என்ன செய்தாலும் கணவன் மனைவிக்கு இடையே இருக்கும் வெறுப்பு போக மாட்டேன் என்கிறதா? தம்பதியர் ஒற்றுமைக்கு வீட்டில் ஏற்ற வேண்டிய எளிய தீபம் என்ன?

sivan-parvathi-vilakku
- Advertisement -

கணவன் மனைவிக்கு இடையே ஒற்றுமை எப்போதும் இருந்து கொண்டே இருக்கும் என்று கூறி விட முடியாது. மனிதனாகப் பிறந்த ஒவ்வொருவருக்கும் தனித்துவம் உண்டு, எனவே ஒருவருக்கு இருக்கும் கருத்து இன்னொருவருக்கு ஏற்றதாக இருப்பதில்லை! ஒருமித்த கருத்துடன் இருக்கக்கூடிய கணவன், மனைவிகள் குறைவு என்று கூறலாம். எனவே ஒருவருக்கு ஒருவர் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், அதை அனுசரித்து விட்டுக் கொடுத்து செல்வது தான் தாம்பத்திய வாழ்க்கை!

வெறுப்பை ஒருமுறை வளர்த்துக் கொண்டால் அதை மீண்டும் சரிசெய்வது என்பது சிரமமாகி விடும். இதனால் வாழ்க்கை என்பதே ஒரு கட்டத்தில் நரகமாக போய்விடும். கணவன் மனைவிக்கு இடையே இருக்கும் இந்த வெறுப்பை நீக்கக் கூடிய அபூர்வ சக்தி இந்த இலைக்கு உண்டு. அது என்ன? வீட்டில் தம்பதியர் ஒற்றுமைக்கு ஏற்ற வேண்டிய விளக்கு என்ன? என்பதைத் தான் இந்த பதிவின் மூலம் நாம் அறிந்து கொள்ள இருக்கிறோம்.

- Advertisement -

தம்பதியர் ஒற்றுமைக்கு நாம் எந்த வகையிலும் பரிகாரம் தேடுவது என்பது ஒரு பகுதி தான். இருவரில் யாராவது ஒருவராவது மற்றவர்களைப் புரிந்து கொள்ள முயற்சி செய்வது ஒன்றே இதற்கு நிரந்தரத் தீர்வாக இருக்க முடியும். அப்படி நீங்கள் உங்கள் துணையுடன் கருத்து வேறுபாடு இல்லாமல், வெறுப்பு இல்லாமல், மனதில் இருக்கும் வெறுப்பையும் நீக்கி, மீண்டும் ஒருவரை ஒருவர் அன்போடு புரிந்து கொண்டு வாழ வேண்டும் என்று நினைத்தால், வீட்டில் இந்த தீபத்தை நம்பிக்கையோடு இறை சிந்தனையோடு ஏற்றி பாருங்கள்.

தொடர்ந்து ஒன்பது வாரம் இந்த தீபம் சிவபெருமானுக்கு ஏற்ற வேண்டும். சிவனும், பார்வதியும் இணைந்த படம் உங்களிடம் இருந்தால் அதை வைத்துக் கொள்ளுங்கள். அப்படி உங்களிடம் அப்படம் இல்லை என்றால் சிவனுடைய படம் அல்லது லிங்கம் வைத்தும் பூஜிக்கலாம். சிவ-பார்வதி தம்பதியாராக இருக்கும் படத்திற்கு வில்வ இலைகளால் மாலை கோர்த்து சாற்ற வேண்டும். வில்வ இலை மாலை சாற்றினால் சிவனருள் கிடைக்கும் என்பது எல்லோரும் அறிந்த ஒன்று தான்.

- Advertisement -

அபூர்வமாக கிடைக்கக்கூடிய இந்த வில்வ இலை தம்பதியர் ஒற்றுமைக்கு சிறந்த பரிகார இலை ஆகவும் இருக்கிறது. எனவே வில்வ இலை மாலை சாற்றி, சிவனுக்கு முன்பு சுத்தமான பசும் பால் ஒரு டம்ளர் நைவேத்தியமாக வைத்துக் கொள்ளுங்கள். பின்னர் வாழை இலை அல்லது ஏதாவது பித்தளை அல்லது செம்பு தாம்பூலம் வைத்து அதன் மீது இரண்டு மண் அகல் விளக்குகளை வையுங்கள். மண் அகல் விளக்குகள் வைத்ததும் அதில் நல்லெண்ணெய் அல்லது நெய் ஊற்றி வாழைத்தண்டு திரி போட்டு தீபம் ஏற்ற வேண்டும்.

வாழைத்தண்டு திரி இல்லை என்றால் தாமரை தண்டு திரி அல்லது மஞ்சள் நிற பஞ்சுத் திரி போட்டுத் தீபம் ஏற்றலாம். இதை தம்பதியராக செய்ய வேண்டிய பரிகாரமாக இருந்தாலும், இதை யாராவது ஒருவர் செய்தாலும் நலம் தான். ஒன்பது வாரம் தொடர்ந்து ஒவ்வொரு திங்கட் கிழமையிலும் இது போல வில்வ இலை கண்டிப்பாக சாற்றி, அகல் விளக்கு தீபமேற்றி, மனதார சிவபெருமானை சிவ மந்திரங்கள் உச்சரித்து வழிபட்டு வந்தால் நீங்களும் தம்பதியர் ஒற்றுமையுடன் வெறுப்புகளை கலைந்து மீண்டும் அன்போடு ஒன்றினைவீர்கள்.

- Advertisement -