நீங்கள் நினைத்தபடி உங்களிடம் தங்கம் சேர மகாலட்சுமிக்கு 101 நாணயங்களை இப்படி செய்யுங்கள்! தங்கம் வாங்கும் தடைகள் நீங்கி வீட்டில் தங்க சேர்க்கை உண்டாகும்.

gold-coins
- Advertisement -

எல்லோருக்குமே தங்க நகை மீது ஒரு பேராசை இருக்கும். தங்கம் வெறும் உலோகம் மட்டுமல்ல! தங்கம் ஒரு மிகப் பெரிய முதலீடாகவும் பார்க்கப்படுகிறது. மேலும் தங்கம் ஒரு அசையாத சொத்து வகை என்பதால் தங்கத்தின் மீதான மதிப்பு தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. ஒரு சிறு குண்டுமணி அளவிற்காவது தங்கம் நம்மிடம் இருக்க வேண்டும் என்பது பல பேருடைய ஏக்கமாக இருக்கிறது. இத்தகு தங்க நகைகள் நம்மிடம் வெகுவாக சேர செய்ய வேண்டிய எளிய மகாலட்சுமி பரிகாரம் தான் இது! அது என்ன பரிகாரம்? எப்படி செய்ய வேண்டும்? என்பதை தெரிந்து கொள்ள தொடர்ந்து இந்த பதிவை நோக்கி பயணிப்போம்.

gold

இன்று ஜனனம் ஆன குழந்தைக்கு மோதிரம் போடுவது முதல் இறந்து பிணமாக கிடப்பவருக்கு சம்பிரதாயங்கள் செய்யும் வரை எல்லாவற்றிற்கும் தங்க நகைகள் தான் பிரதானமாக பங்கு வகிக்கிறது. மனைவி விரும்பிய தங்க நகைகளை கணவன் வாங்கிக் கொடுப்பதும், பேரன், பேத்திக்கு போட்டு அழகு பார்க்க தாத்தா, பாட்டிகள் வாங்கி கொடுப்பதும் அன்பின் அடையாளமாக இருந்து வருகிறது. தங்கம் வாங்கி போட்டால் தான் அன்பா? என்றெல்லாம் கேட்கக் கூடாது. அதுவும் ஒரு வகையிலான அன்பு தான்! என்பது எல்லோருக்கும் தெரியும்.

- Advertisement -

இப்படி தங்க நகைகள் மீது இருக்கும் பிரியத்தை வெளிப்படுத்த தங்க நகைக்கடைகளில் அலைபாயும் கூட்டத்தை பார்த்தாலே நமக்கு புரியும். சில பேருக்கு என்னதான் தங்க நகைகள் வாங்க வேண்டுமென்கிற ஆசை இருந்தாலும், அவர்களிடம் போதிய பணம் இருந்தாலும் வாங்க முடியாமல் தள்ளி சென்று கொண்டே இருக்கும். தங்கம் வாங்குவதற்கும் ஒரு பிராப்தம் இருக்க வேண்டும். எல்லோராலும் எளிதாக தங்க நகையை வாங்கி விட முடியாது. இப்படி தங்க நகை வாங்க நினைப்பவர்களுக்கு வாங்க முடியாமல் போனாலும் இந்த பரிகாரத்தை செய்யலாம்.

mahalakshmi1

செல்வத்திற்கு அதிபதி மகாலெட்சுமி ஆவாள். அதே போல தங்கத்திற்கும் அதிபதி அவளே. தங்கத்தை பெற விரும்பினால் மகாலட்சுமியின் அனுகிரகம் பெற வேண்டும். மகாலட்சுமி அனுக்கிரகம் அதிகமாக இருப்பவர்களிடம் கண்டிப்பாக அதிக தங்க நகைகள் சேர்ந்து கொண்டே இருக்கும். மகாலட்சுமி அனுகிரகம் குறைவாக இருப்பவர்களுக்கு தங்க நகைகள் சேர்வதில் தடைகள் ஏற்படும். வாங்கிய தங்க நகைகள் அடகிற்குப் போகும்.

- Advertisement -

அடகு வைத்த தங்க நகைகளை மீட்க முடியாமல் போகும். அல்லது தங்க நகைகள் வாங்க வேண்டும் என்று நினைத்தாலும் அது கடைசி வரை நடக்காது. இப்படி தங்கத்தின் மீதான தடைகளை விலக்குவதற்கு மகாலட்சுமி பூஜைகளை மேற்கொள்ளலாம். வெள்ளிக்கிழமை தோறும் மகாலட்சுமியை நெய் தீபம் ஏற்றி தங்கத்தை வைத்து வழிபட தங்கம் சேரும். மேலும் ஒரு மஞ்சள் துணியில் 101 ஒருரூபாய் நாணயங்களை வைத்து முடிச்சாக கட்டி மகாலட்சுமி பாதத்தில் வையுங்கள்.

mahalakshmil

தினமும் ‘ஓம் மகாலட்சுமி தாயே போற்றி!!!’ என்கிற மந்திரத்தை 108 முறை உச்சரித்து வாருங்கள், விரைவாக தங்க நகைகள் உங்களிடம் சேர ஆரம்பிக்கும். தங்க நகைகள் சேர ஆரம்பித்தவுடன் அந்த 101 நாணயங்களை அருகில் இருக்கும் கோவிலுக்கு சென்று அங்குள்ள உண்டியலில் சமர்ப்பித்து விடுங்கள். இது ஒரு எளிய பரிகாரமாக இருந்தாலும் தங்க நகை சேர்க்கைக்கு ஒரு முக்கிய பரிகாரமாகவும் இருந்து வருகிறது. நீங்களும் இதனை செய்து பயன் பெறலாமே!

- Advertisement -