தங்கம் சேர பரிகாரம்

gold thulsi mudichu
- Advertisement -

தங்க நகைகளை அணிந்து கொள்ள வேண்டும் தங்கத்தை அதிகமாக சேர்க்க வேண்டும் என்ற ஆசை இல்லாதவர்கள் யாருமே இருக்க முடியாது. தனக்காக இல்லை என்றாலும் தங்களுடைய குழந்தைகளுக்கு கொஞ்சமாவது தங்கம் சேர்க்க வேண்டும் என்று நிறைய தாய்மார்கள் யோசிக்கிறார்கள். அத்தகைய விலை மதிப்பு மிக்க தங்கத்தை சேர்க்க நாம் எடுக்கும் முயற்சிகளுடன் ஒரு சில தாந்த்ரீக பரிகாரங்களையும் செய்யும் பொழுது நல்ல பலன் கிடைக்கும் என்று சொல்லப்பட்டு இருக்கிறது.

அப்படியான ஒரு எளிமையான தாந்திரீக பரிகாரத்தை தான் ஆன்மீகம் குறித்த இந்த பதிவில் இப்போது நாம் தெரிந்து கொள்ள போகிறோம். இந்த பரிகாரத்தை முறையாக செய்வதன் மூலம் குண்டுமணி தங்கம் நம்மிடம் இருந்தாலும், அது பல மடங்கு உயர்வதற்காக வாய்ப்பை இது ஏற்படுத்திக் கொடுக்கும் என்று சொல்லப்பட்டிருக்கிறது. இப்போது அந்த பரிகாரத்தை எப்படி செய்யலாம் என்பதை தெரிந்து கொள்ளலாம்.

- Advertisement -

தங்கம் சேர பரிகாரம்

இந்த பரிகாரம் செய்வதற்கு முன்பாக தங்கம் சேர சில விஷயங்களை முறையாக செய்ய வேண்டும். தங்கம் சேர இன்றைய காலக்கட்டத்தில் பெரும்பாலானோர் தங்கத்திற்கான சீட்டு கட்டுவார்கள். அதில் பணம் சேர்ந்தவுடன் தங்கத்திற்கு பதிலாக வேறு  பொருளை வாங்குவார்கள். அப்படி வாங்காமல் தங்கம் வாங்க முடிவு செய்தால் தங்கம் மட்டுமே வாங்க வேண்டும் என்று சொல்லப்பட்டிருக்கிறது.

அதுமட்டுமின்றி தங்கத்தை வெறும் அணிகலனாகவோ அல்லது அழகியல் சார்ந்த பொருளாக மட்டுமே காணாமல் தங்கம் மதிப்பு மிக்க பொருளாக நாம் போற்றி பாதுகாக்க வேண்டும். தங்கத்தையும் நாம் மகாலட்சுமி தாயாருக்கு இணையாக நினைத்து பத்திரப்படுத்தி வழிபட வேண்டும். தங்க நகைகளை நாம் வெளியில் அணிந்து சென்று வந்த பிறகு அதை உப்பு கலந்து நீரில் சுத்தம் செய்து அதன் பிறகு எடுத்து வைப்பதன் மூலம் தங்கத்தின் மீது உள்ள திருஷ்டிகள் கழியும். இதனால் தங்கம் நம்மை விட்டு போவதற்கான வாய்ப்புகளை தவிர்த்து விடலாம்.

- Advertisement -

இப்போது தங்கம் சேர்வதற்காக அந்த எளிய பரிகாரத்தை பற்றி பார்க்கலாம் அதற்கு ஒரு சிகப்பு நிறப்பட்டு துணி அல்லது வெல்வெட் துணி எடுத்துக் கொள்ளுங்கள். இந்த துணியில் கொஞ்சம் சோம்பு, லவங்கம், ஏலக்காய், பச்சை கற்பூரம், மஞ்சள், குங்குமம், சாதாரண கற்பூரம் இவற்றுடன் ஒரு கைப்பிடி துளசி இவை அனைத்தையும் ஒன்றாக சேர்த்து மூட்டையாக கட்டி விடுங்கள். இந்த மூட்டையை மகாலட்சுமி தாயார் படத்திற்கு முன்பாக வைத்து பூஜை செய்து தங்கம் சேர வேண்டும் என்று மனதார வேண்டிக் கொள்ளுங்கள்.

அதன் பிறகு இந்த மூட்டையை நீங்கள் தங்க நகை வைத்திருக்கும் இடத்தில் வைக்க வேண்டும். ஒரே ஒரு குண்டுமணி தங்கம் இருந்தால் கூட அதை வைத்து அத்துடன் இந்த மூட்டையை வைத்து விடுங்கள். இந்த மூட்டையில் இருந்து வரும் நறுமணமானது மகாலட்சுமி தாயாரை மனம் மகிழ செய்யும். இதன் மூலம் தங்க நகை பெருக்குவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும் என்று சொல்லப்படுகிறது.

- Advertisement -

இந்த மூட்டையை வாரத்திற்கு ஒரு முறை மாற்றி புதிய மூட்டையை தயார் செய்து வைத்துக் கொள்ளலாம். அப்படி மாற்றும் போது இதில் உள்ள பொருட்களை கால் படாத இடத்தில் போட்டு விடுங்கள். நீங்கள் எப்போது பூஜை செய்தாலும் இந்த மூட்டைக்கும் தீப தூப ஆராதனை காட்டி வரும் போது இன்னும் அதிகமான பலனை பெறலாம்.

இதையும் படிக்கலாமே: சஷ்டி விரதம் எளிமையாக இருப்பது எப்படி?

தங்க நகை சேர்வதற்கான இந்த எளிய பரிகாரத்தை செய்வதுடன் தங்கம் சேர நாம் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியும் தவறாமல் செய்ய வேண்டும். இந்த பரிகாரத்தின் பலனாக அந்த முயற்சிகள் அனைத்தும் வெற்றியடைந்து தங்கமானது நம் கையை விட்டு போகாமல் மேலும் அதிகரிக்கும் வாய்ப்பை ஏற்படுத்தும். இந்த பரிகார முறையில் நம்பிக்கை இருப்பவர்கள் நம்பிக்கையுடன் செய்யலாம்.

- Advertisement -