குடும்பத்தில் எப்போதும் சண்டை, சச்சரவாக இருக்கிறதா? உடனே இதை மட்டும் தவறாமல் செய்து பாருங்கள். அப்புறம் ஒற்றுமைக்கு எடுத்துக்காட்டே உங்க குடும்பமாகத் தான் இருக்கும்.

- Advertisement -

இந்த கணவன் மனைவி உறவு என்பது அதிக முக்கியத்துவம் கொடுத்து வாழ வேண்டிய உறவு. இந்த உறவு சரியாக அமைந்து விட்டால் போதும் வாழ்க்கை என்பது சொர்க்கமாக மாறி விடும். அப்படியான இந்த வாழ்க்கை எல்லோருக்கும் சரியான முறையில் அமைவதில்லை. சிலருக்கு எப்போதும் சண்டை, சச்சரவுடனே இருக்கும் இன்னும் சில இடங்களில் பிரிந்தே வாழ்வார்கள். இதையெல்லாம் சரி செய்ய இந்த எளிய பரிகாரத்தை செய்து தீர்வு காணலாம் என்று சாஸ்திரத்தில் கூறப்படுகிறது. அது என்னவென்று இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் தெளிவாக தெரிந்து கொள்ளலாம்.

கணவன், மனைவி உறவு என்பது இருவருக்கும் உண்டான உறவு மட்டுமில்லை. இது குழந்தை, குடும்பம், சமுதாயம் என அனைத்தையும் ஒன்று சேர்க்கும் பொறுப்பும், கடமையும் உடைய உறவு. இந்த உறவை எந்த அளவிற்கு நாம் அனுசரித்து, விட்டுக் கொடுத்து வாழ்கிறோமோ, அந்த அளவிற்கு இந்த உறவானது நமக்கு மகிழ்ச்சியும், சந்தோஷத்தையும் தரும். இதை கணவன், மனைவி இருவருமே உணர்ந்து பிரச்சனைகளை மனம் விட்டு பேசி சரி செய்து கொள்ள முன் வர வேண்டும்.

- Advertisement -

அதையும் மீறி சில நேரங்களில் வேறு சில சந்தர்ப்பங்களாலோ, கிரக மாற்றங்களால் கூட இருவருக்குள்ளும் ஏதாவது பிரச்சனைகள் தோன்றி கொண்டே இருக்கும். அதை சரி செய்ய இந்த எளிய பரிகாரத்தை செய்தால் நல்ல பலன் கிடைக்கும் என்று சொல்லப்படுகிறது. அது என்னவென்று பார்க்கலாம்.

இந்த பரிகாரத்திற்கு தேவையானது மஞ்சள், பன்னீர், பசு நெய், பஞ்சு திரி இவை மட்டும் தான். இந்த பரிகாரத்தை எப்படி செய்வது என்பதையும் பார்த்து விடலாம்.

- Advertisement -

கணவன் மனைவி ஒற்றுமையாக இருக்க பரிகாரம்
இந்த பரிகாரத்தை காலை 7:00 மணிக்குள் செய்து விட வேண்டும். காலை சீக்கிரம் எழுந்து குளித்து முடித்து சுத்த பத்தமாக உங்கள் பூஜை அறையில் அன்றைய தின பூஜைகளை முடித்த பிறகு, பூஜை அறையிலேயே இந்த பரிகாரத்தை செய்ய வேண்டும். முதலில் மஞ்சளை பன்னீர் ஊற்றி கெட்டியாக குழைத்துக் கொள்ள வேண்டும்.

இந்த மஞ்சளை மா விளக்கு போல செய்து அதில் நெய் ஊற்றி இரண்டு பஞ்சுத் திரிகளை ஒன்றாக சேர்த்து போட்டு, பெருமாள் படத்திற்கு (லஷ்மி நாராயணர் படமாக இருந்தால் நல்லது) முன்பாக ஒரு தீபம் ஏற்ற வேண்டும். இந்த தீபத்தை 48 நாட்கள் தொடர்ந்து ஏற்ற வேண்டும். மஞ்சளை தினமும் புதிதாக குழைத்து தான் ஏற்ற வேண்டும். பழைய மஞ்சளை சேகரித்து வைத்துக் கடைசியாக இதை யாரும் கால் படாத இடத்தில், போட்டு விடுங்கள்.

- Advertisement -

48 நாட்கள் இதைத் தொடர்ந்து செய்யும் போது குடும்பத்திற்குள் எந்த சண்டை, சச்சரவும் வராமல் இருக்க வேண்டும் என்றும், தங்களுக்குள் இருக்கும் மன வேறுபாடுகள் நீங்க வேண்டும் என்றும் மனதார வேண்டிக் கொண்டு ஏற்ற வேண்டும். இந்த தீபத்தை கணவன், மனைவி யார் வேண்டுமானாலும் ஏற்றலாம். இந்த தீபமானதை தொடர்ந்து ஏற்றி வரும் போது இருவருக்குள்ளும் மனம் ஒற்றுமை அதிகரித்து குடும்பம் என்றென்றும் குதுகலாமாக இருக்கும்.

இதையும் படிக்கலாமே: பெண்கள் அம்மா வீட்டில் இருந்து இந்த பொருளை மட்டும் தெரியாமல் கூட எடுத்துட்டு போகவே கூடாதாம் தெரியுமா?

இந்த எளிய பரிகாரத்தை செய்து கணவன், மனைவி இருவருக்குள்ளும் இருக்கும் மனக் கசக்பை எல்லாம் நீக்கி நல்லதொரு அமைதியான சந்தோஷமான வாழ்க்கையை வாழ எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக் கொள்வோம்.

- Advertisement -