தங்கம் சேர தங்கமான பரிகாரம்

guru bhagavan gold
- Advertisement -

முன்பெல்லாம் தங்க நகைகளை அதிகமாக சேர்க்க வேண்டும் என்று ஆசைப்படுவது பெண்கள் தான். பெண்களுக்கு எப்போதும் இந்த தங்க நகை மீது ஒரு ஈர்ப்பு இருந்து கொண்டே இருக்கும். தற்போது ஆண்களும் தங்க நகைகளை அணிவதில் அதிக ஆர்வத்தை காட்டுகிறார்கள். தங்கம் வாங்கி அணியவும் ஆசைப்படுகிறார்கள். அந்த அளவுக்கு தங்கத்தின் மதிப்பு உயர்ந்து கொண்டே செல்கிறது.

இதனால் தான் அனைவரும் தங்கத்தை எப்படியாவது சேர்த்து பெருக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறார்கள். இதில் பணம் இருப்பவர்கள் இல்லாதவர்கள் என்ற எந்த பாகுபாடும் கிடையாது. அனைவருக்கும் தங்கம் வேண்டும் அதை சேர்க்க வேண்டும் அவ்வளவு தான். அந்த தங்கத்தை வாங்கவும் சேர்க்கவும் எளிய பல தாந்த்ரீக பரிகாரங்கள் உள்ளது. அதில் ஒன்றை தான் ஆன்மீகம் குறித்த இந்த பதிவில் இப்போது நாம் தெரிந்து கொள்ள போகிறோம்.

- Advertisement -

தங்கம் அதிகமாக சேர பரிகாரம்

தன்னும் அதிகமாக சேர வேண்டும் என்று நினைப்பவர்கள் முதலில் தெரிந்து கொள்ள வேண்டியது தங்கத்தை அலட்சியப்படுத்தக் கூடாது. சிலர் அணிந்திருக்கும் நகைகளை அவர்கள் நினைக்கும் இடத்தில் கழட்டி வைப்பார்கள். குறிப்பாக குளிக்கும் இடம், முகம் கழுவும் இடம், தலை வாருமிடம் என கழட்டி வைப்பார்கள். இதனால் தங்கத்திற்கு தோஷம் ஏற்படும் என்று சொல்லப்படுகிறது.

தங்கம் எப்போதும் குருவின் அம்சமாக பார்க்கப்படுகிறது. தங்கம் ஒருவருக்கு அதிகமாக சேர வேண்டும் என அவருக்கு குருவின் அனுக்கிரகம் நிச்சயமாக தேவை. குருவிற்கு உகந்த நிறம் எனில் அது மஞ்சள். நீங்கள் ஒரே ஒரு கிராம் தங்கம் வைத்திருந்தாலும் அதை பீரோவில் காட்டு துணி வைத்து அதன் மேல் அந்த நகையை வையுங்கள். இதனால் தங்கத்திற்கு ஈர்ப்பு ஏற்பட்டு தங்கம் பெருகும்

- Advertisement -

அத்துடன் தங்க நகைகள் வைக்கும் இடத்தில் எப்போதும் மல்லிகை பூக்கள் இருக்கும் படி பார்த்துக் கொள்ளுங்கள். மல்லிகை பூக்கள் மகாலட்சுமி தாயாரின் அம்சமாக கருதப் படுகிறது. இது தங்கத்தை ஈர்க்கும் தன்மை உடையது. ஆகையால் எப்போதும் மல்லிகை மலர் தங்கத்துடன் இருக்க வேண்டும். உங்களுக்கு நேரம் கிடைக்கும் போது தங்கத்தை வைத்து மல்லிகை பூவால் பூஜை செய்தால் கூட சிறந்த பலனை பெற முடியும்.

இந்த மல்லிகை பூவை அடிக்கடி மாற்றிக் கொண்டிருக்க முடியாது எங்களுக்கு நேரமில்லை என்று நினைப்பவர்கள் சுத்தமான சந்தன கட்டை ஒன்றை வாங்கி வைத்து விடுங்கள். இதுவும் தங்கத்தை ஈர்க்கக் கூடிய தன்மை உடையது. இவற்றுடன் தைல இலை என்று சொல்வார்கள் அந்த இலை கிடைத்தாலும் வாங்கி வைக்கலாம். உங்களுக்கு இவை அனைத்துமே கிடைக்கும் என்றால் அனைத்தையும் கூட வைக்கலாம் நல்லது தான்.

- Advertisement -

சிலரிடமும் நகைகளை இருக்காது. காதில் அணிந்திருக்கும் ஒரே ஒரு தோடு அல்லது மோதிரம் இப்படி ஏதோ ஒன்று தான் இருக்கும். அப்படியானவர்கள் இந்த ஒரு நகையை கூட மாதத்தில் ஒரு நாளாவது கழற்றி சுத்தம் செய்த பிறகு பூஜையறையில் வைத்து ஒரே ஒரு மல்லிகை பூவே சிறிது நேரம் அந்த நகையின் மீது வைத்து அதன் பிறகு அணிந்து கொள்ளுங்கள். இது சொர்ண ஆகர்ஷணத்தை ஏற்படுத்தும்.

இதையும் படிக்காலமே: வேண்டுதல் நிறைவேற விநாயகர் வழிபாடு

இந்த முறையில் தங்கத்தை பாதுகாத்து வரும் போது நிச்சயம் தங்கம் உங்களிடம் வருவதற்கான யோகம் தானாகவே வரும். நீங்கள் தங்கம் வாங்க வேண்டும் என்று நினைத்து அதற்கான முயற்சி எடுங்கள் தங்கம் உங்களைத் தேடி வரும் என்று இந்த தகவலுடன் பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -