வீட்டில் இருக்கும் பெண்கள் இந்த ஒரு விஷயத்தை கடைபிடித்தாலே போதும். அவர்களிடம் இருக்கும் தங்கநகை மேலும் மேலும் பல மடங்காக பெருகும்.

woman-with-gold
- Advertisement -

இன்றைய சூழ்நிலையில் தங்கம் விற்கும் விலையில் நம்மால் ஒரு குண்டுமணி தங்கத்தை புதியதாக வாங்க முடியுமா என்பதே கேள்விக்குறியான விஷயம் தான். அப்படி இருக்கும் போது நம்மிடம் இருக்கும் தங்க நகைகளையாவது பத்திரமாக பார்த்துக்கொள்ள வேண்டும். தங்க நகை அடமானதிற்கு செல்லாமல் இருக்கவும், தங்க நகைகள் வீட்டில் மேலும் மேலும் சேர்ந்து கொண்டே இருக்கவும், வீட்டில் தங்க நகைகளை எப்படி பராமரிக்க வேண்டும் என்பதை பற்றிதான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

கடையிலிருந்து வாங்கி வந்த தங்க நகையை வீட்டில் எடுத்து வைக்கும் போது, பெரும்பாலும் நகை கடையில் இருந்து கொடுத்த நகை பெட்டியில் தான் பத்திரப்படுத்தி வைப்போம். அப்படி செய்யாமல் தங்க நகைகளை வைப்பதற்கு என்று ஒரு மரப்பெட்டி வாங்கிக்கொள்ளுங்கள். மரப்பெட்டியில் தங்க நகைகளை வைத்து பத்திரப்படுத்தி வைத்தால் தங்க நகைகள் பல மடங்காக பெருகும் என்று சொல்லப்பட்டுள்ளது.

- Advertisement -

மரப்பெட்டியில் தங்க நகைகளை வைக்கும் போது, அப்படியே வைக்கக்கூடாது. சிவப்பு நிறத் துணியை அந்த பெட்டியில் விரித்து அதன் மேல் தங்க நகைகளை வைக்கவேண்டும். தங்கநகை வெள்ளிநகை என்று தனித்தனியாக பிரித்து வைத்துக் கொள்ளவேண்டும் என்பது குறிப்பிடத்தக்க விஷயம்.

Gold rate in Saravana stores

பெருமாள் கோவிலில் இருந்து கொடுக்கும் துளசி பிரசாதத்தை கொண்டு வந்து நகை பெட்டியில் வைக்க வேண்டும். குறிப்பாக அந்த துளசியை தங்க நகையின் மேல் படும்படி வைத்தால் வீட்டில் தங்கம் மேலும் மேலும் பெருகும்.

- Advertisement -

அடுத்தபடியாக உங்களுடைய தங்க நகையை இரவலாக யாருக்குமே கொடுக்காதீர்கள். இரவல் கொடுத்த நகை மீண்டும் திரும்பி வராமலும் போகலாம். இரவலாக கொடுத்த நகை மீண்டும் திரும்பவும் உங்கள் கை வந்து, அது உங்கள் கையில் தங்காமல் போவதற்கும் வாய்ப்பு உள்ளது.

women2

இறுதியாக ஒரு விஷயம். பெண்கள் இந்த ஒரு விஷயத்தை செய்யுங்கள். நிச்சயமாக உங்களுடைய வீட்டில் தங்க நகை பெருகிக் கொண்டே செல்லும். வீட்டில் வெள்ளிக்கிழமை அன்று மகாலட்சுமி பூஜை செய்யும் போது, பெண்கள் தங்களிடம் இருக்கக்கூடிய நகையில் ஏதாவது ஒன்றை எடுத்து அணிந்துகொண்டு மகாலட்சுமிக்கு பூஜை செய்யுங்கள். இப்படி செய்யும் பட்சத்தில் மகாலட்சுமியின் கடாட்சம் மேலும் மேலும் பெருகும். வீட்டில் தங்க நகை மேலும் மேலும் சேரும்.

gold

சிலபேர் தங்களிடம் இருக்கும் தங்க நகைகளை எடுத்து அணிந்து கொள்ளவே மாட்டார்கள். அப்படியே பீரோவில் வைத்துப் பூட்டி வைத்துக் கொள்வார்கள். இப்படி வாங்கிய நகைகளை போடாமல், தங்க நகைகள் பீரோவில் பூட்டி இருப்பதும் அவ்வளவு நல்ல விஷயம் கிடையாது. லக்ஷ்மி அம்சம் பொருந்திய தங்க நகைகளை, லட்சுமி அம்சம் பொருந்திய வீட்டுப் பெண்கள் அணிந்து கொண்டால் தான் அந்த நகைகள் வீட்டில் நிரந்தரமாக தங்கும் என்ற கருத்தோடு இந்த பதிவை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -