இந்த 2 பொருட்களை இப்படி பயன்படுத்தினால் முடி வளர்ச்சி அபரிமிதமாக இருக்கும் தெரியுமா? முகப்பருக்களையும் ஓட ஓட விரட்டி அடித்து விடும்!

long-hair-skin
- Advertisement -

ஒரு சில பொருட்கள் ஒரு சில தன்மைகளை கொண்டிருக்கும். இதை சரியாக உபயோகிப்பதன் மூலம் நாம் அதில் இருக்கக்கூடிய நற்பலன்களை பெற்றுக் கொள்ளலாம். அந்த வகையில் அபரிமிதமான முடி வளர்ச்சியை ஏற்படுத்தக்கூடிய தன்மை இந்த இரண்டு பொருட்களுக்கு உண்டு! அது மட்டுமல்லாமல் முகத்தில் ஒரு முகப்பரு கூட இல்லாமல் ஓட ஓட விரட்டி அடித்து விடும் ஆற்றலும் இதற்கு உண்டு. ஒரே குறிப்பில் தலைமுடி மற்றும் சரும பிரச்சனையை எப்படி தீர்க்க போகிறோம்? என்பதை தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள இருக்கிறோம்.

இந்த ரெண்டு பொருட்கள் ரொம்பவே குளிர்ச்சி நிறைந்துள்ள பொருளாக இருக்கின்றது. ஆஸ்துமா, சைனஸ் போன்ற பிரச்சினைகள் இருப்பவர்கள் சற்று எச்சரிக்கையுடன் இதை கையாள வேண்டும். உடலில் இருக்கக்கூடிய உஷ்ணம் சரிசமமான நிலையில் இல்லை இல்லாத பொழுது நமக்கு பலவிதமான பிரச்சனைகள் படை எடுக்க ஆரம்பிக்கும். குறிப்பாக சருமம் வறண்டு போய் முகப்பருக்கள் அதிகரிக்க ஆரம்பிக்கிறது. நீர் சத்து குறைவாக இருந்தால் உடலில் வறட்சி உண்டாகிறது. இதனால் ரத்த ஓட்டம் சீராக இல்லாமல் முடி வளர்ச்சியும் தடைபடுகிறது.

- Advertisement -

தலைமுடியின் வளர்ச்சியை தூண்டி விடக் கூடிய அற்புதமான ஆற்றல் இப்பொருட்களுக்கு உண்டு. அதில் முக்கியமான பொருள் ‘வெந்தயம்’. இந்த வெந்தயம் என்னும் பொருள் அருமருந்துக்கு இணையாக இருக்கக் கூடியது ‘தயிர்’. தயிர் மற்றும் வெந்தயத்தை சேர்த்து அரைத்து பயன்படுத்தும் பொழுது தலைமுடியின் வளர்ச்சி அபரிமிதமாக இருக்கும்.

ரெண்டு ஸ்பூன் வெந்தயத்தை மிக்ஸியில் போட்டுக் கொள்ளுங்கள். அதனுடன் ரெண்டு ஸ்பூன் கெட்டியாக இருக்கும் தயிரை சேர்த்து நன்கு நைசாக அரைத்துக் கொள்ளுங்கள். பேஸ்ட் போல இருக்கும் இதை உச்சந்தலையில் நன்கு தடவி பின்னர் முடியின் நுனி பகுதி வரை எல்லா இடங்களிலும் பூசிக் கொள்ள வேண்டும்.

- Advertisement -

பின்னர் தலைமுடியை வாரி கட்டிக் கொள்ளுங்கள். இதை அப்படியே பத்து நிமிடம் விட்டுவிட்டு சாதாரண ஷாம்புவால் தலைக்கு அலசி வந்தால் தலைமுடியின் வளர்ச்சியில் இருந்து வந்த அத்தனை தடைகளும் அகன்று அசுர வேகத்தில் முடி வளர்வதை நீங்கள் பார்க்கலாம். இது குளிர்ச்சி பொருந்தியது என்பதால் நீண்ட நேரம் அப்படியே இல்லாமல் நன்கு வெயிலில் தலை முடியை காய வைத்துக் கொள்ளுங்கள்.

இதே பேஸ்டை நீங்கள் முகம் மற்றும் கழுத்து பகுதிகளில் தடவி அரை மணி நேரம் உலர விட்டு பின்னர் குளிர்ந்த நீரினால் துடைத்து எடுத்தால் முகம் பட்டு போல பளபளன்னு மின்ன ஆரம்பிக்கும். முகத்தில் இருக்கும் முகப்பருக்கள் விரைவாகவே மறைய ஆரம்பித்து விடும். வெயிலினால் ஏற்படும் கருமை மற்றும் வெண்புள்ளி, கரும்புள்ளி போன்றவையும் இதன் மூலம் அகன்று விடும். முகம் முழுவதும் மேடு பள்ளங்கள் இல்லாமல் முக துவாரங்கள் இறுகி இளமையான தோற்றத்தை கொடுக்கக் கூடிய இந்த அற்புதமான குறிப்பை நீங்களும் பயன்படுத்தி பயனடையலாமே!

- Advertisement -