மனக் கவலைகளை போக்கும் தீபம்.

mana kavalai
- Advertisement -

அனைத்து தெய்வ வழிபாடுகளிலும் மிகவும் முக்கியமான ஒன்றாக திகழ்வதுதான் மன ஒருமைப்பாடு. மனதை ஒருநிலைப்படுத்தி வழிபாட்டை செய்ய வேண்டும் என்று தான் அனைத்து மதத்திலும் கூறப்படுகிறது. அந்த அளவிற்கு மனதிற்கு மிகவும் முக்கியமான பங்கு கொடுக்கப்படுகிறது. அது மட்டுமல்லாமல் மனம் திடமாக இருந்தால் தான் எப்பேர்பட்ட கவலையாக இருந்தாலும் அதை சமாளித்து அதில் இருந்து நம்மால் வெளியில் வர முடியும். மனம் சரியில்லாத நேரத்தில் நம்மால் எந்த செயலையும் செய்யவும் முடியாது எந்த முடிவையும் எடுக்கவும் முடியாது. அவ்வளவு சக்தி வாய்ந்த மனதை பாடாய்படுத்தக்கூடிய கவலைகளை நீக்குவதற்கு சிவபெருமானை நினைத்து ஏற்றக்கூடிய தீபத்தை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

மனதில் பல விஷயங்களை நினைத்து கவலைப்பட்டுக் கொண்டு எந்த செயலிலும் நாட்டம் இல்லாமல் இருப்பவர்கள் பலர் இருக்கிறார்கள். அப்படிப்பட்டவர்கள் மனதை பக்குவப்படுத்தி மனதில் இருக்கக்கூடிய கவலைகளை நீக்குவதற்கு தெய்வ வழிபாட்டை மேற்கொள்ள வேண்டும். அப்படி தெய்வ வழிபாட்டை மேற்கொள்ளும் பொழுது ஏற்றக்கூடிய தீபத்தை பற்றி பார்ப்போம்.

- Advertisement -

பொதுவாக மனதை ஒருநிலைப்படுத்துவதற்கு தீபத் சுடரை நாம் கவனித்தாலே நம்முடைய மனம் ஒருநிலைப்படும் என்று கூறப்படுகிறது. மனதை ஒருநிலைப்படுத்துவதற்காக தான் பலரும் தியானம் மேற்கொள்கிறார்கள். மனதை ஒருநிலைப்படுத்தி செய்யக்கூடிய அனைத்து செயல்களுமே வெற்றிகரமாக தான் திகழும். அப்படி மனதை ஒருநிலைப்படுத்தினால் நமக்கு வரக்கூடிய கவலைகளையும் பிரச்சினைகளையும் நம்மால் எளிதில் நீக்க முடியும்.

இதற்கு நாம் பெரிதாக எந்தவித சிரமமும் பட வேண்டிய அவசியமே இல்லை. சிவபெருமானிடம் வரம் வாங்கி அவரின் தலையின் மேல் இருக்கக்கூடிய ஒரு பூவாக தான் தும்பை பூர்த்தி திகழ்கிறது. மிகவும் சிறிய அளவில் இந்த தும்பை பூ இருந்தாலும் இதன் வெண்மை மிகவும் அபாரமாக இருக்கும். அதோடு மட்டுமல்லாமல் தும்பை பூவில் பல அற்புதமான மருத்துவ குணங்களும் இருக்கிறது.

- Advertisement -

அப்படிப்பட்ட தும்பை செடியில் இருக்கக்கூடிய வேர்களும் இலைகளும் மிகப்பெரிய வசிய சக்தி கொண்டதாக திகழ்கிறது. தும்பை வேரை நாம் பணம் வைக்கும் இடத்தில் வைப்பதன் மூலம் பணவரவு என்பது அதிகரிக்கும். சரி மனக்கவலையை நீக்க தும்பை இலையை வைத்து எப்படி தீபம் ஏற்றுவது என்று பார்ப்போம்.

இதற்கு இரண்டு அகல் விளக்குகளை எடுத்துக் கொள்ளுங்கள். அதற்கு மஞ்சள் குங்குமம் வைத்து அந்த அகல் விளக்குகளை வைப்பதற்கு ஒரு தாம்பாளத்தையும் எடுத்துக் கொள்ளுங்கள். அந்த தாம்பாளத்திற்கும் மஞ்சள் குங்குமம் வைத்துக் கொள்ளுங்கள். பிறகு அந்த தாம்பாளத்தின் மேல் இரண்டு அகல் விளக்குகளை வைத்து அதில் நல்லெண்ணெய் ஊற்ற வேண்டும். பஞ்சுத்திரியை அதில் போட வேண்டும்.

- Advertisement -

அந்த திரியுடன் தும்பை இலையையும் சேர்த்து போட வேண்டும். தும்பை இலையின் காம்பு வெளியில் இருப்பது போல் அதாவது அந்த இடத்தில் தான் நாம் தீபம் ஏற்ற வேண்டும் அப்படி வைத்து இலையை திரியுடன் சேர்த்து போட வேண்டும். சிவபெருமானை மனதார வேண்டிக்கொண்டு தீபத்தை ஏற்ற வேண்டும். பிறகு அந்த தீபத்திற்கு புஷ்பங்களால் அலங்காரம் செய்து ஊதுபத்தி தூபம் தீப ஆராதனை காட்ட வேண்டும்.

அந்த தீபத்தை பார்த்தவாறு சின்முத்திரையுடன் அமர்ந்து மனதில் இருக்கக்கூடிய கவலைகள் அனைத்தும் நீங்க வேண்டும் என்று சொல்லிக் கொண்டு இருக்க வேண்டும். இப்படி நமக்கு மன கவலைகள் ஏற்படும் போதெல்லாம் நாம் இந்த தீபத்தை ஏற்று வழிபட்டோம் என்றால் சிவபெருமானின் அருளால் நம்முடைய மனக்கவலைகள் அனைத்தும் நீங்கும்.

இதையும் படிக்கலாமே: வாங்கிய கடனை திரும்ப கொடுக்கவும் கொடுத்த கடனை திரும்ப வாங்கவும் செய்யக்கூடிய பரிகாரம்

மிகவும் எளிமையான இந்த வழிபாட்டு முறை முழு நம்பிக்கையுடன் செய்பவர்களுடைய மனக்கவலைகள் காணாமல் போய்விடும்.

- Advertisement -