உடம்பு வலி, தலைவலி 2 நிமிடத்தில் காற்றில் பஞ்சாய் பறக்க தைலத்தை இந்த இடத்தில் தேய்க்க மறந்து விடாதீர்கள்! பாட்டி காலத்து வைத்தியம்.

- Advertisement -

உடல் வலி, தலைவலி என்று அடிக்கடி சோர்ந்து போய் விடுபவர்கள், ஒரு நாளில் உடல் உழைப்பை அதிகம் கொடுத்து உடல் சோர்வு அடைபவர்கள் உடம்பில் இருக்கும் வலி மற்றும் தலைவலி போன்றவை காற்றில் பஞ்சாய் பறக்க தைலத்தை பரபரவென தேய்ப்பதை வழக்கமாகக் கொண்டிருப்பார்கள். அடிக்கடி தைலத்தை தடவி வந்தால் நாளடைவில் அது இல்லாமல் தூக்கமே வராது என்பது போன்ற நிலை ஏற்பட்டு விடும். இதுவும் ஒரு அடிக்சன் போன்றது தான். தலைவலி மற்றும் உடல் வலி இரண்டு நிமிடத்தில் இருந்த இடம் தெரியாமல் போவதற்கு பாட்டி சொன்ன வைத்தியம் என்ன? என்கிற ரகசியத்தை தான் இந்த பதிவின் மூலம் நீங்கள் தெரிந்து கொள்ள இருக்கிறீர்கள்.

அடிக்கடி உடல் வலியால் அவதிப்படுபவர்கள் இந்த மர்மமான இடங்களில் தைலத்தை தேய்த்துப் பாருங்கள். கொஞ்சம் கூட சோர்வு இல்லாமல் நிம்மதியான, நல்ல ஆழ்ந்த ஒரு தூக்கம் நிச்சயம் வந்துவிடும். அந்த அளவிற்கு அற்புதமான இந்த குறிப்புகள் அக்காலத்தில் நம் முன்னோர்கள் பயன்படுத்தி வந்தது ஆகும். சிலருக்கு இந்த விஷயம் தெரிந்திருக்கலாம், பலருக்கு தெரியாமல் இருக்கலாம். தெரியாதவர்கள் இனி தெரிந்து கொள்ளுங்கள்.

- Advertisement -

தலைவலிக்கு தைலம் தடவுபவர்கள் நெற்றி பகுதியில் அழுத்தம் கொடுக்காமல் முதலில் இரண்டு முனைகளிலும் ஆள்காட்டி விரலை அழுத்தி கையை எடுக்காமல் தேய்க்க வேண்டும். இரண்டு புறமும் தேய்த்து முடித்த பிறகு நடுவில் இருக்கும் மூன்று விரல்களால் அப்படியே நெற்றி முழுவதும் தடவி வாருங்கள். பின்னர் ஆள்காட்டி விரலால் இரு புருவத்திற்கு மத்தியில் தைலத்தை வைத்து லேசாக முன்னும், பின்னுமாக தேய்க்க வேண்டும்.

இடமிருந்து வலமாக பத்து முறையும், வலம் இருந்து இடமாக பத்து முறையும் தேய்த்தால் தலைவலி எல்லாம் பஞ்சாய் பறக்கும். அதன் பிறகு உடல் முழுவதும் இருக்கும் வலியை நீக்கி, உடல் சோர்வை முற்றிலுமாக போக்க வைக்க கூடிய இந்த மர்மமான இடங்களில் கொஞ்சம் தைலத்தை எடுத்து இப்படி தேய்க்க வேண்டும். முதலில் இரு முழங்கையின் உட்புறம் அதாவது கையை மடக்கும் இடத்தில் நன்கு தேய்க்க வேண்டும். இதில் இருக்கும் நரம்புகள் வழியாக தைலத்தில் இருக்கும் உஷ்ணம் உள்ளே சென்று உடல் வலியை வெகுவாக குறைத்து விடுகிறது.

- Advertisement -

இரண்டு முழங்கையின் உட்புறத்திலும் நன்கு மாறி மாறி சிறிது நேரம் நன்கு தேய்த்து விடுங்கள். பிறகு அதே போல முழங்கால்களின் உட்புறத்தில் அதாவது முழங்காலின் பின்புற பகுதியில் இதே போல சிறிதளவு தைலத்தை எடுத்து நன்கு அழுத்தி தேய்க்க வேண்டும். அங்கு இருக்கும் நரம்புகள் வழியாக கால் வலி, கை வலி, முதுகு வலி, இடுப்பு வலி போன்ற எல்லா வலியும் நீங்கி மொத்த உடலையும் வலி இல்லாமல், சோர்வு இல்லாமல் நிம்மதியான உறக்கத்தை வர வைக்கும் அற்புதமான மருந்தாக செயல்படுகிறது.

இவ்விடங்களில் இருக்கும் மர்ம புள்ளிகள் நொடியில் உடற்சோர்வை நீக்கிவிடும் அதிசயத்தை நிகழ்த்துகிறது. அது மட்டுமல்லாமல் உள்ளங்கால் பகுதியிலும் சிறிதளவு தைலத்தை தேய்த்து விட உடனே தூங்கி விடுவீர்கள். இது குழந்தைகளுக்கு இன்னும் நல்லதொரு பலனை கொடுக்கும். முயற்சி பண்ணி பாருங்க, உடல் வலிய போக்குங்க!

- Advertisement -