தங்க நகைகள் சேர பரிகாரம்

thangam sera
- Advertisement -

அங்கம் முழுவதும் தங்கத்தை அணிந்து கொள்ள வேண்டும் என்று ஆசைப்படும் பெண்கள் பலர் இருக்கிறார்கள். அந்த ஆசையை நிறைவேற்றும் அளவிற்கு வசதி படைத்தவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். அதேசமயம் ஒரு குண்டுமணி அளவு கூட தங்கம் இல்லை என்று வருத்தப்படுபவர்களும் இருக்கிறார்கள். எந்த சூழ்நிலையாக இருந்தாலும் ஒரு பெண்ணிடம் எந்த அளவிற்கு தங்கம் இருக்கிறதோ அந்த அளவிற்கு அந்த பெண்ணின் மதிப்பு அதிகரிக்கும் என்றுதான் கூற வேண்டும்.

அது மட்டுமல்லாமல் பெண் குழந்தைகள் வைத்திருக்கும் பெண்கள் தங்கள் குழந்தைகளின் திருமணத்திற்காக தங்கத்தை சேர்க்க வேண்டும் என்று ஆசைப்படுவார்கள். அப்படி தங்கத்தை சேர்ப்பதற்காக எடுக்கக்கூடிய முயற்சிகள் வெற்றி அடையவும் அதிக அளவில் தங்கத்தை சேர்க்கவும் வெள்ளிக்கிழமை அன்று எந்த தீப வழிபாட்டை செய்ய வேண்டும் என்றுதான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

- Advertisement -

நவகிரகங்களின் அருள் இருந்தால்தான் நமக்கு நன்மைகள் நடைபெறும் என்பது நம் அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான். தங்கம் சேர வேண்டும் என்று ஆசைப்படுபவர்களுக்கு சுக்கிர பகவான் மற்றும் குரு பகவானின் அருள் பரிபூரணமாக வேண்டும். இவர்களின் அருள் பரிபூரணமாக இருந்தாலும் மகாலட்சுமி தாயாரின் அருட்பார்வை நம் மீது பட்டால் தான் நமக்கு செல்வ செழிப்பிற்கு எந்தவித குறையும் இருக்காது. அப்படி மகாலட்சுமி தாயாரின் அருளை பரிபூரணமாக பெறவேண்டும் என்று நினைப்பவர்கள் வெள்ளிக்கிழமை தோறும் மகாலட்சுமி தாயாக வழிபாடு செய்வார்கள்.

தங்கத்தை சேர்ப்பதற்கும் நாம் வெள்ளிக்கிழமையில் தான் தேர்வு செய்ய வேண்டும். வெள்ளிக்கிழமை அன்று காலையில் சுக்கிர பகவானின் அருளை பெறுவதற்காக சுக்கிர ஹோரையில் இந்த பரிகாரத்தை செய்ய வேண்டும். இந்த பரிகாரத்தை செய்வதற்கு நமக்கு சுத்தமான இரண்டு அகல் விளக்குகள் தேவைப்படும். முதலில் வெள்ளிக்கிழமை அன்று காலையில் எப்பொழுதும் போல் பூஜைகளை நிறைவு செய்த பிறகு சுக்கிர ஹோரைக்குள் மூன்று வெற்றிலைகளை எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

அதில் ஒரு கொட்டை பாக்கை வைத்துக் கொள்ளுங்கள். பிறகு ஒரு சுத்தமான அகல் விளக்கை எடுத்து அதில் ஒரு கைப்பிடி அளவு கல் உப்பை போட வேண்டும். அந்த கல் உப்பிற்கு மேல் நம்மிடம் இருக்கக்கூடிய ஏதாவது ஒரு சிறிய அளவிலான தங்கத்தை வைக்க வேண்டும். அடுத்ததாக அதே வெற்றிலைக்கு பக்கத்தில் நவ தானியங்களை பரப்பி அதற்கு மேல் ஒரு அகல் விளக்கை வைத்து சுத்தமான பசு நெய் ஊற்றி மஞ்சள் நிற திரியை பயன்படுத்த வேண்டும்.

இந்த மஞ்சள் திரியை நாம் கடையில் அப்படியே வாங்காமல் நம் வீட்டில் இருக்கக்கூடிய சுத்தமான மஞ்சளை போட்டு அதில் பன்னீரை சேர்த்து நன்றாக குழைத்து கொள்ள வேண்டும். பிறகு அதில் பஞ்சுத்திரியை போட்டு ஊறவைத்து பிறகு உலர்த்தி எடுக்க வேண்டும். இப்படி தயார் செய்த மஞ்சள் திரியை பயன்படுத்தி ஏற்றினால் தான் குரு பகவானின் அருள் முழுமையாக கிடைக்கும்.

- Advertisement -

இப்படி தீபம் ஏற்றிய பிறகு நம்முடைய குலதெய்வத்தை மனதார நினைத்து வழிபாடு செய்து அதிக அளவில் தங்கம் சேர வேண்டும் என்று மனதார வழிபாடு செய்து விட்டு நம்முடைய மோதிர விரலால் உப்பில் இருக்கக் கூடிய தங்கத்தை தொட்டு வணங்கிக் கொள்ள வேண்டும். பிறகு கற்பூர தீப தூப ஆராதனை காட்டி இந்த வழிபாட்டை நிறைவு செய்து கொள்ள வேண்டும்.

இதையும் படிக்கலாமே: மனக் கவலைகளை போக்கும் தீபம்.

இந்த முறையில் ஒவ்வொரு வார வெள்ளிக்கிழமை இந்த முறையில் நாம் பூஜை செய்து வந்தால் படிப்படியாக நம் வீட்டில் தங்கம் சேருவதை நம்மால் உணர முடியும்.

- Advertisement -