசமாக உயரும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் உற்சாகமும் நிலவும். கணவன் – மனைவி இடையில் அந்நியோன்யம் அதிகரிக்கும். உறவினர்கள் வருகையும், அதனால் மகிழ்ச்சியும் உண்டாகும். உறவினர்களிடம் எதிர்பார்த்த காரியங்கள் அனுகூலமாகும். சிலருக்கு வீடு, மனை வாங்கும் யோகமும் உண்டாகும். புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். எதிரிகளின் தொல்லை இல்லாமல் போகும். அவர்களால் மறைமுக ஆதாயமும் கிடைக்கக்கூடும்.  ஆனால், மாதப் பிற்பகுதியில் விலை உயர்ந்த நகை மற்றும் பொருள்களை இரவல் தரவும் வாங்கவும் வேண்டாம். வீட்டில் பொருள்கள் களவு போகக்கூடும் என்பதால், எச்சரிக்கையாக இருக்கவும். அக்கம்பக்கத்தில் இருப்பவர்களுடன் அனுசரித்துச் செல்வது நல்லது. உடல் ஆரோக்கியம் மேம்படும்.

அலுவலகத்தில் ஓரளவுக்கு முன்னேற்றமான சூழ்நிலையே காணப்படுகிறது. எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். சக ஊழியர்கள் உங்கள் பணிகளில் ஒத்துழைப்பு தருவார்கள். உங்கள் கோரிக்கைகள் ஏற்றுக்கொள்ளப்படும். பதவி உயர்வு, ஊதிய உயர்வு கிடைப்பதில் இருந்த தடைகள் விலகும்.

தொழில் மற்றும் வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். விற்பனையும் லாபமும் எதிர்பார்த்த படியே இருக்கும். அரசாங்கத்திடம் எதிர்பார்த்த லைசென்ஸ் போன்ற விஷயங்கள் எளிதாக முடியும். வியாபாரத்தை விரிவுபடுத்தும் எண்ணம் இருந்தால், அதற்கான முயற்சிகளில் இந்த வாரம் ஈடுபடலாம்.

கலைத்துறையைச் சேர்ந்த அன்பர்களுக்கு மறைமுக எதிர்ப்புகள் ஏற்படக்கூடும். மற்ற கலைஞர்களிடம் அனுசரனையாக நடந்துகொள்வது நல்லது. உங்களைப் பற்றிய வதந்திகள் பரவினாலும், பொருட்படுத்தாமல் பொறுமையைக் கடைப்பிடிப்பது நல்லது.

மாணவ – மாணவியர்க்கு படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும்.தேர்வுகளில் நல்ல மதிப்பெண்கள் பெறுவீர்கள். ஆசிரியர்களின் பாராட்டுகள் மனதுக்கு மகிழ்ச்சி தரும். போட்டி, பந்தயங்களில் வெற்றி பெறுவீர்கள்.

குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்மணிகளுக்கு மாதத்தின் பெரும்பகுதி மகிழ்ச்சி தருவதாக இருக்கும். கணவரிடம் எதிர்பார்த்த காரியங்கள் அனுகூலமாகும். உறவினர்களிடையே மதிப்பு மரியாதை அதிகரிக்கும். அலுவலகத்துக்குச் செல்லும் பெண்மணிகளுக்கு எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும்.

நல்ல நாள்கள்: ஜன 15,16,22,23,24,25,31, பிப் 1,2,3,6,7,11,12

சந்திராஷ்டம நாள்கள்: ஜன 26,27,28

அதிர்ஷ்ட எண்கள்: 3,4

பரிகாரம்: வியாழனன்று தட்சிணாமூர்த்தி வழிபாடும், தேய்பிறை அஷ்டமி தினத்தில் பைரவர் வழிபாடும் நலம் சேர்க்கும்.

விருச்சிகம்:

virichigam

3-ல் சூரியன். 12-ல் குரு, 12,1-ல் செவ்வாய், 2,3,4-ல் -ல் புதன், சுக்கிரன், 2-சனி, 9-ல் ராகு, 3-ல் கேது உள்ளனர்.

விருச்சிகராசி அன்பர்களே! பண வரவு திருப்தி தருவதாக இருக்கும். காரியங்கள் அனுகூலமாக முடியும். குடும்பத்தில் வசதி வாய்ப்புகள் பெருகும். வீட்டில் மகிழ்ச்சியும் நிம்மதியும் குடிகொள்ளும். பெண்களால் நன்மை உண்டாகும். புதிய ஆடை, ஆபரணங்களின் சேர்க்கை உண்டாகும். கணவன் – மனைவி இடையில் அந்நியோன்யம் அதிகரிக்கும். சகோதர வகையில் உதவிகள் கிடைக்கும். உறவினர்களால் நன்மைகள் ஏற்படும். குடும்பத் தேவைகள் ஒவ்வொன்றாக நிறைவேறும். தந்தை வழியில் எதிர்பார்த்த காரியங்கள் அனுகூலமாக முடியும். பெண்களால் நன்மை உண்டாகும். அரசாங்கக் காரியங்கள் அனுகூலமாக முடியும். பூர்விகச் சொத்துப் பிரச்னையில் பொறுமையைக் கடைப்பிடிக்கவும்.  சிலருக்கு தடைப்பட்ட திருமணம் கூடி வரும். வீட்டில் சுபநிகழ்ச்சிகள் ஏற்பாடாகும். குடும்பத்துடன் கோயில்களுக்குச் சென்று பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். வெளியூர்ப் பயணங்களின் போது கைப்பொருள்களை பத்திரமாகப் பார்த்துக்கொள்ளவும்.

அலுவலகத்தில் உற்சாகமாக செயல்படுவீர்கள். உங்கள் ஆலோசனைகள் நிர்வாகத்தினரால் ஏற்றுக்கொள்ளப்படும். மேலதிகாரிகளின் ஆதரவும் உங்களுக்குக் கிடைக்கும். சிலருக்கு பதவி உயர்வு, ஊதிய உயர்வு போன்ற சலுகைகள் கிடைப்பதற்கான வாய்ப்பு உண்டு. சக ஊழியர்களிடையே உங்கள் செல்வாக்கு அதிகரிக்கும்.

தொழில் மற்றும் வியாபாரத்தில் லாபம் அதிகமாகக் கிடைக்கும். சக போட்டியாளர்களின் மறைமுக எதிர்ப்புகளை முறியடிப்பீர்கள். பங்குதாரர்களுடன் இணக்கமான சூழ்நிலை ஏற்படும். ஆனாலும், வியாபாரத்தை விரிவுபடுத்தவோ அல்லது புதிய முதலீடு செய்வதையோ கண்டிப் பாகத் தவிர்க்கவும்.

கலைத்துறையைச் சேர்ந்த அன்பர்களுக்கு புதுப் புது வாய்ப்புகள் தேடி வரும். ஆனால், மாதப் பிற்பகுதியில் சக கலைஞர்களால் மறைமுக எதிர்ப்புகள் ஏற்படக்கூடும் என்பதால் எச்சரிக்கையாக இருக்கவும். உங்களைப் பற்றிய வதந்திகளும் பரவக்கூடும்.

மாணவ – மாணவியர்க்கு படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும். தேர்வுகளில் அதிக மதிப்பெண்கள் பெற்று ஆசிரியர் மற்றும் பெற்றோர்களின் பாராட்டுகளைப் பெறுவீர்கள். போட்டி பந்தயங்களில் கலந்துகொண்டு பரிசும் பாராட்டும் பெறுவீர்கள்.

குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்மணிகளுக்கு மகிழ்ச்சி தரும் மாதமாக இருக்கும். குடும்பத்தில் உங்கள் ஆலோசனைகள் மற்றவர்களால் ஏற்றுக்கொள்ளப்படும். உறவினர்களும் உங்களுக்கு உதவியாக இருப்பார்கள். அக்கம்பக்கத்தில் இருப்பவர்களால் அனுகூலம் உண்டாகும். வேலைக்குச் செல்லும் பெண்மணிகளுக்கு எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும்.

நல்ல நாள்: ஜன 14,17,18,19,24,25,26,27,28, பிப் 2,3,4,5,8,9,10

சந்திராஷ்டம நாள்: ஜன 29,30

அதிர்ஷ்ட எண்கள்: 7,9

பரிகாரம்: சனிக்கிழமை பெருமாளுக்கு துளசி அர்ச்சனை செய்வதுடன், செவ்வாய்க்கிழமைகளில் முருகப்பெருமானுக்கு அபிஷேகம் செய்வதும் நல்லது.

தனுசு:

dhanusu

2-ல் சூரியன், 11-ல் குரு, 11,12-ல் செவ்வாய்,  1,2,3 -ல் புதன், சுக்கிரன், 1-சனி, 8-ல் ராகு, 2-ல் கேது உள்ளனர்.

