கணவனும் மனைவியும் சேர்ந்து பூஜையறையில் இதை மட்டும் செய்தால் போதும். வீட்டில் செல்வ கடாட்சம் நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே செல்லும். வீட்டில் சந்தோஷம் பொங்கி வழியும்.

husbund-and-wife
- Advertisement -

கணவனும் மனைவியும் ஒன்றாக சேர்ந்து மனநிறைவோடு திருப்தியோடு எந்த ஒரு விஷயத்தை நினைத்தாலும் சரி அது உடனே நடக்கும். தம்பதிகளாக இறைவனிடம் வைக்கும் வேண்டுதலுக்கு உடனே பலன் உண்டு. கருத்து வேறுபாடுகள் இல்லாத, ஒருவரை ஒருவர் புரிந்து கொண்ட தம்பதிகள் வீட்டில் இருந்தால், நிச்சயமாக அந்த வீடு கோவிலாகத்தான் இருக்கும். அந்த வரிசையில் தம்பதியாக இருந்து வீட்டில் இந்த ஒரு பூஜையை மட்டும் செய்தால் போதும். வீட்டில் இருக்கும் வறுமை நீங்கும். குடும்பத்தில் சந்தோஷம் பொங்கி வழியும். சண்டை சச்சரவுகள் குறையும். குடும்பத்தில் லட்சுமி கடாட்சம் நிறையும். வாழையடி வாழையாக குடும்பம் தழைத்தோங்கும்.

poojai1

நம்முடைய இல்லற வாழ்க்கையை இன்னும் இனிமையாக மாற்றப் போகும் அந்த பூஜையை பற்றிய விரிவான விளக்கம் உங்களுக்காக இதோ. வெள்ளிக்கிழமை அன்று இந்த பூஜையை உங்களுடைய வீட்டில் செய்ய வேண்டும். இந்த பூஜைக்கு நமக்கு தேவையான பொருட்கள் 2. மருதாணி விதை, லவங்கம். மருதாணி விதை ஒரு கைப்பிடி அளவு எடுத்துக் கொள்ளுங்கள். லவங்கம் 11 என்ற கணக்கில் எடுத்துக்கொண்டால் போதும்.

- Advertisement -

எப்போதும் போல வெள்ளிக்கிழமை அன்று உங்கள் வீட்டு பூஜை அறையை எப்படி அலங்காரம் செய்வீர்களோ அப்படி அலங்காரம் செய்து வைத்துக்கொள்ள வேண்டும். தீபங்களை ஏற்றி வைத்து விடவேண்டும். வாசம் மிகுந்த தூபம் கட்டாயம் இருக்க வேண்டும். அதன் பின்பு கணவனும் மனைவியும் பூஜை அறையில் இறைவனை பார்த்தவாறு அமர்ந்து கொள்ள வேண்டும்.

marudhani-vidai

மனைவி தன்னுடைய வலது உள்ளங் கைகளில் மருதாணி விதைகளை வைத்துக் கொள்ள வேண்டும். கணவர் தன்னுடைய உள்ளங்கைகளில் 11 கிராம்பை எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும். அதன் பின்பு கணவன் மனைவி இருவரும் ஒன்றாக 27 முறை ‘ஸ்ரீ ஓம்’ என்ற மந்திரத்தை உச்சரிக்க வேண்டும். அடுத்தபடியாக மனைவி கையில் வைத்திருக்கும் மருதாணி விதையும், கணவர் கையில் வைத்திருக்கும் கிராம்பையும் ஒரு வெள்ளை துணியில் போட்டு சிறிய முடிச்சாக கட்டி பூஜை அறையில் வைத்து விட வேண்டும்.

- Advertisement -

அடுத்தபடியாக தம்பதியாக அமர்ந்திருக்கும் கணவன் மனைவி இருவரும் மனதார தங்கள் குடும்பத்தில் இருக்கும் கஷ்டங்கள் தீர வேண்டும் என்று குல தெய்வத்தையும் இஷ்ட தெய்வத்தையும் மனதார பிரார்த்தனை செய்து கொள்ள வேண்டும். இறுதியாக சுவாமிக்கு தீப ஆராதனை காட்டி, தம்பதிகளாக இறைவனிடம் நமஸ்காரம் செய்து பூஜையை நிறைவு செய்து கொள்ளுங்கள்.

lavangam

பூஜை அறையில் வைத்திருக்கும் வெள்ளை முடிச்சை எடுத்து பூஜை அறையில் இருக்கும் அலமாரியில் அல்லது வேறு ஏதாவது ஒரு இடத்திலோ பத்திரப்படுத்தி வைத்துக் கொள்ளலாம். ஒரு மாதம் அந்த முடிச்சு உங்களுடைய வீட்டில் அப்படியே இருக்கட்டும். ஒரு மாதம் முடிந்தவுடன் இந்த முடிச்சின் உள்ளே இருக்கும் பொருட்களை நெருப்பில் போட்டு விட வேண்டும்.

neruppu

வீட்டிலேயே, அதாவது கொல்லைப்புறம், வாசல், மொட்டைமாடி இப்படி வீட்டின் வெளிப்பக்கத்தில், கொட்டாங்குச்சியை எரித்து நெருப்பு மூட்டி அந்த நெருப்பில் இந்த இரண்டு பொருட்களையும் போட்டு விடலாம். துணியோடு எரிக்க கூடாது. உள்ளே இருக்கும் பொருட்களை எடுத்து அந்த நெருப்பில் போட வேண்டும்.

vellai-mudichu

மீண்டும் ஒரு வெள்ளிக்கிழமை அன்று இதே போல ஒரு முடிச்சை தயார் செய்து வைத்து விட்டு, 30 நாட்கள் கழித்து அந்த முடிச்சில் இருக்கும் பொருட்களை நெருப்பில் போட்டுப் பொசுக்க வேண்டும். இப்படியாக மூன்று மாதங்கள் உங்களுடைய வீட்டில் மேல் சொன்ன முறைப்படி பூஜை செய்து வந்தால் நிச்சயமாக வீட்டில் நல்ல மாற்றங்கள் தெரியும். சந்தோஷமே இல்லாத குடும்பம் கூட மன மகிழ்ச்சியோடு சந்தோஷம் நிறைந்த குடும்பமாக மாறும். உங்களுக்கு நம்பிக்கை இருந்தால் இந்த பூஜையை உங்கள் வீட்டிலும் செய்து பலனடையலாம்.

- Advertisement -