நாளை தை முதல் வெள்ளிக்கிழமை! இந்த ஒரு விளக்கை வீட்டில் ஏற்றி வைத்தால் போதும். பொன், பொருள், பணம், பெயர், புகழ் எல்லாம் ஒன்றன்பின் ஒன்றாக வீட்டிற்குள் போட்டி போட்டுக் கொண்டு வரும்.

mahalakshmi-vilakku
- Advertisement -

சுக்கிர யோகம் கிடைத்து விட்டால் போதும். வாழ்க்கையில் எல்லா செல்வங்களும் ஒரு சேர ஒன்றன்பின் ஒன்றாக போட்டி போட்டு வீடு தேடி வந்துவிடும். ஆனால் எல்லோருக்கும் இந்த சுக்கிர யோகம் அவ்வளவு எளிதில் கிடைத்து விடாது. சில பேருக்கு பிறப்பிலேயே சுக்கிர யோகம் இருக்கும். அழகு, அறிவு, திறமை, பிரபல்யம், வீடு, வாகனம், பணம், ஆடை, ஆபரணங்கள் என்று எல்லாம் அவர்களுக்கு தேவைக்கு அதிகமாகவே கிடைத்திருக்கும். சில பேருக்கு சுக்கிர யோகம் என்பது எளிதில் கிடைக்காது. இப்படிப்பட்டவர்கள் எல்லாம் வாழ்க்கையில் சுகமாக நல்ல வாழ்க்கையை வாழ முடியாமல் பணம் காசுக்கு கஷ்டப்பட்டு வருவார்கள்.

இப்படி சுக்கிர யோகம் கிடைக்காமல், மகாலட்சுமியின் ஆசீர்வாதத்தை பெற முடியாதவர்களெல்லாம் நாளை இந்த வழிபாட்டை செய்வதன் மூலம் சுக்கிரன் பகவானின் ஆசிர்வாதத்தையும் மகாலட்சுமி தேவியின் ஆசிர்வாதத்தையும் முழுமையாக பெற முடியும். நாளைய தினம் எளிமையான முறையில் தை வெள்ளிக்கிழமை வழிபாட்டை எப்படி மேற்கொள்வது என்பதை பற்றிய ஆன்மீகம் சார்ந்த பதிவு இதோ உங்களுக்காக.

- Advertisement -

தை வெள்ளி மகாலட்சுமிக்கு ஏற்ற வேண்டிய விளக்கு:
சுக்கிர பகவானுக்கு உரிய உலோகம் வெள்ளி. சுக்கிர பகவானுக்கு உரிய தானியம் மொச்சை. மகாலட்சுமிக்கு உரிய பொருள் ஏலக்காய். அதேபோல வெள்ளை நிற மல்லிகைப்பூ வாசம் நிறைந்தது, இதுவும் சுக்கிர பகவானுக்கும் மகாலட்சுமிக்கு உரியதுதான். இந்த பொருட்கள் எல்லாம் நாளை பூஜைக்கு தேவை. இதில் உங்களுடைய வீட்டில் எது இருக்கிறதோ அதை பயன்படுத்திக் கொள்ளுங்கள். கிடைக்காத பொருளை நினைத்து கவலைப்பட வேண்டாம்.

நாளைய தினம் காலை 6 மணிக்கு இந்த பூஜையை உங்களுடைய வீட்டில் செய்ய வேண்டும். பூஜை அறையை பூக்களால் அலங்காரம் செய்து விட்டு, வெள்ளி விளக்கில் நெய் ஊற்றி, திரி போட்டு தீபம் ஏற்றி வைத்துவிட்டு, மொச்சை சுண்டல் நெய்வேதியமாக செய்து வைக்க வேண்டும். முடியாதவர்கள் பசும்பால் சேர்த்து வெள்ளை நிறத்தில் பால் பாயாசம் செய்யலாம். மகாலட்சுமிக்கு  ஏலக்காய் மாலை உங்கள் கையாலேயே கட்டி போட்டு, உங்களுக்கு இருக்கக்கூடிய பணக்கஷ்டம் மனக்கஷ்டம் எல்லாம் தீர வேண்டும் என்று மனதார பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள்.

- Advertisement -

சில பேர் வீட்டில் வெள்ளி விளக்கு இருக்காது. பரவாயில்லை, பித்தளை காமாட்சியம்மன் விளக்குக்கு உள்ளே ஒரு வெள்ளி நாணயத்தை போட்டு ஏற்றலாம். வெள்ளி நாணயமும் உங்கள் வீட்டில் இல்லை என்றால் உங்களிடம் இருக்கும் வெள்ளி மோதிரமாக இருந்தாலும் சரி அதை நன்றாக சுத்தம் செய்துவிட்டு அதை மகாலட்சுமி தாயார் பாதங்களில் வைத்து பூஜை செய்வது சிறப்பு.

இது எதுவுமே உங்களால் முடியாது என்றால் மகாலட்சுமிக்கு உரிய பொருளாக சொல்லப்படுவது கல் உப்பு. ஒரு பாத்திரத்தின் மேலே கல்லுப்பை பரப்பி அதன் மேலே மண் அகல் விளக்கு வைத்து நெய் ஊற்றி திரி போட்டு இந்த கல்லுப்பு தீபத்தை நாளை வீட்டில் ஏற்றுவது மிக மிக அற்புதமான பலனை கொடுக்கும். இப்படி பூஜை அறையில் உங்களால் எந்த விளக்கு ஏற்ற முடியுமோ அதை ஏற்றி வைத்துவிட்டு, கற்பூர ஆரத்தி காண்பித்து பூஜையை நிறைவு செய்து கொள்ளுங்கள். பிரசாதத்தை வீட்டில் இருப்பவர்கள் அனைவரும் சாப்பிடுங்கள்.

இதையும் படிக்கலாமே: குடும்பத்தில் எப்போதும் சண்டை, சச்சரவாக இருக்கிறதா? உடனே இதை மட்டும் தவறாமல் செய்து பாருங்கள். அப்புறம் ஒற்றுமைக்கு எடுத்துக்காட்டே உங்க குடும்பமாகத் தான் இருக்கும்.

வழிபாடு என்பது ஆத்மார்த்தமாக செய்ய வேண்டிய ஒரு விஷயம். ஆகவே மேல் சொன்ன வழிபாட்டை பின்பற்ற முடியும் என்பவர்கள் பின்பற்றலாம். எதுவுமே செய்ய முடியாது வேலைக்கு செல்ல வேண்டும் நேரம் இல்லை என்பவர்கள் காலையில் எழுந்து மகாலட்சுமிக்கு உங்களால் முடிந்த பூக்களை சூட்டி, ஒரே ஒரு விளக்கு ஏற்றி வைத்துவிட்டு, மனதார கஷ்டங்கள் தீர வேண்டும் என்ற பிரார்த்தனை செய்து கொண்டாலும், அந்த மகாலட்சுமியின் ஆசீர்வாதமும் சுத்திர பகவானின் ஆசீர்வாதமும் ஒரு சேர கிடைக்கும். நாளைய தின வழிபாட்டை மேற்கொள்வதற்கு அனைவருக்கும் ஒரு சந்தர்ப்பத்தை அந்த மகாலட்சுமி தாய் ஏற்படுத்தி தர வேண்டும் என்று பிரார்த்தனை செய்து இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்

- Advertisement -