கடைசி காலம் வரை கடன் இல்லாமல் நிம்மதியாக வாழ வேண்டுமா? உங்க வீட்ல இந்த செடியை நட்டு வளர்த்து வந்தாலே போதும்.

karpooravalli-cash
- Advertisement -

தேவைக்கு அதிகமாக வருமானம் வந்து கொண்டே இருந்தால், இருக்கின்ற கடன் பிரச்சனையை எல்லாம் சரி செய்து விட்டு வாழ்க்கையின் இறுதி கட்டம் வரை சந்தோஷமாக வாழலாம். கடன் வாங்க வேண்டிய அவசியமே இருக்காது. ஆனால் தேவைக்கு அதிகமாக வருமானத்தை சம்பாதிப்பது என்பது இந்த காலத்தில் அவ்வளவு எளிமையான விஷயம் அல்ல. நம்முடைய தாத்தா, கொள்ளு தாத்தா, சொத்து சேர்த்து வைத்திருந்தால் இன்று நம்முடைய வாழ்க்கை சுகமாக இருக்கும். ஆனால் யாருமே எந்த சொத்தும் நமக்கு வைத்து விட்டு செல்லவில்லை. நம் கை கொண்டு சம்பாதித்து தான் வாழ வேண்டிய சூழ்நிலை. முன்னோர்கள் சம்பாதித்த சொத்து ஒரு ரூபாய் கூட இல்லை என்பவர்கள் இன்றைய சூழ்நிலையில், இந்த உலகத்தில் வசதியாக வாழ்வது என்பது அவ்வளவு சுலபமான காரியம் அல்ல. இப்படிப்பட்டவர்கள் எல்லாம் கடனை வாங்கி ஏதோ ஒரு ரொட்டேஷனில் தங்களுடைய வாழ்க்கையை நடத்திக் கொண்டு செல்வார்கள்.

தங்களுடைய பிள்ளைகளை யாவது இந்த நிலைமையில் இருந்து மீட்டெடுக்க வேண்டும். அவர்களாவது கஷ்டப்படாமல் வாழ வேண்டும் என்று பணம் சம்பாதிக்க பல முயற்சிகளை மேற்கொள்வார்கள். ஆனால் கடைசியில் மிஞ்சி இருப்பது இந்த கடனாகத்தான் இருக்கும். சரி, போகட்டும். கவலைப்படாதீங்க. உங்க சொந்த காலில் நீங்கள் நிற்பது என்பது ரொம்ப பெரிய விஷயம் தான் அதை நினைத்து பெருமிதம் கொள்ளுங்கள். இந்த கடன் பிரச்சனையிலிருந்து வெளிவர, பண பிரச்சனையிலிருந்து வெளிவர எளிமையான ஆன்மீகம் சொல்லும் இந்த தாந்திரீக பரிகாரத்தை செய்து பார்க்கலாம்.

- Advertisement -

வருமானம் அதிகரித்து கடனையெல்லாம் சீக்கிரம் திருப்பி தர கற்பூரவள்ளி பரிகாரம்:
இதற்கு முதலில் உங்களுடைய வீட்டில் நீங்கள் செய்ய வேண்டிய விஷயம் சின்னத் தொட்டியில் ஒரு கற்பூரவள்ளி செடியை நட்டு வளர்க்க வேண்டும். கற்பூரவள்ளி செடியிலிருந்து, காம்போடு ஒரு கிளையை பறித்து, மண்ணில் சொருக்கி வைத்து, தண்ணீர் தெளித்து வந்தாலே போதும் அது தழைத்து அழகாக வளர்ந்து விடும். இது மருத்துவத்திற்கு ரொம்பவும் உதவியாக இருக்க கூடிய ஒரு இலை. அதேபோல இந்த இலைக்கு மகத்துவமும் அதிகமாக இருக்கிறது.

இந்த இலையின் நறுமணத்திற்கு ஒரு நல்ல சக்தி இருக்கிறது. பணத்தை சேரவிடாமல் தடுக்கக்கூடிய உங்கள் வீட்டில் இருக்கும் எதிர்மறை ஆற்றலை இந்த வாசமானது வெளியே விரட்டி அடித்து விடும். தட்டின் மேல், ஒரு சின்ன கற்பூரவள்ளி இலை எடுத்து வைத்துக் கொள்ளவும். அதன் மேலே பச்சை கற்பூரம் வைத்து ஏற்றி விடுங்கள். இந்த சூடத்தை, சூடத்தில் இருந்து வெளிவரும் புகையை உங்கள் வீடு முழுவதும் காண்பிக்கவும்.

- Advertisement -

பிறகு கையில் இருக்கும் தட்டை கீழே வைத்துவிட்டு, அந்த கற்பூரத்தின் முன்பு நீங்கள் அமர்ந்து கடன் சுமை தீர வேண்டும் என்றும், வருமானம் பெருக வேண்டும் என்று பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள். தினமும் காலையில் எழுந்து இந்த கற்பூர ஆராத்தியை வீடு முழுவதும் காண்பித்து விட்டு, அந்த கற்பூரத்தின் முன்பு அமர்ந்து கடன் தீர வேண்டும் என்று வேண்டுதல் வைத்தால் உங்கள் கடன் சுமை படிப்படியாக குறையும்.

தினமும் நீங்கள் உங்கள் வீட்டில் நட்டு வைத்திருக்கும் அந்த செடிக்கு தண்ணீர் ஊற்றும் போது இரண்டு நிமிடம் உங்கள் கடன் சுமையை அந்த செடியிடம் சொல்லி, தண்ணீரை ஊற்றுங்கள். செடிக்கு இயற்கையாகவே நாம் பேசக்கூடிய விஷயத்தை கேட்கக்கூடிய சக்தி இருக்குதுங்க. நீங்கள் பேச பேச, அந்த செடி வளர வளர உங்கள் வீட்டில் செல்வ செழிப்பும் அதிகரிக்கும். கடன் சுமையும் படிப்படியாக குறைவதை பார்க்கலாம்.

இதையும் படிக்கலாமே: இன்று தேய்பிறை பஞ்சமி திதியில் வாராகி அன்னைக்கு இந்த தீபம் ஏற்றி வழிபட்டால் கேட்டவருக்கு கேட்ட வரத்தை அளிக்கும் அன்னை நீங்கள் கேட்காமல் உங்களுக்கு செல்வ வளத்தை வாரி வழங்குவார்.

உங்கள் வீட்டில் நட்டு வளர்க்கும் இதே செடியில் இருந்து இலையை பறித்து பரிகாரத்திற்கு பயன்படுத்தலாம். தொடர்ந்து 48 நாட்கள் இந்த பரிகாரத்தை செய்து வரும்போது நல்ல பலனை உணர முடியும். நம்பிக்கை உள்ளவர்கள் மேல் சொன்ன விஷயங்களை பின்பற்றி பலன் பெறலாம் என்ற தகவலோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -