கட்டுக்கட்டாய் உங்கள் கையில் பணம் சேர வேண்டும் என்ற ஆசை உள்ளதா? இந்த பூஜையை நம்பிக்கையோடு செய்து பாருங்கள்!

lakshmi-lotus
- Advertisement -

கட்டுக்கட்டாக பணத்தை சேர்க்க வேண்டும் என்ற ஆசை கட்டாயம் எல்லோரிடத்திலும் உண்டு. பணத்தை விரும்பாதவர்கள் இந்த உலகத்தில் நிச்சயமாக யாருமே இருக்க முடியாது. அப்படிப்பட்ட பணத்தை கஷ்டப்பட்டு சம்பாதிப்பதை விட, இஷ்டப்பட்டு சம்பாதிக்க வேண்டும். மனதார இஷ்டப்பட்டு நாம் செய்யக்கூடிய எந்த காரியமும் தோல்வி அடைந்ததாக சரித்திரமே கிடையாது. சரி, உங்களுடைய வீட்டில் உங்களுடைய தேவைக்கு ஏற்ப, உங்கள் தேவைகளைப் பூர்த்தி செய்துகொள்ள, கடன் வாங்காமல் வாழ்க்கையை நடத்தி செல்ல வேண்டும் என்றால் சுலபமான முறையில் மகாலட்சுமி வழிபாடு எப்படி செய்யலாம் என்பதைப் பற்றித்தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

மகாலட்சுமி வழிபாட்டிற்கு, இந்த பூஜையை செய்ய நமக்கு தேவையான பூ தாமரைப்பூ. கட்டாயம் தாமரைப்பூ தான் தேவை. வியாழக்கிழமை அன்று இந்த தாமரைப் பூவை வாங்கி உங்களுடைய வீட்டில் வைத்துக்கொள்ளுங்கள். வெள்ளிக்கிழமை காலை 6 மணிக்கு இந்த பூஜையை வீட்டில் தொடங்கி விட வேண்டும்.

- Advertisement -

வெள்ளிக்கிழமை அன்று காலையிலேயே வீட்டிலிருக்கும் பெண் எழுந்து சுத்தபத்தமாக குளித்துவிட வேண்டும். கட்டாயம் மஞ்சள் பூசி குளிக்க வேண்டும். குங்குமப் பொட்டும், தலையில் வாசனை நிறைந்த பூவும், கையில் வளையலும் இருப்பது மிகவும் சிறப்பு. முடிந்தால் மருதாணியை கையில் இட்டுக் கொள்ளுங்கள். மகாலட்சுமி அம்சத்தோடு பெண் இருக்க வேண்டும்.

women8

பூஜை அறையில் கட்டாயம் ஒரு நெய் தீபம் ஏற்றி வைத்துக் கொள்ளவேண்டும். பூஜை அறையில்  அமர்ந்து கொள்ளுங்கள். உங்களுடைய இரண்டு உள்ளங்கைகளையும் சேர்த்து வைத்து, உள்ளங்கைகளில் தாமரை பூவை வைத்துவிடுங்கள். மகாலக்ஷ்மியை மனதார நினைத்து ‘ஓம் ஸ்ரீம் மகாலட்சுமி தாயே போற்றி’ என்ற மந்திரத்தை 108 முறை உச்சரிக்க வேண்டும். மந்திரத்தை உச்சரிக்கும்போது தாமரைப்பூ உங்கள் உள்ளங்கைகளில் இருக்கவேண்டும். நம்முடைய கைகளில் இருக்கும் ஐந்து விரல்களில், பஞ்ச பூதங்களின் சக்தி அடங்கியுள்ளது.

- Advertisement -

பஞ்சபூதங்களின் சக்தியும், நீங்கள் உச்சரிக்கக் கூடிய மந்திரத்தின் சக்தியும் ஒன்றாக சேர்ந்து, நேர்மறை ஆற்றலை வெளிப்படுத்த தொடங்கும். மந்திரத்தை உச்சரித்த பின்பு உங்களுடைய கோரிக்கையை மகாலட்சுமி தாயாரிடம் சொல்லி, பண கஷ்டம் வரக்கூடாது என்று மனதார பிரார்த்தனை செய்து கொள்ள வேண்டும். மந்திரத்தை உச்சரித்து வேண்டுதலை இறைவனிடம் சொல்லி கையில் இருக்கும் தாமரையை மகாலட்சுமி தாயாரின் திருவுருவப் படத்திற்கு முன்பு வைத்து விடுங்கள். இறுதியாக தீப தூப ஆராதனை காட்டி உங்களுடைய பூஜையை நிறைவு செய்து கொள்ளலாம்.

lotus

வாரம்தோறும் வெள்ளிக்கிழமை மட்டும் இந்த பூஜையை செய்தால் போதும். உங்களுடைய வீட்டில் வறுமை இருக்காது. கடன் சுமைக்கு படிப்படியாக தீர்வு கிடைக்கும். வருமானம் படிப்படியாக அதிகரிக்கும். கடன் படிப்படியாக குறையும். எத்தனை வெள்ளிக்கிழமை இந்த பூஜையை செய்வது. அது உங்களுடைய விருப்பம் தான். வாழ்நாள் முழுவதும் மகாலட்சுமியை நினைத்து இந்த பூஜையை செய்து வருவதன் மூலம் வாழ்க்கையில் பணக்கஷ்டம் என்பதே வராது என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -