வாழ்வில் பல நல்ல மாற்றங்களை அடைய சொர்ண ஆகர்ஷண பைரவருக்கு இந்த இலையால் அர்ச்சனை செய்து வழிபட்டு பாருங்கள். நினைத்துப் பார்க்க முடியாத அளவிற்கு உங்கள் வாழ்க்கை மாறிவிடும்.

bhairavar archanai valipadu
- Advertisement -

காலத்தின் சுழற்சிக்கு ஏற்றவாறு நம் ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் நன்மைகளும் தீமைகளும் மாறி மாறி தான் வரும். யாருடைய வாழ்க்கையிலும் நன்மைகள் மட்டுமே நடைபெறாது. அதேபோல் தான் யாருடைய வாழ்க்கையிலும் தீமைகள் மட்டுமே இருக்காது. இரண்டும் மாறி மாறி வருவது தான் வாழ்க்கை. ஆனாலும் சில பேருக்கு தீமைகள் என்பது தடைகளாகவும், தடங்கல்களாவும், கடன் பிரச்சினை குடும்ப பிரச்சினை என்று பல விதங்களில் தொடர்ந்து வந்து கொண்டே இருக்கும். அந்த காலத்தை மாற்றக்கூடிய வல்லமை படைத்த காலபைரவருக்கு நாம் எதை வைத்து அர்ச்சனை செய்து வழிபட்டால் நம்முடைய கெட்ட காலத்தை நல்ல காலமாக மாற்றுவார் என்று தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்கப் போகிறோம்.

நாம் கூப்பிட்ட குரலுக்கு வந்து நமக்கு உதவி செய்து நம்முடைய கெட்ட காலத்தையும் நல்ல காலமாக மாற்றக்கூடிய வல்லமை படைத்தவரே கால பைரவர். இவர் சிவனின் அம்சமாக கருதப்படுவதால் அனைத்து சிவாலயங்களிலும் இவர் வீற்றிருப்பார். காவல் தெய்வமாக கருதப்படும் இந்த கால பைரவரை நாம் வணங்கினோம் என்றால் கெட்டதில் இருந்து நம்மை காப்பாற்றி நமக்கு நன்மையை மட்டுமே அருள்வார்,

- Advertisement -

கால பைரவரிடம் நாம் சரணாகதி அடைந்து அவரை தேடி, அவரை விரும்பி நாம் சென்றோம் என்றால் அவர் நம்மை தேடி நம் இல்லத்திற்கே ஏதாவது ஒரு ரூபத்தில் வந்துவிடுவார். இந்த வழிபாட்டை நாம் ஆலயங்களில் செய்யாமல் நம் இல்லத்தில் தான் செய்ய வேண்டும். இந்த வழிபாட்டிற்கு நமக்கு சொர்ண ஆகர்ஷண பைரவரின் புகைப்படம் தேவைப்படும். பைரவருக்குரிய தினமான அஷ்டமி தினத்தில் அதுவும் வளர்பிறை அஷ்டமி தினத்தில் சொர்ண ஆகர்ஷண பைரவரின் புகைப்படத்தை வீட்டிற்கு வாங்கி வர வேண்டும்.

நாட்டு மருந்து கடையில் ஜவ்வாது, புனுகு மற்றும் நயம் சாம்ராணி இவை மூன்றையும் வாங்கி வந்து ஒன்றாக கலந்து கொள்ள வேண்டும். இதை பயன்படுத்தி தான் நாம் ஸ்வர்ண ஆகர்ஷண பைரவருக்கு பொட்டு வைக்க வேண்டும். அவருக்குப் பிடித்த செவ்வரளி பூவை மாலையாக சூட்ட வேண்டும். பிறகு நாம் சமையலுக்கு உபயோகப்படுத்த கூடிய இலையான கருவேப்பிலையை வைத்து பைரவருக்கு அர்ச்சனை செய்ய வேண்டும். அவ்வாறு அர்ச்சனை செய்யும் பொழுது பைரவரின் அஷ்டோத்திரத்தை கூறி அர்ச்சனை செய்ய வேண்டும்.

- Advertisement -

இவ்வாறு நாம் நம் இல்லத்தில் அவருக்கு அர்ச்சனை செய்வதன் மூலம் நாம் இல்லத்தில் இருக்கக்கூடிய வாஸ்து குறைபாடுகள் நீங்கும். செல்வ செழிப்பு மேலோங்கும். எதிரிகளால் நமக்கு ஏற்பட்ட தொல்லைகள் அனைத்தும் விலகும். நல்ல பல மாற்றங்கள் நம் வாழ்வில் நிகழ்வதை நாம் கண்கூடாக பார்க்க முடியும்.

இதையும் படிக்கலாமே: நாளை வெள்ளிக்கிழமை அம்மன் கோவிலுக்கு சென்று இதை கொடுத்து வழிபாடு செய்து பாருங்கள். விரைவிலேயே உங்கள் இல்லத்தில் குழந்தை சத்தம் கேட்கும்.

ஒவ்வொரு வளர்பிறை அஷ்டமி தினத்தன்று நம்பிக்கையுடன் நாம் இந்த அர்ச்சனையை அஷ்டோத்திரம் படித்துக்கொண்டே செய்து வந்தால் நம் வாழ்வில் எண்ணிலடங்காத நல்ல மாற்றங்களை ஸ்வர்ண ஆகர்ஷண பைரவர் அருள்வார்.

- Advertisement -