வளமான வாழ்க்கைக்கு வளர்பிறை சஷ்டி வழிபாடு

murugan dheepam
- Advertisement -

தன்னை நாடி வரும் பக்தர்கள் கந்தா என்று மனதார அழைத்தாலே போதும் ஓடி வந்து அருள் பாலிக்கும் எளிமையான தெய்வம் எனில் அவர் முருகப் பெருமான். தினந்தோறும் முருகனின் நினைத்தாலே போதும் அவன் அருள் நமக்கு முழுவதுமாக கிடைத்து விடும். தெய்வங்களை பொறுத்த வரையில் அவர்களுக்கு உகந்த நாட்களில் வணங்குவது மேலும் நல்ல பலன்களை உடனே நமக்கு பெற்றுத் தரும்.

அந்த வகையில் குழந்தை பாக்கியம், திருமண தடை நீங்க, காரிய தடை நீங்க, செல்வ வளம் பெருக முருகப்பெருமானுக்கு உகந்த நாளான வளர்பிறை சஷ்டியில் அவரை நாம் வழிபாடு செய்வது மிகவும் உகந்தது. அந்த வழிபாட்டை எப்படி செய்வது என்பதை ஆன்மீகம் குறித்த இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

- Advertisement -

வாழ்வு வளம் பெற வளர்பிறை சஷ்டி வழிபாடு

நாளைய தினம் மிக அற்புதமான நாளாக நமக்கு வைத்திருக்கிறது. வெள்ளிக்கிழமை அம்பிகை வழிபாட்டிற்கு மிகவும் உகந்த நாள். அத்துடன் கிருத்திகை நட்சத்திரம் இணைந்து வந்திருக்கிறது. முருகருக்கு உகந்த இந்த நாளில் சஷ்டி திதியும் இணைந்து வந்திருப்பது முருகனின் நினைத்து வழிபாடு செய்வதற்கு நமக்கு வாய்த்த ஒரு அருமையான நாள் என்றே சொல்லலாம். அத்தகைய அற்புதமான இந்த நாளில் நாம் முருகப்பெருமானை நம்முடைய வீட்டில் எளிமையாக எப்படி வழிபட்டு அவருடைய அருளை முழுமையாக பெறுவது என்று பார்க்கலாம்.

விரதம் இருப்பவர்கள் காலை பிரம்ம முகூர்த்த நேரத்தில் எழுந்து குளித்து முதலில் பூஜை அறையில் ஒரு தீபத்தை ஏற்றி விடுங்கள். இந்த வழிபாடு பிரம்ம முகூர்த்த நேரத்திலிருந்து 7: 30 மணிக்குள்ளாக செய்து விடலாம். மதியம் 12 மணி முதல் 1:30 மணிக்குள்ளாகவும் செய்யலாம். இதைத் தவற விட்டால் மாலை 6.:30 மணிக்கு மேல் 8:30 மணிக்குள்ளாக இந்த வழிபாடு வீட்டிலே எளிமையாக செய்து கொள்ளுங்கள்.

- Advertisement -

இந்த வழிபாடு செய்வதற்கு முருகர் படத்திற்கு மஞ்சள், குங்குமம் பொட்டு வைத்து வாசனை மிக்க மலரை சாற்றுங்கள்.வீட்டில் வேல் அல்லது முருகர் சிலை இருந்தால் நாளைய தினத்தில் தயிர் அல்லது பால் அபிஷேகம் செய்வது சிறந்த பலனைத் தரும். முருகருக்கு நெய்வேதியமாக தேனும் தினை மாவும் கலந்து வையுங்கள்.

முருகர் படத்திற்கு முன்பாக நெய் தீபம் ஏற்ற வேண்டும். வெற்றிலை தீபம் ஏற்றுபவர்களும் இந்த நேரத்தில் ஏற்றலாம். ஒரே ஒரு தீபமாவது கட்டாயமாக ஏற்ற வேண்டும்.இந்த தீபத்தை ஏற்றி வைத்து விட்டு நீங்கள் வடக்கு பார்த்தவாறு அமர்ந்து கொள்ளுங்கள் தீபம் கிழக்கு அல்லது வடக்கு நோக்கி எறியலாம்.

- Advertisement -

இப்போது தீபத்திற்கு முன்பாக அமர்ந்து ஓம் சரவண பவ என்ற இந்த ஒரு மந்திரத்தை 108 முறை முருகனை நினைத்து மனதார சொல்லுங்கள். அதன் பிறகு கற்பூர தீப ஆராதனை காட்டி பூஜையை நிறைவு செய்து கொள்ளுங்கள். இத்துடன் அருகில் இருக்கும் முருகர் ஆலயத்திற்கு சென்று வழிபாடு செய்தால் இன்னும் சிறந்த பலனை கொடுக்கும்.

இதையும் படிக்கலாமே: அஷ்ட ஐஸ்வர்யம் பெற பைரவர் வழிபாடு

நாளைய தினத்தில் முருகனுக்கு எளிதான நெய்வேத்தியத்தையும் எளிமையாக வழிபாடு செய்வதாலும் நம் துன்பங்கள் அனைத்தும் நீங்கி சகல விதமான நன்மைகள் கிடைக்கும்.இந்த வழிபாட்டு முறையில் நம்பிக்கையுடன் வழிபட்ட நல்ல பலன்களை நிச்சயம் பெறலாம் என்ற தகவலுடன் பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -