நகை விற்கும் விலைக்கு தங்க நகை சேர்க்கைக்கு நாம் எளிதாக வீட்டிலேயே செய்யக்கூடிய ஒரு பரிகாரம் என்ன? வெள்ளிக்கிழமையில் இதை செய்தால் ஸ்வர்ணம் அதிகம் சேரும்!

mahalakshmi-selvam-gold-coins
- Advertisement -

ஸ்வர்ணம் என்னும் தங்க நகை எல்லோரிடமும் தங்குவது இல்லை. பணம் இருக்கும் இடத்தில் தான் மேலும் மேலும் பணம் சேரும் என்பது போல, நகை இருக்கும் இடத்தில் தான் மேலும் மேலும் நகையும் சேரும், எனவே முதலில் நகை வாங்க தயங்கவே கூடாது. அந்த வகையில் நகை அதிகம் சேர்வதற்கு நாம் எளிதாக கடைபிடிக்க வேண்டிய ஒரு பரிகாரம் என்ன? இதை எப்படி செய்வது? என்பதைத்தான் ஆன்மீக தகவல்களாக இந்த பதிவின் மூலம் நாம் அறிந்து கொள்ள போகிறோம்.

எப்பொழுதும் தங்க நகை விலை அதிகரித்துக் கொண்டே தான் இருக்கும். விலை இப்படி இருக்கிறது என்று, நாம் குறையும் பொழுது வாங்கிக் கொள்ளலாம் என்று விட்டுக் கொண்டே இருந்தால், குண்டுமணி தங்கம் கூட நம்மால் வாங்கவே முடியாது. கடைசி வரை தங்க நகை சேர்க்கை என்பது நம்மிடம் இருக்காது எனவே உங்களால் முடிந்த பொழுது தங்க நகையை வாங்கி வைத்தால், அது உங்களுக்கு அசையாத சொத்தாகவும், எப்பொழுதும் மகாலட்சுமியின் அருளை கொடுத்துக் கொண்டே இருக்கும்.

- Advertisement -

தங்க நகை சேர்க்கைக்கு நாம் முதலில் செய்ய வேண்டியது மகாலட்சுமி வழிபாடு ஆகும். மகாலட்சுமியை வணங்குபவர்களுக்கு எப்பொழுதும் குறைவில்லாத செல்வமும், ஸ்வர்ணமும் சேருமாம். வெள்ளிக் கிழமையில் சுக்கிர ஓரையில் இந்த பரிகாரத்தை தொடர்ந்து செய்து வாருங்கள். வெள்ளிக்கிழமையில் காலையில் வரக்கூடிய சுக்கிர ஹோரையில் செய்ய வேண்டும்.

வெள்ளிக் கிழமை அன்று காலை 6 மணி முதல் 7 மணி வரையிலும் 8 மணி முதல் 9 வரையிலும் சுக்கிர ஓரை இருக்கும். இந்த சமயத்தில் நீங்கள் உங்களிடம் இருக்கும் ஏதாவது ஒரு சிறு தங்கத்தை கொண்டு போய் பூஜை அறையில் இருக்கும் ஒரு கலசத்தில் போட வேண்டும். கலசம் நிறைய தண்ணீர் இருக்க வேண்டும். பின்னர் இதில் இருக்கக் கூடிய தண்ணீரை புனிதமாக்க வேண்டும். இதற்கு சிறிதளவு ஏலக்காய் தூள் சேர்த்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

பின்னர் ஒரு கிராம்பு மற்றும் கொஞ்சம் பச்சை கற்பூரத்தை நுணுக்கி போடுங்கள். ஒரு சில துளசி இலைகளை போட்டுக் கொள்ளுங்கள். அவ்வளவுதான், இப்பொழுது உங்களுடைய இந்த ஸ்வர்ணம் கலந்த கலச நீர் சக்தி வாய்ந்ததாக மாறிவிட்டது. இதை மகாலட்சுமி படத்திற்கு முன்பாக வைத்துக் கொள்ளுங்கள். மகாலட்சுமிக்கு உகந்த சர்க்கரை பொங்கலை நைவேத்தியம் படையுங்கள். அவர்களுக்கு பிடித்த வாசனை மிகுந்த மல்லிகை, முல்லை அல்லது தாமரை மலரை சூட்டுங்கள்.

பிறகு 108 மகாலட்சுமி நாமாவளிகளை உச்சரியுங்கள். உங்களுக்கு தெரிந்த மகாலட்சுமி ஸ்தோத்திரங்களையும் உச்சரிக்கலாம். பின்னர் இந்த கலசத்தில் இருக்கும் தங்க நகையை எடுத்து நீங்கள் அணிந்து கொள்ளலாம். இது போல ஒவ்வொரு வெள்ளிக்கிழமையிலும் சுக்ர ஹோரையில் நீங்கள் செய்து வர, தங்க நகை சேர்க்கை என்பது அதிகரிக்கும் என்கிறது சாஸ்திரங்கள். மகாலட்சுமி வழிபாடு என்பது ஸ்வர்ண சேர்க்கையை ஏற்படுத்தும். அது மட்டும் அல்லாமல் குபேர வழிபாடும் ஸ்வர்ண சேர்க்கையை ஏற்படுத்தும் என்பதால் வியாழன் கிழமையில் குபேர விளக்கு ஏற்றி குபேரனுக்கு பூஜை செய்து வாருங்கள். கண்டிப்பாக உங்களுக்கும் தங்க நகை சேர்க்கை என்பது விரைவிலேயே அதிகரிக்கும்.

- Advertisement -