தனுசுராசி அன்பர்களே! காரியங்களில் அனுகூலம் உண்டாகும். பணப்புழக்கம் அதிகரிக்கும். குடும்பத்தில் சுபநிகழ்ச்சி நடைபெறக்கூடும். சிலருக்குப் புதிய வாகனம் வாங்கும் யோகமும் உண்டாகும். உறவினர்களாலும் நண்பர்களாலும் நன்மைகள் ஏற்படக்கூடும். கொடுத்த கடன் திரும்பக் கிடைக்கும். ஆனால், தந்தையுடன் வீண் மனஸ்தாபம் ஏற்பட வாய்ப்பு உண்டு. தந்தை வழி உறவுகளாலும் அலைச்சலும் செலவுகளும் ஏற்படக்கூடும். சிலருக்கு சிறிய அளவில் ஆரோக்கியம் பாதிக்கப்படக்கூடும். என்றாலும் சிகிச்சையின் மூலம் உடனே நிவாரணமம் கிடைத்துவிடும்.

வாழ்க்கைத்துணையால் பிரச்னைகளும் ஏற்படக்கூடும். குடும்பத்தில் வாழ்க்கைத்துணையின் ஆலோசனையைக் கேட்டுச் செயல்படுவது நல்லது. பிள்ளைகளால் தர்மசங்கடமான நிலைமைகளைச் சமாளிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படக்கூடும். மாதப் பிற்பகுதியில் மேற்கண்ட வகைகளில் நல்ல மாற்றங்களை எதிர்பார்க்கலாம். தந்தை வழியில் எதிர்பார்த்த காரியங்கள் அனுகூலமாக முடியும். அடிப்படை வசதிகளை ஏற்படுத்திக் கொள்வீர்கள். நவீன ரக மின்சார, மின்னணு சாதனங்களை வாங்கும் வாய்ப்பும் உண்டாகும். உறவினர்களால் அனுகூலம் ஏற்படும் என்றாலும், சில பிரச்னைகளும் ஏற்படக் கூடும். சகோதரிகளின் அன்பும் ஆதரவும் உங்களுக்கு மகிழ்ச்சி தரும். தாய்மாமன் வகை உறவுகளால் சில அனுகூலமான பலன்களை எதிர்பார்க்கலாம்.

அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். என்றாலும் சக ஊழியர்களின் உதவியால் உற்சாகமாகச் செய்து முடிப்பீர்கள். மேலதிகாரிகள் உங்களுக்கு அனுசரணையாக நடந்துகொள்வார்கள்.

தொழில் மற்றும் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். பற்று வரவு சுமுகமாக நடைபெறும். மறைமுகப் போட்டிகளை முறியடிப்பீர்கள். சக வியாபாரிகளுடன் இணக்கமாகப் பழகுவது நல்லது.

கலைத்துறையைச் சேர்ந்த அன்பர்களுக்கு வாய்ப்புகள் கிடைக்கும்.  அரசாங்கத்தால் கௌரவிக்கப்படுவீர்கள். படப்பிடிப்பு தொடர்பாக வெளிமாநில, வெளிநாட்டுப் பயணம் மேற்கொள்ள நேரிடலாம்.

மாணவ – மாணவியர்க்கு கஷ்டப்பட்டு படித்தால் மட்டுமே தேர்வுகளில் நல்ல மதிப்பெண்கள் பெற முடியும்.  சந்தேகங்களை அவ்வப்போது ஆசிரியர்களிடம் கேட்டுத் தெரிந்துகொள்வது நல்லது.

குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்மணிகளுக்கு சற்று சிரமங்கள் ஏற்பட்டாலும் பெரிய அளவில் பாதிப்பு எதுவும் இருக்காது. அலுவலகத்துக்குச் செல்லும் பெண்மணிகளுக்கு அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும்.

நல்ல நாள்: ஜன20,21,26,27,28,29,30, பிப் 4,5

சந்திராஷ்டம நாள்: ஜன 31, பிப் 1

அதிர்ஷ்ட எண்கள்: 4,6

பரிகாரம்: ஞாயிறு ராகு காலத்தில் சரபேஸ்வரரை வழிபடுவதும், வியாழக்கிழமைகளில் மகான்களின் அதிஷ்டானங்களுக்குச் சென்று வழிபடுவதும் நன்மை தரும்.

மகரம்:

magaram

1-ல் சூரியன், 10-ல் குரு, 10,11-ல் செவ்வாய், 12,1,2-ல் புதன், சுக்கிரன், 12-ல் சனி, 7-ல் ராகு, 1-ல் கேது உள்ளனர்.

மகரராசி அன்பர்களே! உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. அரசாங்கக் காரியங்கள் தாமதமானாலும் நல்லபடி முடியும். ஆனால், செவ்வாய் அனுகூலமாக இருப்பதால், எதிலும் வெற்றியே ஏற்படும். எதிரிகள் பணிந்து போவர். அவர்களால் மறைமுக ஆதாயமும் உண்டாகும். எதிர்பாராத பணவரவுக்கும் வாய்ப்பு உண்டு. ஆனால், மாதப் பிற்பகுதியில் சகோதரர்களுடன் சிறுசிறு கருத்துவேறுபாடு ஏற்பட்டு சரியாகும். மாதப் பிற்பகுதியில் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். புதிய முயற்சிகளில் ஈடுபடுவதைத் தவிர்க்கவும். கடன்கள் விஷயத்தில் கவனம் தேவை. மாதத்தின் பிற்பகுதியில் உறவினர்களாலும் நண்பர்களாலும் ஆதாயம் உண்டாகும். அவர்களிடம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். திடீர் அதிர்ஷ்ட வாய்ப்புகளும் ஏற்படக்கூடும். ஆனால், அஷ்டம ஸ்தானத்தில் சனி இருப்பதால்,  வாகனத்தில் செல்லும்போது எச்சரிக்கையாக இருக்கவும்.

உத்தியோகத்தில் வேலைச் சுமை அதிகரிக்கும். பணிகளில் கூடுதல் கவனம் தேவைப்படும். சிறு தவறும்கூட சிக்கலை ஏற்படுத்திவிடக்கூடும். சக பணியாளர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. எதிர்பார்த்த சலுகைகள் கிடைப்பதில் தாமதம் ஏற்படும்.

தொழில், வியாபாரத்தில் பற்று வரவில் கவனமாக இருக்கவும். பெரிய அளவில் கடன் தரவேண்டாம். பழைய பாக்கிகளைக் கறாராகப் பேசித்தான் வசூலிக்கவேண்டி இருக்கும்.

கலைத்துறையைச் சேர்ந்தவர்களுக்கு மாத முற்பகுதியில் எதிர்பார்த்த வாய்ப்புகள் கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டாலும், மாதப் பிற்பகுதியில் வாய்ப்புகள் கிடைப்பதில் சிரமம் இருக்காது. சக கலைஞர்களால் அனுகூலமான பலன்கள் ஏற்படக்கூடும்.

மாணவ மாணவியர்க்கு மாத ஆரம்பத்தில் படிப்பில் கூடுதல் கவனம் செலுத்தவேண்டும். மாதப் பிற்பகுதியில் படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும். ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களின் பாராட்டுகளைப் பெறுவீர்கள்.

குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்மணிகளுக்கு குடும்பச் சூழ்நிலை மகிழ்ச்சி தருவதாக இருக்கும்.  அலுவலகத்துக்குச் செல்லும் பெண்மணிகளுக்கு எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும்.

நல்ல நாள்கள்: ஜன 14,17,18,19,22,23,29,30,31, பிப் 1,6,7,8,9,10

சந்திராஷ்டம நாள்கள்: பிப்2,3

அதிர்ஷ்ட எண்கள்: 6,7

பரிகாரம்: வெள்ளிக்கிழமைகளில் அம்பிகைக்கு நெய்தீபம் ஏற்றி வழிபடுவதுடன் லலிதா சகஸ்ரநாமம் பாராயணம் செய்வதும் நல்லது.

கும்பம்:

kumbam

12-ல் சூரியன், 9-ல் குரு, 9,10-ல் செவ்வாய், 11,12,1-ல் புதன், சுக்கிரன், 11-சனி, 6-ல் ராகு, 12-ல் கேது உள்ளனர்.

கும்பராசி அன்பர்களே! காரியங்களில் அனுகூலம் உண்டாகும். முயற்சிகளில் வெற்றி பெறுவீர்கள். எதிர்பாராத பணவரவுக்கும் வாய்ப்பு உண்டு. முன்னேற்றத்துக்குத் தடை இருக்காது. புதிய பொருள்களின் சேர்க்கை உண்டாகும். சிலருக்கு பயணங்களும் அதன் மூலம் ஆதாயமும் ஏற்படும். புதிய ஆடை, ஆபரணங்கள் வாங்கி மகிழ்வீர்கள். ஆனால், குடும்பத்தில் அடிக்கடி வீண் விவாதம், கணவன் – மனைவிக்கு இடையில் கருத்துவேறுபாடுகள் ஏற்படக்கூடும். ஒருவரை ஒருவர் அனுசரித்துச் செல்வதன் மூலம் பாதிப்புகளைத் தவிர்க்கலாம். மாதத்தின் பிற்பகுதியில் குடும்பத்தில் மகிழ்ச்சியும் நிம்மதியும் உண்டாகும். பிள்ளைகள் வகையில் பெருமை சேரும். உறவினர்கள் வருகை மகிழ்ச்சி தரும். கேது 12 -ல் இருப்பதால் வாகனத்தில் செல்லும்போது எச்சரிக்கையாக இருக்கவும்.

உத்தியோகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். ஆனால், சக ஊழியர்கள் அனுசரனையாக நடந்து கொள்வார்கள். கூடுமானவரை உங்கள் பணிகளில் மட்டுமே கவனம் செலுத்தவும். உயர் அதிகாரிகளுடன் பேசும்போது பொறுமையைக் கடைப்பிடிக்கவும்.

தொழில், வியாபாரம் விறுவிறுப்பாக இருக்கும். போட்டிகளால் ஏற்பட்ட நெருக்கடிகள் குறையும். ஆனாலும்,. சக வியாபாரிகளால் மறைமுக எதிர்ப்புகளைச் சந்திக்க வேண்டி வரும். வீண் அலைச்சலும் அதனால் மனச் சோர்வும் உடல் அசதியும் உண்டாகும்.

வியாபாரத்தை முன்னிட்டு வெளியூர்ப் பயணங்கள் மேற்கொள்ள நேரிடும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் அதிகரிக்கும்.

கலைத்துறையைச் சேர்ந்த அன்பர்கள் தங்களுக்குக் கிடைத்த வாய்ப்புகளை கவனமாகப் பயன் படுத்திக் கொள்வது அவசியம். மாதப் பிற்பகுதியில் புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். முயற்சிகளில் இருந்த தடை, தாமதங்கள் நீங்கும்.

மாணவ – மாணவியர் படிப்பில் கூடுதல் கவனம் செலுத்தவேண்டியது மிகவும் அவசியம். கஷ்டப்பட்டு படித்தால்தான் நல்ல மதிப்பெண்கள் பெறமுடியும். சந்தேகங்களை ஆசிரியர்களிடம் உடனுக்குடன் கேட்டுத் தெளிவு பெறுவது நல்லது.

குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்மணிகள் குடும்பத்தில் அனைவரையும் அனுசரித்துச் செல்வது நல்லது. மாதப் பிற்பகுதியில் அக்கம்பக்கத்தில் இருப்பவர்களின் ஒத்துழைப்பு மனதுக்கு உற்சாகம் தரும். வேலைக்குச் செல்லும் பெண்மணிகள் அலுவலகத்தில் தங்கள் பொறுப்புகளில் கவனமாக இருப்பது மிகவும் அவசியம்.

நல்ல நாள்: ஜன 14,15,16,20,21,24,25,31, பிப் 1,2,3,8,9,10,11,12

சந்திராஷ்டம நாள்: 4,5

அதிர்ஷ்ட எண்கள்: 1,9

பரிகாரம்: ஞாயிற்றுக்கிழமைகளில் சூரியவழிபாடும், ராகுகால வேளையில் சரபேஸ்வரர் வழிபாடும் நல்ல பலன்களைத் தரும்.

மீனம்:

meenam

11-ல் சூரியன், 8-ல் குரு, 8,9-ல் செவ்வாய், 10,11,12-ல் புதன், சுக்கிரன், 10-ல் சனி, 5-ல் ராகு, 11-ல் கேது உள்ளனர்.

