வேண்டுதல் நிறைவேற விநாயகர் வழிபாடு

vinayagar pottu kadalai dheepam
- Advertisement -

நாம் அனைவரும் ஆலயம் செல்வதும் தெய்வத்தை வணங்குவதும் நம்முடைய கஷ்டங்களை சொல்லி அதை தீர் வேண்டும். இதை தவிர நமக்கு ஏதேனும் வேண்டுதல் இருப்பின் அதை நிறைவேற்றித் தரும்படி வேண்டுவோம். இந்த வேண்டுதலுடன் நாம் செய்யும் பிரார்த்தனையானது நமக்கு இறையருளையும் பெற்றுத் தரும்.

ஆன்மீகம் குறித்த இந்த பதிவில் நம்முடைய வேண்டுதல் உடனே பலிக்க கூடிய எளிய வழிபாட்டு முறையைப் பற்றி தான் தெரிந்து கொள்ள போகிறோம். இந்த வழிபாடு செய்ய நாம் ஆலயம் செல்ல தேவையில்லை. வீட்டிலே வெறும் 11 நாட்கள் மட்டும் பூஜை செய்தாலே போதும். அந்த வழிபாட்டை எப்படி செய்வது என்று பதிவை தொடர்ந்து தெரிந்து கொள்ளலாம்.

- Advertisement -

வேண்டுதல் நிறைவேற விநாயகர் வழிபாடு

இந்த வழிபாட்டை நாம் பிரம்ம முகூர்த்த வேளையில் தான் செய்ய வேண்டும். இதை 11 நாட்கள் தொடர்ந்து செய்ய வேண்டும். ஆகையால் பெண்கள் இந்த வழிபாட்டை துவங்கும் முன்பு அவர்களுக்கான மாதவிடாய் காலம் முடிந்த பிறகு துவங்குகள். ஏனெனில் வழிபாட்டை இடையில் நிறுத்தக் கூடாது.

அதே போல் இந்த வழிபாட்டை விநாயகருக்கு செய்வதால் நாம் சதுர்த்தி திதி அன்று துவங்கலாம் அல்லது ஞாயிற்றுக்கிழமை அன்று இந்த வழிபாடு தொடங்கலாம். இந்த வழிபாடு செய்யும் 11 நாட்களும் அசைவத்தை தவிர்த்து விட வேண்டும். பெண்கள் செய்வதாக இருந்தால் அவர்கள் மட்டும் அசைவம் சாப்பிடாமல் விரதம் இருந்தால் போதும். வேறு எந்த விதிமுறைகளும் கிடையாது.

- Advertisement -

இந்த வழிபாட்டை துவங்கும் நாள் அன்று காலை பிரம்ம முகூர்த்த நேரத்தில் எழுந்து கொள்ள வேண்டும். வீட்டில் வெள்ளெருக்கம் விநாயகர் இருந்தால் இந்த வழிபாட்டை அந்த விநாயகரை வைத்து செய்யுங்கள். இதனால் பல மடங்கு பலனை பெறலாம். சிலை இல்லாதவர்கள் படம் இருந்தாலும் வழிபாட்டிற்கு அதை பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

எருக்கம் விநாயகர் அல்லது விநாயகர் படம் எதுவாக இருந்தாலும் இந்த படத்திற்கு மஞ்சளால் பொட்டு வைக்க வேண்டும். அதன் பிறகு ஒரு அகல் விளக்கில் நெய் ஊற்றி பஞ்சி திரி போட்டு கிழக்கு முகமாக தீபத்தை ஏற்றி வைக்க வேண்டும். விநாயகருக்கு நெய்வேதியமாக பொட்டுக்கடலையும் வெல்லம் அல்லது ஏதேனும் ஒரு இனிப்பை கலந்து வைக்க வேண்டும். ஆனால் பொட்டுக்கடலை நெய்வேதியமாக இருக்க வேண்டும்.

- Advertisement -

இவையெல்லாம் செய்த பிறகு இந்த தீபத்தின் முன் அமர்ந்து ஓம் கம் கணபதியே நமக என்ற இந்த நாமத்தை 108 முறை சொல்ல வேண்டும். உங்களுக்கு வேறு ஏதேனும் விநாயகர் சோஸ்திரங்கள் நாமங்கள் அல்லது விநாயகர் அகவல் தெரிந்தால் அதையும் இத்துடன் சேர்த்து பாராயணம் செய்யலாம்.

இப்படி மந்திரத்தை சொல்லி ஜெபிக்கும் போது உங்களின் வேண்டுதல் எதுவும் அதை மனதார வேண்டி விநாயகப் பெருமானிடம் அதை சீக்கிரம் நிறைவேற்றி தரும்படி கேளுங்கள் நிச்சயம் சீக்கிரம் நிறைவேறும். இந்த வழிபாடு முடிந்த பிறகு கற்பூர தீபாராதனை காட்டி விட்டு பிரசாதமாக வீட்டில் உள்ளவர்களும் நீங்களும் பகிர்ந்து உண்ணுங்கள்.

இதையும் படிக்கலாமே: வீட்டில் ஹனுமன் ஜெயந்தி வழிபாடு

இதே போல 11 நாட்கள் தொடர்ந்து செய்ய வேண்டும் இப்படி செய்யும் நாட்களில் வீட்டின் அருகில் உள்ள விநாயகர் கோவிலுக்கு அருகம்புல்லில் மாலை அல்லது அருகம்புல்லை வைத்து வழிபாடு செய்யுங்கள். அது இந்த வழிபாட்டின் பலனை மேலும் அதிகரிக்கும்.
வேண்டுதல் நிறைவேற செய்யக் கூடிய இந்த எளிய வழிபாட்டு முறையில் நம்பிக்கை இருப்பின் நம்பிக்கையுடன் செய்து நல்ல பலனை பெறலாம்.

- Advertisement -