இதை தவறாமல் செய்யும் பெண்களிடம் தங்கம் சேர்ந்து கொண்டே இருக்கும். நீங்களே தடுத்தாலும் தங்கம் வாங்கும் யோகம் உங்களை தேடி வரும்.

- Advertisement -

நகை வேண்டாம் என்று சொல்லும் பெண்கள் இனி பிறந்து தான் வர வேண்டும். அந்த அளவிற்கு நகையின் மீது பெண்களுக்கு ஈர்ப்பு அதிகம். அப்படியானால் ஆண்களுக்கு நகை மேல் விருப்பம் இல்லையா? என்று கேட்டு விடாதீர்கள். ஆண்களை விட பெண்களுக்கு அதிகம். இப்படி நகை சேர வேண்டும் என்று ஆசைப்பட்டால் மட்டும் போதாது. அதற்கான உழைப்பையும், முயற்சியும் செய்ய வேண்டும். அத்துடன் சேர்த்து இந்த ஒரு தானத்தை செய்தால் தங்கமானது உங்களை தேடி வரும். அது என்ன தானம் எப்படி செய்வது என்பதை பற்றி எல்லாம் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

தங்க நகை சேர வேண்டும் என்று நினைக்கும் பெண்கள் இனிப்பு தானம் செய்ய வேண்டும். ஒவ்வொரு தானத்திற்கும் ஒவ்வொரு பலன் உண்டு. அதை போல இந்த இனிப்பு தானம் நகை சேரும் வாய்ப்பை தேடி தரும். கையில் பணம் இருந்தால் மட்டும் நகைகளை வாங்கி விட முடியாது, வாங்கிய நகைகளையும் நாம் நினைக்கும் போதெல்லாம் அணிந்து கொள்ள முடியாது. தங்கத்தை பொருத்தவரையில் யோகம் இருந்தால் மட்டுமே தங்கத்தை சேர்க்கவும் வாங்கவும் முடியும். அந்த யோகத்தை இந்த தானம் தரும்.

- Advertisement -

இனிப்பு தானம் என்றவுடன் நீங்கள் கடைகளில் வாங்கி கொடுக்கும் நினைப்பு வகைகள் என்று நினைத்துக் விடாதீர்கள். இந்த பரிகாரத்திற்கு பாசிப் பருப்பு வெல்லம் சேர்த்த பாயாசத்தை தான் தானமாக கொடுக்க வேண்டும். எந்த நாளில் எப்படி இதை தானமாக கொடுக்க வேண்டும் என்று அதற்கும் சில நேரம் காலம் உண்டு.

வீட்டில் தங்கம் சேர செய்ய வேண்டியது
இந்த பாசிப்பருப்பு, வெல்லம் சேர்த்த பாயாச தானத்தை வியாழக்கிழமைகளில் தான் செய்ய வேண்டும். வியாழக்கிழமை நாளில் பாசிப்பருப்பையும், வெள்ளைத்தையும் சேர்த்து நெய் ஊற்றி பாயாசம் வைத்துக் கொள்ளுங்கள. தானமாக கொடுப்பது தானே எப்படி வேண்டுமானாலும் செய்யலாம் என்ற எண்ணத்துடன் செய்யக்கூடாது. இதன் சுவை சாப்பிடுபவர்கள் மனதும் வயிறும் நிறையும்படி இருக்க வேண்டும்.

- Advertisement -

வியாழக்கிழமை மாலை இந்த பாயசத்தை செய்து உங்கள் வீட்டு பூஜை அறையில் வைத்து பூஜை செய்த பிறகு, உங்கள் வீட்டின் அருகில் இருக்கும் ஏதாவது ஒரு அம்மன் கோவிலுக்கு மாலை 6 மணிக்குள் சென்று கோவிலுக்கு வருபவர்களுக்கு பாயாசத்தை தானமாக கொடுக்க வேண்டும். இது எத்தனை வாரம் தான் கொடுக்க வேண்டும் என்று கணக்கு எதுவும் கிடைக்காது. உங்களால் முடியும் வரை செய்யலாம். இந்த தானம் செய்ய செய்ய உங்களுக்கு நகை சேரும் பாக்கியம் கூடிக் கொண்டே தான் இருக்கும்.

இதையும் படிக்கலாமே: யாருடைய கைகளில் பணம் புழங்கிக் கொண்டே இருக்கும் தெரியுமா? நீங்க இப்படி செய்தால் உங்க கையிலும் மகாலட்சுமி வந்து சம்மணம் போட்டு உட்கார்ந்து விடுவாளாம்!

இதை படித்தவுடன் எதையும் செய்யாமல் தானம் மட்டும் செய்தல் நகை சேருமா என்ற கேள்வி ஏழும். முதலில் கூறியதை போல தான், ஆன்மிகத்தில் சில விஷயங்களை செய்யும் போது நாம் அதை வாங்க அல்லது செய்வதற்கான யோகத்தை நமக்கு உருவாக்கி தரும். இந்த ஆன்மிக பதிவில் நகை சேர செய்ய வேண்டியது குறித்து உங்களுக்கு தெரிந்து இருக்கும். உங்களின் முயற்சியுடன் இந்த தானம் செய்து புன்னியத்தோடு, நகை சேர்க்கும் வாய்ப்பையையும் மஹாலஷ்மி தாயார் அருளுவார்.

- Advertisement -