தங்கம் வாங்க தங்கமான நாள்

thanga vanga
- Advertisement -

நம்முடைய வாழ்க்கையில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நிமிடமும் மிக மிக முக்கியமானது. இந்த நாள் நேரம் திதி இவைகளை கணக்கில் கொண்டே ஒவ்வொரு நிகழ்வையும் தீர்மானிக்கப்படுகிறது. ஒரு நாளானது நல்ல நேரம், கெட்ட நேரம், ராகு காலம், எமகண்டம், குளிகை இப்படியாக அது நீண்டு கொண்டே போகும்.

நாளில் எப்படி இவையெல்லாம் முக்கியமோ அதே போல அந்தந்த நாளில் வரக்கூடிய திதிகள் நட்சத்திரங்கள் இவைகளும் மிகவும் முக்கியமானது. இவைகளை கணக்கில் கொண்டு தான் மனிதனுடைய வாழ்க்கையில் நடக்கக் கூடிய முக்கியமான நிகழ்வுகள் தெய்வங்களுக்கான வழிபாட்டு நாட்கள் போன்றவை கணிக்கப்படுகிறது.

- Advertisement -

ஆக மொத்ததில் இந்த நாள் திதி நேரம் போன்றவைகள் இல்லாமல் எதுவும் கிடையாது. அந்த வகையில் ஒரு அற்புதமான நாளை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் இப்பொழுது நாம் தெரிந்து கொள்ள போகிறோம்.

தங்கம் வாங்க உகந்த நாள்
தங்கம் வாங்க வேண்டும் என்று எண்ணம் ஆசை அனைவருக்குள்ளும் என்றென்றைக்கும் இருக்கும் இது நிதர்சனமான உண்மை. தனக்கு வேண்டாம் என்றாலும் தன்னுடைய பிள்ளை குடும்பத்திற்காக சேர்ப்பவர்களும் இருக்கத் தான் செய்கிறார்கள். அப்படி தங்கத்தை வாங்கவும் சில நாட்கள் முக்கியமானதாக கருதப்படுகிறது.

- Advertisement -

அப்படியான நாட்களில் ஒன்று தான் அக்சயதிதி இது அனைவருக்கும் தெரிந்த ஒன்று தான். அதே போன்றதொரு முக்கியமான நாளும் உள்ளது அதை பற்றி தான் இப்போது தெரிந்து கொள்ள போகிறோம். அது என்னவென்றால் சனிக்கிழமையில் வரக் கூடிய ரோகினி நட்சத்திர நாள். இந்த நாளானது நாளை சனிக்கிழமை யுடன் சேர்ந்த ரோகினி நட்சத்திரம் வருகிறது.

இந்த நாளை தங்க கணபதி தினம் என்று குறிப்பிடுகிறார்கள். அப்படியான இந்த நாளில் தங்கம் வாங்கினால் அது பல மடங்கு பெருகும் என்று சொல்லப்படுகிறது. இது பலரும் அறியாத ஒரு புது தகவலாக தான் இருக்கும். இந்த நாளில் தங்கம் மட்டுமின்றி ஆடைகள், வீட்டிற்கு தேவையான மங்களப் பொருட்கள், வெள்ளிப் பொருட்கள் என எதை இந்த நாளில் வாங்கினாலும் அது பல மடங்கு பெருகும்.

- Advertisement -

அதே போல் இன்றைய நாளில் நாம் பணத்தை பிறரிடம் இருந்து கடனாக வாங்குவது போன்றவற்றை தவிர்க்க வேண்டும். ஏனெனில் அதுவும் பெருக்கக் கூடிய வாய்ப்பு அதிகரித்து விடும். அதே போல் அன்றைய தினத்தில் ராகு காலம் எமகண்டம் நேரத்தில் இதை வாங்கக் கூடாது. அது நமக்கு நற்பலனை தருவதாக அமையாது.

இறைவன் படைப்பில் எல்லா நாளும் நல்ல நாட்களே என்றாலும் அதிலும் சில நேரங்கள் நமக்கு நன்மையை அதிக அளவில் அதிகரித்து தரக்கூடியதாக இருக்கிறது. அப்படியான நாட்களையும் நேரங்களையும் நாம் பயன்படுத்திக் கொள்ளும் போது நம் வாழ்க்கை மேலும் சுபிட்சமாக இருக்கும்.

இதையும் படிக்கலாமே: வளமான வாழ்க்கைக்கு வளர்பிறை சஷ்டி வழிபாடு

இந்த பதிவில் உள்ள இந்த தங்க கணபதி நாள் குறித்த தகவல் அனைவருக்கும் பயனுள்ள தகவலாக தான் இருக்கும். இன்றைய தினத்தில் செய்யக்கூடியவற்றை பற்றி தெரிந்து கொண்டிருப்பீர்கள். இந்த தகவலில் உங்களுக்கு நம்பிக்கை இருப்பின் நீங்களும் இதைப் பின்பற்றி பலன் அடையலாம்.

- Advertisement -