எந்த வீட்டில் வெள்ளி பொருட்கள் இப்படி இருக்கின்றதோ, அந்த வீட்டில் நிச்சயமாக தங்கம் சேரவே சேராது.

gold
- Advertisement -

எந்த வீட்டில் தங்கத்திற்கு அதிக முன்னுரிமை கொடுக்கப்பட்டு, வெள்ளியை இரண்டாம்பட்சமாக நினைத்து வெள்ளி தானே என்று வெள்ளி பொருட்களை, அலட்சியமாக நினைக்கிறார்களோ அந்த வீட்டில் தங்கம் சேராது. தங்கம் மகாலட்சுமியின் அம்சம் கொண்ட ஒரு பொருள் தான். அதில் எந்த சந்தேகமும் இல்லை. இருப்பினும் வெள்ளி சுக்கிரன் அம்சம் பொருந்தியது. வெள்ளியை எந்த அளவிற்கு நம்முடைய வீட்டில் மதிப்பு கொடுத்து கொண்டாடி வழிபாடு செய்கிறோமோ அந்த அளவுக்கு தங்கம் நம் வீட்டிற்கு தானாகவே வந்து சேரும் என்பதில் ஒரு துளி அளவும் சந்தேகம் இல்லை.

velli vilaku

வெள்ளி என்ற உலோகம் மற்ற உலோகங்களை கவரக்கூடியது. வெள்ளியை நம்முடைய வீட்டில் நிறைய வாங்கி சேர்த்துக் கொண்டே இருந்தால், அந்த வெள்ளி பொருட்கள் மற்ற உலோகமான தங்கத்தை ஈர்க்கும். தங்கத்தோடு மட்டுமல்லாமல் மற்ற உலோகத்தினால் செய்யப்பட்ட பொருட்களையும் நம்முடைய வீட்டில் வாங்கக்கூடிய யோகத்தை கொண்டு வந்து சேர்க்கும்.

- Advertisement -

அதாவது வீட்டிற்கு தேவையான எலெக்ட்ரானிக் பொருட்களாக இருந்தால், வீட்டில் மற்ற பயன்பாட்டிற்கு பயன்படுத்தக் கூடிய பொருட்கள் என்றாலும் அதில் கட்டாயமாக மற்ற உலோகங்கள் சேர்ந்திருக்கும். அப்படி நம் வீட்டிற்கு தேவையான ஆடம்பர, அத்தியாவசியமான பொருட்களை வாங்கவும் இந்த வெள்ளி ஒரு காரணமாக அமையும்.

silver-savi-kothu

சரி, வெள்ளியை எப்படி போற்றி எப்படி பூஜை அறையில் வைத்து தொடர்ந்து பூஜை செய்துவந்தால் தங்கம் அதிகமாக சேரும் என்பதைப் பற்றி தெரிந்து கொள்வோமா. சிறிய அளவில் இருக்கும் வெள்ளி காயின் அல்லது வெள்ளி மோதிரம் வெள்ளிநகை எதுவாக இருந்தாலும் சரி, அதை முதலில் பாலில் கழுவி விட்டு அதன் பின்பு சுத்தமான தண்ணீரில் கழுவி விட்டு, சுத்தி செய்து எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

பூஜை அறையில் ஒரு தீபம் ஏற்றி வைத்துக் கொள்ள வேண்டும். வெற்றிலையின் மேல் சுத்தம் செய்த வெள்ளி பொருளை வைத்து அதற்கும் மஞ்சளினால் அர்ச்சனை செய்ய வேண்டும். கொஞ்சமாக மஞ்சளில் சிறிய கிண்ணத்தில் எடுத்துக் கொள்ளுங்கள். ஆள்காட்டி விரலாலும் கட்டை விரலாலும் சிட்டிகை அளவு மஞ்சளை எடுத்து அந்த வெற்றிலையில் இருக்கும் வெள்ளி பொருளின் மேலே மூன்று முறை அர்ச்சனை செய்தால் போதும். அர்ச்சனை செய்யும்போது ‘ஓம் சுக்கிர தேவாய நமஹ’ என்ற மந்திரத்தை சொல்லி அர்ச்சனை செய்ய வேண்டும்.

silver-ring1

48 நாட்கள் தொடர்ந்து இந்த பூஜையை உங்களுடைய வீட்டில் செய்து வந்தால் வீட்டில் பொன் பொருள் ஆபரண அனைத்தும் அதிகமாக சேரும். வீடு சுபிட்சம் அடையும். அடைமானம் வைத்த நகையையும் சீக்கிரமே மீட்க முடியும். 48 நாட்கள் மஞ்சளில் அர்ச்சனை செய்து வந்தால் மஞ்சள் நிறைய சேரும் அல்லவா. அந்த மஞ்சளை வீட்டில் இருக்கும் பெண்கள் முகத்தில் தேய்த்து குளிக்க பயன்படுத்திக் கொள்ளலாம்.

gold

இதுமட்டுமல்லாமல் வீட்டில் இருக்கக் கூடிய வெள்ளியில் செய்யப்பட்ட விநாயகர் சிலை, அம்மன் சிலை, கிருஷ்ணர் சிலை, பெருமாள் சிலை எதுவாக இருந்தாலும் சரி அந்த சிலைகளுக்கு அபிஷேகம் செய்யும்போது மஞ்சளால் அபிஷேகம் செய்வது, அதாவது மஞ்சள் கரைத்த தண்ணீரால் அபிஷேகம் செய்வது நம் வீட்டிற்கு மிக மிக நல்ல பலனைக் கொடுக்கும் என்றும் சொல்லப்பட்டுள்ளது. நம்பிக்கை உள்ளவர்கள் மேல் சொன்ன பரிகாரங்களை செய்து பலனடையலாம் என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -