இந்த ஒரு கட்டை நம் வீட்டில் இருந்தால் தங்கம் தங்கு தடையின்றி சேரும்.

swarnalakshmi
- Advertisement -

பணத்திற்கு ஈடாக நாம் மதிக்கக் கூடிய ஒரு பொருள் என்றால் அதை நாம் தங்கம் என்று தான் கூற வேண்டும். இன்றைய காலகட்டத்தில் தங்கத்தின் விலைவாசி உயர்ந்து கொண்டே செல்வதால் பலருக்கும் அது எட்டா கனியாக இருக்கிறது. அப்படிப்பட்ட தங்கத்திற்கு அதிபதியாக விளங்கக்கூடியவர்தான் சுவர்ணலட்சுமி. இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் சுவர்ணலட்சுமியை நம் வீட்டிற்கு வழி வரவழைப்பதற்கு எந்த கட்டையை பயன்படுத்த வேண்டும் என்றுதான் பார்க்கப் போகிறோம்.

ஆன்மீகம் ரீதியாக தங்கத்திற்கு சமமாக கருதப்படுவது சந்தனம். பொதுவாக அனைத்து தெய்வீக காரியங்களிலும் சந்தனம் இடம்பெறாமல் இருக்கவே இருக்காது. சந்தனத்திற்கு அவ்வளவு மகத்துவம் இருக்கிறது. இன்றளவும் பல கோவில்களில் சந்தன மரக்கட்டையை உபயோகப்படுத்தி இழைத்தே தெய்வங்களுக்கு அபிஷேகங்கள் செய்யப்படுகிறது.

- Advertisement -

அப்படிப்பட்ட சந்தன மரக்கட்டையை நாம் எந்த வகையில் பயன்படுத்தினால் நம் வீட்டில் தங்கம் அதிக அளவில் சேரும் என்றுதான் பார்க்கப் போகிறோம். பொதுவாக சந்தனம் என்று நாம் சொன்னதும் சந்தன வில்லைகள், சந்தன பொடிகள் என்பவைதான் ஞாபகத்திற்கு வரும். ஆனால் அதையும் தாண்டி சுத்தமான சந்தன மரக்கட்டையை நாம் வாங்கி நம் வீட்டு பூஜை அறையில் வைத்து வழிப்பட மகாலட்சுமியின் அருள் நமக்கு பரிபூரணமாக கிடைக்கும் என்று கூறப்படுகிறது.

இதே சந்தன மரக்கட்டையை நம் வீட்டு வாசலில் கட்டி தொங்கவிடுவதன் மூலம் ஸ்வர்ணலட்சுமி நம் வீட்டிற்குள் எளிதாக வந்துவிடுவாள் என்றும் கூறப்படுகிறது. அது மட்டுமல்லாமல் வீட்டின் படுக்கை அறையிலோ அல்லது வீட்டின் எந்த அறைகளில் வேண்டுமானாலும் இந்த சந்தன கட்டையை நாம் வைப்பதன் மூலம் வீட்டில் அஷ்ட லட்சுமிகளின் அருளும் பரிபூரணமாக கிடைக்கும் என்றே கூறப்படுகிறது.

- Advertisement -

மேலும் சந்தன மரக்கட்டைகளை நாம் யாகம் செய்யும்பொழுது யாகத்தில் போட்டு எடுத்து வந்து வீட்டு பூஜை அறையில் வைத்தோம் என்றால் அதன் சக்திகள் நமக்கு பல மடங்காக அதிகரித்து நம் வீட்டில் என்றுமே ஸ்வர்ணம் நிலைத்து இருக்கும் என்று கூறப்படுகிறது. வீட்டில் எந்தளவுக்கு சந்தனத்தை நாம் உபயோகப்படுத்துகிறோமோ அந்த அளவிற்கு வீட்டில் ஒரு வித பரிசுத்தமான நிலை ஏற்படும் என்றும் கூறப்படுகிறது.

சுக்கிர ஹோரையில் சந்தன பொடியை வைத்து மகாலட்சுமி தாயாருக்கு அர்ச்சனை செய்வதன் மூலம் மகாலட்சுமியின் அருள் நமக்கு பரிபூரணமாக கிடைத்து சுவர்ணலட்சுமி அங்கு நிரந்தரமாக குடியேறுவாள் என்றும் கூறப்படுகிறது. மேலும் சந்தனத்தை நாம் தினமும் நெற்றியில் வைத்துக் கொள்வதன் மூலம் புதன் பகவானின் அருளும் நமக்கு பரிவூரணமாக கிடைத்து பொன் பொருள் சேர்க்கை உண்டாகும் என்றும் கூறப்படுகிறது.

இதையும் படிக்கலாமே: இறந்தவர்களை இப்படி வழிபட்டால் வீட்டில் லட்சுமி கடாட்சம் பெருகும்.

இந்த எளிமையான முறைகளை பின்பற்றி நாமும் நம் வீட்டில் சுவர்ணலட்சுமியை நிரந்தரமாக நிலைத்திருக்க செய்வோம்.

- Advertisement -