தங்க நகைகள் அடகு செல்லாமல் இருக்கவும், மென்மேலும் தங்கம் பெருகவும் செய்யக்கூடிய எளிய பரிகாரம் தான் என்ன?

gold-lakshmi
- Advertisement -

பொதுவாக செல்வம் என்றால் பணம், காசு மட்டுமல்லாமல் நகைகள், நவரத்தினங்களையும் சேர்த்து தான் குறிக்கின்றன. குடும்பத்தில் பணம், காசு இருந்தால் மட்டும் போதாது! நகைகளும் தாராளமாக சேர வேண்டும். சொத்துக்கள் பணமாக ஒருவருடைய கைகளில் இருப்பதை விட நகையாக இருந்தால் கொஞ்ச காலத்திலேயே இரட்டிப்பு பலனை கொடுக்கும் என்பது அனைவருக்கும் தெரிந்தது தான். தங்கம் விற்கும் விலைக்கு இருக்கின்ற தங்க நகைகளை அடகு போகாமல் பார்த்துக் கொள்வது பெரிய விஷயம் என்றாலும், தங்க நகை மென்மேலும் நம்மிடம் சேரக் கூடிய எளிய பரிகாரம் தான் இது. அனைவரும் செய்யக்கூடிய இந்த சூட்சம எளிய பரிகாரத்தை நீங்களும் இதே போல செய்து பாருங்கள், நிச்சயம் உங்களிடமும் தங்க நகைகள் கொஞ்சம் கொஞ்சமாக சேர ஆரம்பிக்கும். அப்படி நாம் என்னதான் செய்ய வேண்டும்? என்பதை தெரிந்து கொள்ள தொடர்ந்து இந்த பதிவை நோக்கிப் பயணியுங்கள்.

mahalakshmi1

தங்கம், வெள்ளி, வைரம் எல்லாம் மகாலட்சுமி ஆனவள் எங்கு நிறைந்து இருக்கிறாளோ அங்கு மட்டுமே தொடர்ந்து சேர்ந்து கொண்டே இருக்கும். மற்ற இடங்களில் நீங்கள் என்னதான் காசு கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து தங்க நகை வாங்கினாலும் அதை கொஞ்ச காலம் கூட உங்களால் போட்டு பார்த்து அழகு பார்க்க முடியாமல் போய்விடும். வாங்கிய சிறு தங்கம் கூட நம் உடம்பில் தங்காமல் அடிக்கடி அடகு போவதும் அல்லது விற்கப்படுவதும் தொடர்ந்து உங்களுக்கு நிகழ்ந்து கொண்டிருந்தால் மகாலட்சுமி ஆனவள் உங்கள் இல்லத்தில் நிரந்தரமாக வாசம் தரவில்லை என்பது அர்த்தம்.

- Advertisement -

தங்கம் இருக்கும் இடத்தில் நிச்சயம் மகாலட்சுமி இருப்பாள் எனவே உங்கள் வீட்டிலும் மகாலட்சுமியை நிரந்தரமாக தங்க செய்ய, தங்கம் மென்மேலும் பெருக தொடர்ந்து ஒவ்வொரு வெள்ளிக் கிழமையிலும் இதை செய்து பாருங்கள். எல்லோரும் செய்யக்கூடிய இந்த எளிய பரிகாரத்தை எளிமையான முறையில் நீங்களும் செய்யலாம்.

gold

உங்களிடம் இருக்கும் ஒரு சிறு மோதிரம் அல்லது ஏதாவது ஒரு குண்டுமணி தங்கத்தை மஞ்சள் மற்றும் உப்பு கலந்த தண்ணீரில் முதலில் போட்டு எடுத்துக் கொள்ளுங்கள். இவ்வாறு செய்வதன் மூலம் தங்க தோஷம் இருப்பவர்களுக்கு அத்தோஷம் விலகும் என்பது நியதி. பிறகு உங்களுடைய நகையை நீங்கள் நகை வைக்கும் பீரோவின் லாக்கர் பகுதியில் ஒரு சிறிய சிகப்பு நிற பட்டுத் துணியை விரித்து கொள்ளுங்கள். சிகப்பு நிற பட்டு துணிக்கு நகையை தக்க வைத்துக் கொள்ளும் தன்மை உண்டு.

- Advertisement -

பின்னர் உங்கள் நகையை அதன் மீது வைத்து அதனுடன் சிறு துண்டு பச்சை கற்பூரம் சேர்த்துக் கொள்ளுங்கள். பொதுவாக பச்சை கற்பூரம் பணத்தை ஈர்த்து தரும் என்பது நியதி. எனவே நகை வைக்கும் இடங்களிலும் பச்சை கற்பூரத்தை சேர்ப்பது அவை மென்மேலும் பெருக வைக்கும் என்பதில் எள்ளவும் சந்தேகம் இல்லை. மகாலட்சுமி தாயார் நிறைந்து இருக்கும் துளசி இலைகளை அதனுடன் சேர்த்து வைக்க வேண்டும் என்பது தான் முக்கிய குறிப்பாகும்.

karunthulasi2

துளசி செடியை தென்மேற்கு திசையில் வைக்க வேண்டும். தென்மேற்கு திசையில் இருந்து எடுக்கப்பட்ட துளசி இலைகளை வாரம் தோறும் வெள்ளிக்கிழமையில் நீங்கள் நகையுடன் இவ்வாறு சேர்த்து வைக்க தங்க நகைகள் தகதகவென மென்மேலும் உங்களிடம் பெருகும். இதில் எந்த பொருட்களையும் நாம் எடுத்து மாற்ற வேண்டிய அவசியம் இல்லை. துளசி இலைகளை மட்டும் வாரம் தோறும் காய்ந்த பின்பு நீங்கள் மாற்றினால் போதும். இந்த நகையை அணிய விரும்பினால் இதற்கு பதிலாக வேறு ஒரு நகையை அந்த இடத்தில் வைத்துக் கொள்ளலாம்.

- Advertisement -