பிரிந்து விடலாம் என்ற எண்ணம் கொண்ட கணவனும் மனைவியும் நரசிம்மரை இப்படி வழிபட்டால் அந்த எண்ணம் மாறி ஒற்றுமையுடன், சந்தோஷமாக வாழ்வார்கள்.

lakshmi narasimhar couple
- Advertisement -

திருமணம் என்பது ஆயிரம் காலத்து பயிர் என்று நம் முன்னோர்கள் கூறியிருக்கிறார்கள். அது எல்லாம் அவர்கள் காலத்தோடு முடிந்து விட்டது. இப்பொழுது அது ஒரு மாதமோ, இரண்டு மாதமோ, ஒரு வருடமோ, இரண்டு வருடமோ என்று ஆகிவிட்டது. திருமணமான சில மாதங்களிலேயே பிரிந்து விடலாம் என்று முடிவெடுத்து விவாகரத்து வரை செல்லக்கூடிய தம்பதியினர் பலர் இருக்கிறார்கள். அப்படி பிரிந்து விடலாம் என்று இருக்கும் தம்பதிகள் நரசிம்மரை எப்படி வழிபட்டால் அவர்கள் எண்ணம் மாறி ஒற்றுமையுடனும், சந்தோஷத்துடன் வாழ்வார்கள் என்று தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் பார்க்க போகிறோம்.

காதல் திருமணமாக இருந்தாலும், பெற்றவர்கள் பார்த்து வைத்த திருமணம் ஆக இருந்தாலும் அதன் ஆயுட்காலம் இன்றைய காலகட்டத்தில் மிகவும் குறைவாகவே இருக்கிறது. இதற்கு புரிதல் இன்மை தான் காரணம் என்று ஒருபுறம் நினைத்தாலும், சகிப்புத்தன்மை இல்லாமல் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து வாழாமல் இருப்பதும் ஒரு காரணம் தான். இவை அனைத்தும் இருந்தும் அவர்களால் ஒன்றாக சேர்ந்து வாழ முடிய வில்லை என்னும் சமயத்தில் அவர்கள் நரசிம்மரை வழிபடுவதன் மூலம் அவர்களுக்குரிய பிரச்சினைகள் தீர்ந்து சுகமுடன் வாழ்வார்கள்.

- Advertisement -

தம்பதிகளின் ஒற்றுமைக்கு யோக நரசிம்மரையோ அல்லது லஷ்மி நரசிம்மரையோ வழிபட வேண்டும். செவ்வாய்க்கிழமை அல்லது வெள்ளிக்கிழமையில் கணவனும் மனைவியும் ஒன்றாக சேர்ந்து நரசிம்மர் கோவிலுக்கு சென்று அவரை வழிபட வேண்டும். தங்கள் இருவரின் பெயரில் அவருக்கு அர்ச்சனை செய்ய வேண்டும். பிறகு தங்களால் இயன்ற அளவு அபிஷேகத்திற்காக பொருட்களை வாங்கி தர வேண்டும்.

லஷ்மி சமேதமாக இருக்கும் நரசிம்மருக்கு தாமரை பூ மாலை சூட்ட வேண்டும். பிறகு கணவனும், மனைவியும் தனித்தனியாக ஏழு நெய் தீபங்களை லட்சுமி நரசிம்மருக்கு ஏற்றி வழிபட வேண்டும். பிறகு அவருக்கு சர்க்கரை பொங்கலை நெய்வேத்தியமாக படைத்து கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்க வேண்டும்.

- Advertisement -

இவ்வாறு தொடர்ந்து 12 வாரங்கள் கணவனும், மனைவியும் ஒன்றாக சேர்ந்து லஷ்மி நரசிம்மரை வழிபடுவதன் மூலம் அவர்களின் மனதில் இருக்கக்கூடிய பிரிவு என்ற எண்ணம் மாறி ஒற்றுமையுடனும் சந்தோஷத்துடனும் தங்களின் அடுத்த கட்ட வாழ்க்கையை நோக்கி தங்கள் வாழ்க்கை பயணத்தை மேற்கொள்வார்கள்.

இதையும் படிக்கலாமே: வாழ்வில் பல நல்ல மாற்றங்களை அடைய சொர்ண ஆகர்ஷண பைரவருக்கு இந்த இலையால் அர்ச்சனை செய்து வழிபட்டு பாருங்கள். நினைத்துப் பார்க்க முடியாத அளவிற்கு உங்கள் வாழ்க்கை மாறிவிடும்.

லக்ஷ்மி ப்ரியராக இருக்கக்கூடிய லட்சுமி நரசிம்மரை கணவனும் மனைவியும் தொடர்ந்து வழிபட்டு வருவதன் மூலம் அவர்களைப் போல ஒற்றுமையுடன் வாழ்வதற்கு லட்சுமி நரசிம்மர் அருள்புரிவார்.

- Advertisement -