தங்கம் தாராளமாக சேர வழிபாடு

gold lakshmi
- Advertisement -

பணத்திற்கு எந்த அளவிற்கு நாம் முக்கியத்துவம் கொடுக்கிறோமோ அதே அளவிற்கு தங்கத்திற்கும் முக்கியத்துவம் கொடுப்போம். தங்கத்தை வாங்கி அணிந்து அழகு பார்ப்பவர்கள் இருக்கிறார்கள். அதே சமயம் தங்கத்தை வாங்கி அதை அனுபவிக்காமல் அப்படியே சேர்த்து வைப்பவர்களும் இருக்கிறார்கள். இன்னும் சிலருக்கு தங்கத்தை வாங்கி அதை அனுபவிக்க முடியாமல் ஏதாவது ஒரு காரணத்தினால் அடமானத்திற்கு செல்லும் சூழ்நிலையும் ஏற்படும்.

இன்னும் சிலருக்கு தங்கம் வாங்க வேண்டிய பாக்கியமே இல்லாமல் போய்விடும். இப்படி எந்த சூழ்நிலையாக இருந்தாலும் தங்கள் வீட்டில் சுப காரியத்திற்காக வாங்கக்கூடிய தங்கம் நிலையாக நிலைத்திருக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் எந்த முறையில் வழிபாடு செய்ய வேண்டும் என்றுதான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

- Advertisement -

தங்கத்தை வாங்கி அதை முழுமையாக அனுபவிப்பவர்கள் மகாலட்சுமிக்கு சமமாக கருதப்படுகிறார்கள். யாருக்கு ஸ்வர்ண தோஷம் இல்லையோ அவர்களால் மட்டும்தான் நகையை வாங்க முடியும். வாங்கிய நகையை போட்டு அழகு பார்க்க முடியும். நகையை வாங்கினாலும் போட்டு அழகு பார்க்க விருப்பம் இல்லாதவர்களாக இருந்தாலும், அழகு பார்க்க முடியாத சூழ்நிலைக்கு தள்ளப்பட்டவர்களாக இருந்தாலும், வாங்கவே முடியாத சூழ்நிலையில் இருப்பவர்களாக இருந்தாலும் அவர்களுக்கு சுவர்ண தோஷம் ஏற்பட்டிருக்கும்.

இந்த ஸ்வர்ண தோஷத்தை முதலில் நீக்கினால் தான் தங்கத்தை அவர்களால் வாங்க முடியும். அப்படி வாங்கிய தங்கம் நிலையாக இருக்கவும், ஸ்வர்ண தோஷம் முழுமையாக நீங்க வேண்டும் என்று நினைப்பவர்கள் அதற்குரிய பரிகாரத்தை செய்ய வேண்டும்.

- Advertisement -

நம்பிப் பதிகம் என்ற ஒரு பதிகம் இருக்கிறது அந்த பதிகத்தை தினமும் பாராயணம் செய்ய வேண்டும். இப்படி இந்த பதிகத்தை தினமும் பாராயணம் செய்யும் பொழுது சிவபெருமானின் அருளால் தங்கம் வாங்கும் சூழ்நிலை ஏற்படும். அப்படி நீங்கள் தங்கம் வாங்கும் பட்சத்தில் முதலில் ஒரு திருமாங்கல்யத்தை வாங்கி அந்த மாங்கல்யத்தை அம்மனுக்கு தானமாக தர வேண்டும். அடுத்ததாக மற்றொரு திருமாங்கல்யத்தை வாங்கி ஏழைப் பெண்ணின் திருமணத்திற்கு தானமாக தர வேண்டும்.

இப்படி செய்வதன் மூலம் ஸ்வர்ண தோஷம் முற்றிலும் நீங்கும். இதற்குப் பிறகு தங்கத்தை வாங்கினால் அது நிலையாக இருக்கும். மேலும் அவிட்ட நட்சத்திரம் வரக்கூடிய செவ்வாய்க்கிழமை அன்று தங்க நகையை வாங்க வேண்டும். வாங்கிய தங்க நகையை வீட்டிற்கு எடுத்து வந்து ஒரு சுத்தமான வெள்ளை துணியில் வைத்து மூட்டையாக கட்டி அதை உப்பு பானைக்குள் வைத்து விட வேண்டும்.

- Advertisement -

ஒரு நாள் முழுவதும் உப்பு பானைக்குள் வைத்த பிறகு அதை எடுத்து பசும்பாலில் போட்டு விட வேண்டும். பசும்பாலில் இருந்து எடுத்த அந்த தங்க நகையை பன்னீரில் போட்டு விட வேண்டும். பன்னீரில் இருந்து போட்டு எடுத்த பிறகு சுத்தமான தண்ணீரில் போட்டு நன்றாக கழுவி விட்டு ஈரம் இல்லாமல் தொடைத்துக் கொள்ள வேண்டும். துடைத்து வைத்திருக்கும் இந்த தங்க நகையை வீட்டில் இருக்கும் அம்மனின் படத்திற்கு மாட்டி அலங்காரம் செய்து கற்பூர தீப தூப ஆராதனை காட்ட வேண்டும்.

அன்றைய நாள் முழுவதும் தங்க நகைகள் அம்மனின் படத்திலேயே இருக்கட்டும். மறுநாள் காலை எப்பொழுதும் போல் பூஜை செய்து முடித்த பிறகு அந்த தங்க நகைகளை எடுத்து யாருக்காக நகையை வாங்கினோமோ அவர்களுக்கு போட்டு அழகு பார்க்க வேண்டும்.

இதையும் படிக்கலாமே: நினைத்த காரியம் நிறைவேற விநாயகர் வழிபாடு

இப்படி செய்வதன் மூலம் தங்க நகைகள் வாங்கக்கூடிய யோகமும் கிடைக்கும். வாங்கிய நகைகள் என்றும் நிலையாக நிரந்தரமாக நிலைத்து இருக்கும்.

- Advertisement -