மீனராசி அன்பர்களே! குடும்பத்தில் மகிழ்ச்சியும் உற்சாகமும் காணப்படும். எதிரிகளின் சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள். வெளிவட்டாரத்தில் செல்வாக்கு அதிகரிக்கும். உறவினர்களும் நண்பர்களும் மிகவும் உதவியாக இருப்பார்கள். சிலருக்குக் குழந்தை பாக்கியம் கிடைக்கும். மாதப் பிற்பகுதியில் உறவினர்கள் வகையில் சிறுசிறு பிரச்னைகள் ஏற்பட சாத்தியம் உள்ளதால், பொறுமையுடன் இருப்பது மிகவும் அவசியம். கேது சாதகமாக இல்லாத காரணத்தினால் கணவன் – மனைவிக்கு இடையில் சிறுசிறு கருத்துவேறுபாடுகள் ஏற்படக்கூடும். ஒருவரை ஒருவர் அனுசரித்துச் செல்வது நல்லது. புதிய ஆடை, ஆபரணங்கள் வாங்கி மகிழ்வீர்கள். குடும்பத்துடன் வெளியிடங்களுக்குச் சென்று வருவீர்கள். விருந்து விசேஷங்களில் கலந்துகொள்ளும் வாய்ப்பு உண்டு. மாதத்தின் பிற்பகுதியில் எதிரிகளால் பிரச்னைகளும், கடன் தொல்லைகளும் ஏற்படக்கூடும். ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக்கும். சிலருக்கு வெளியூர், வெளி மாநிலப் புண்ணியத் தலங்களுக்குச் சென்று வரும் வாய்ப்பு உண்டாகும். குடும்பப் பெரியவர்களின் அறிவுரையின்படி நடந்துகொண்டு, அவர்களின் ஆதரவைப் பெறுவீர்கள்.சிலருக்குக் குலதெய்வ வழிபாடு செய்யும் வாய்ப்பு உண்டாகும்.

அலுவலகத்தில் சக ஊழியர்களிடம் செல்வாக்கு அதிகரிக்கும். பணிகளில் அவர்களின் ஒத்துழைப்பும் கிடைக்கும். நீண்டநாள்களாக எதிர்பார்த்த பதவி உயர்வு, சம்பள உயர்வு போன்ற சலுகைகள் கிடைக்கும். மேலதிகாரிகளின் அன்பும் ஆதரவும் உங்களை உற்சாகப்படுத்தும். அலுவலகத்தில் உங்களுடைய எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும்.

தொழில், வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். எதிரிகளால் ஏற்பட்ட பிரச்னைகள் நீங்கும். புதிய முயற்சிகள் வெற்றி தரும். வியாபாரத்தை விரிவுபடுத்தும் எண்ணம் இருந்தால், அதற்கான முயற்சிகளில் இந்த மாதம் ஈடுபடலாம்.

கலைத்துறையைச் சேர்ந்த அன்பர்களுக்கு புதுப் புது வாய்ப்புகள் கதவைத் தட்டும். பெரிய நிறுவனங்களுடன் ஒப்பந்தம் கையெழுத்தாகும். படைப்புகள் பெரும் வரவேற்பு பெறும். பொது நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு கௌரவிக்கப்படுவீர்கள். படப்பிடிப்பு தொடர்பாக சிலருக்கு வெளியூர் அல்லது வெளிநாடு செல்லும் வாய்ப்பு ஏற்படும்.

மாணவ மாணவியர்க்கு கல்வியில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். தேர்வுகளில் அதிக மதிப்பெண்கள் பெற்று, ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களின் பாராட்டுகள் கிடைக்கும். போட்டி பந்தயங்களில் வெற்றி கிடைக்கும்.

குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்மணிகளுக்கு உறவினர்களிடையே மதிப்பு மரியாதை அதிகரிக்கும். தோழியர்கள் வட்டாரத்தில் உங்கள் செயல்பாடுகள் பாராட்டப்படும். பணிக்குச் செல்லும் பெண்மணிகளுக்கு, அலுவலகத்தில் புதிய பொறுப்புகள் கிடைக்கும்.

நல்ல நாள்: ஜன 15,16,17,18,19,22,23,26,27,28, பிப் 2,3,4,5,11,12

சந்திராஷ்டம நாள்: பிப் 6,7

அதிர்ஷ்ட எண்கள்: 2,7

பரிகாரம்: செவ்வாயன்று முருகனுக்கு செவ்வரளிப்பூக்களால் அர்ச்சனை செய்வதும், துர்கைக்கு நெய்தீபம் ஏற்றுவதும் நன்மை தரும்.

தினப்பலன், வார பலன், மாத ராசி பலன் என அனைத்து விதமான ஜோதிட பலன்கள் மற்றும் ஆன்மீகம் சார்ந்த பதிவுகளை உடனுக்குடன் பெற தெய்வீகம் மொபைல் APP – ஐ டவுன்லோட் செய்துகொள்ளுங்கள்.

- Advertisement -
SOURCEvikatan