தாராளமாக வீட்டில் தங்கம் சேர்ந்து கொண்டே இருக்க வேண்டுமா? பூஜை அறையில் இந்த 1 பூவை மட்டும் வைத்து வழிபாடு செய்தால், நீங்கள் தவறவிட்ட தங்கத்தை கூட மீண்டும் மீட்டு எடுக்கலாம்.

- Advertisement -

ஒரு குடும்பத்தில் இந்த தங்கத்தை பற்றிய கதையை கேட்டுப்பாருங்களேன். பக்கம் பக்கமாக புலம்பி புலம்பி தள்ளிவிடுவார்கள். ஐந்து வருடத்திற்கு முன்பு 50 பவுன் தங்க நகை வைத்திருந்தேன், 10 வருடத்திற்கு முன்பு 100 பவுன் தங்க நகை வைத்திருந்தேன். ஆனால், கஷ்டத்திற்காக எல்லா நகையையும் அடமானம் வைத்து விட்டேன். எல்லாம் கடனில் மூழ்கி விட்டது. ஆனால், இன்று ஒரு பவுன் தங்க நகையை கூட வாங்க முடியாத சூழ்நிலை இருக்குது என்று சொல்லுவார்கள். புதுசாக நம்மால் தங்கம் வாங்க முடியவில்லை என்றாலும் பரவாயில்லை. நம் வீட்டில் இருக்கும் தங்கத்தையாவது பத்திரமாக பாதுகாக்க வேண்டியது நம்முடைய கடமை அல்லவா.

வீட்டில் இருக்கும் தங்க நகை அடகு போகாமல் இருக்கவும், நாம் இழந்த தங்க நகையை எல்லாம் திரும்பவும் மீட்டெடுக்கவும் இந்த ஒரு ஆன்மீகம் சார்ந்த பரிகாரம் நிச்சயம் உங்களுக்கு கை கொடுக்கும். நிறைய பவுன் தங்க நகைகளை நீங்கள் அடமானத்தில் வைத்து மீட்க முடியாமல் மூழ்கி இருந்தாலும் சரி, இனி வரும் காலகட்டத்தில் உங்களுக்கு தங்கம் ராசியாகி, அந்த தங்கத்தை மீண்டும் புதுசாக வாங்கி சேர்க்கக்கூடிய யோகம் கிடைப்பதற்கும் இந்த பரிகாரத்தை செய்யலாம்.

- Advertisement -

தங்கம் சேர பூஜையறையில் எந்த பூவை வைத்து வழிபாடு செய்வது?
வீட்டில் ஐஸ்வரியம் நிலைக்க வேண்டும் என்றாலும், தங்கம் சேர வேண்டும் என்றாலும், மகாலட்சுமிக்கு வெள்ளிக்கிழமை அன்று பூஜை செய்வது சிறப்பு. தங்கம் சேர, உங்கள் குடும்பத்தில் இருப்பவர்களுக்கு தங்கத்தில் இருக்கும் தோஷங்கள் விலக, வெள்ளிக்கிழமை அன்று பூஜையறையில் நீங்கள் வைக்க வேண்டிய பூ ஆவாரம்பூ. இந்த பூ பொன்னிறத்தில் ஜொலிக்க கூடிய பூ. பொன் நிறத்தில் இருக்கக்கூடிய இந்த பூவை முகத்தில் பூசி குளித்தாலும் சருமம் ஜொலி ஜொலிக்கும். அதேபோல இந்த பூவை பூஜைக்கு பயன்படுத்தினால் உங்களுடைய வாழ்க்கை ஜொலி ஜொலிக்க தொடங்கி விடும்.

மகாலட்சுமியின் திருவுருவப்படத்திற்கு இந்த ஆவாரம் பூவை வைத்து மனம் உருகி உங்களுக்கு இருக்கும் பணக்கஷ்டத்தை சொல்லுங்கள். வருமானம் அதிகரிக்க வேண்டும் என்ற பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள். நிறைய தங்க நகை வாங்க வேண்டும் என்ற கோரிக்கையை மகாலட்சுமியிடம் வையுங்கள். அடகு வைத்த நகையின் சீட்டு இருந்தால், அந்த சீட்டை மகாலட்சுமி தாயின் பாதங்களில் வைத்து, அந்த சீட்டுக்கு மேல் 5 ஆவாரம் பூக்களை வைத்து, இந்த நகைகளை சீக்கிரம் மீட்டு எடுக்க வேண்டும் என்று வேண்டிக் கொண்டால், அந்த நகைகளை சீக்கிரம் நம் வீட்டிற்கு கொண்டு வந்து விடலாம்.

- Advertisement -

மகனுக்கோ மகளுக்கோ திருமணம் வைக்கிறீர்கள். குழந்தைகளுக்கு தங்க நகை சேர்க்க வேண்டும் என்று விரும்புகிறீர்கள். இந்த மாதிரி சமயத்தில் கையில் பணம் காசு இருக்காது. ஆனால் தங்கம் வாங்க வேண்டும் என்ற சூழ்நிலை நிலவும். இப்படிப்பட்ட சமயத்தில் வெள்ளிக்கிழமை தோறும் நீங்கள் மகாலட்சுமி தாய்க்கு இந்த ஆவாரம் பூவை வைத்து வழிபாடு செய்து, தங்கம் வாங்க வேண்டும் என்ற வேண்டுதல் வைத்தால், ஏதாவது ஒரு ரூபத்தில் பணம் உங்கள் கைக்கு கிடைக்கும். தங்கத்தை வாங்கக்கூடிய வாய்ப்புகளும் உங்களுக்கு வந்து சேரும். சின்ன சின்னதாக சீட்டு போட்டு கூட பெரிய அளவில் தங்க நகை வாங்கி மன நிறைவை அடைவீர்கள்.

இதையும் படிக்கலாமே: கடைசி காலம் வரை கடன் இல்லாமல் நிம்மதியாக வாழ வேண்டுமா? உங்க வீட்ல இந்த செடியை நட்டு வளர்த்து வந்தாலே போதும்.

ஐஸ்வர்யா கடாட்சம் வீட்டில் நிலையாக நிற்க நீங்கள் செய்ய வேண்டிய ஒரே ஒரு வேலை வெள்ளிக்கிழமை வீட்டில் பூஜை செய்யும் போது அந்த பூஜையில் இந்த ஆவாரம் பூவை மகாலட்சுமி தாய்க்கு சூட்ட வேண்டும். நம்பிக்கையோடு உண்மையான பிரார்த்தனை செய்ய வேண்டும் அவ்வளவுதான். நம்பிக்கை உள்ளவர்கள் மேல் சொன்ன இந்த எளிமையான ஆன்மீகம் பரிகாரத்தை பின்பற்றி பலன் பெறலாம் என்று தகவலுடன் இன்றைய பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -