தங்கம் வாங்கும் யோகத்தை பெற இந்த எளிய பரிகாரத்தை செய்யுங்க

vishnu selvam
- Advertisement -

எந்த ஒரு பொருளாக இருந்தாலும் அதற்கான விலை அதிகரிக்க அதிகரிக்க தான் அதற்கான மதிப்பும் அதிகரிக்கும். அந்த வகையில் தங்கம் விலை விண்ணைத் தொடும் அளவிற்கு உயர்ந்து கொண்டு செல்கிறது. அதே போல தங்கத்தை வாங்கி சேர்க்க வேண்டும் என்ற எண்ணமும் இப்போது தான் அனைவரிடத்திலும் அதிகரித்து வருகிறது. இப்படி வாங்க வேண்டும் என்று நினைத்த எல்லோராலும் தங்க நகை வாங்க வேண்டும்யெனில் அதற்கான யோகம் வர வேண்டும். அப்படியான யோகத்தை தர கூடிய எளிய பரிகாரத்தை ஆன்மீகம் குறித்த இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

தங்கம் சேர பரிகாரம்
தங்க நகையை வாங்கி சேர்க்க வேண்டும் என்ற எண்ணம் எல்லோர் மனதிலும் இருக்கத் தான் செய்கிறது. இதை பேராசை என்றெல்லாம் இப்பொழுது சொல்ல முடியாது. தங்க நகை என்பது சொத்து சேர்ப்பது என்ற நிலை தான் இப்போது உள்ளது. முன்பெல்லாம் தங்க நகை ஒரு அழகியல் சார்ந்த விஷயமாக மட்டும் இருந்தது. இப்பொழுது அப்படி இல்லை அவசர காலத்தில் உதவும் ஒரு மதிப்பிற்குரிய பொருளாகவும் உள்ளது.

- Advertisement -

தங்கம் சேருவதற்கான இந்த பரிகாரத்தை வியாழக்கிழமை அன்று காலையில் உணவருந்துவதற்கு முன்பாக செய்து விட வேண்டும். இதற்கு வாழைமரம் இருக்க வேண்டும். அது நம் வீட்டில் இருந்தால் செய்யலாம் இல்லையென்றால் வாழைத் தோட்டம் இருக்கும் இடத்திற்கு சென்று செய்யலாம். ஆனால் வாழை மரத்தடியில் தான் இந்த பரிகாரத்தை செய்ய வேண்டும்.

இந்த பரிகாரத்தை செய்ய நமக்கு விஷ்ணு பெருமாள் மகாலட்சுமி தாயார் உடன் இருக்கும் ஒரு படம் நிச்சயம் தேவை. இதை வாழ மரத்தடியில் ஒரு மனை அல்லது துணி போட்டு அதன் மேல் இந்த படத்தை வைத்து அதற்கு முன்பாக கடுகு எண்ணெய் ஊற்றி இரண்டு அகல் தீபம் ஏற்ற வேண்டும். ஏதேனும் ஒரு எளிய நெய்வேத்தியத்தை செய்து படைத்த பின்பு ஓம் நமோ நாராயணா என்ற இந்த மந்திரத்தை ஜெபித்து வணங்க வேண்டும்.

- Advertisement -

இப்படி வணங்கும் பொழுதே உங்களுக்கு தங்கம் வாங்க வேண்டிய யோகம் கிடைக்க வேண்டும் என்று வேண்டிக் கொள்ளுங்கள். ஒரு வேலை கையில் இருக்கும் தங்கம் அடகில் இருந்தாலும், தங்கம் வாங்க பணமே இருந்து வாங்க முடியவில்லை என்றாலும் இதுபோன்ற அனைத்து விதமான தோஷங்களையும் இந்த பரிகாரம் நீக்கி விடும்.

இதையும் படிக்கலாமே: வெள்ளிக்கிழமை இந்த விளக்கை ஏற்றினால், குலதெய்வத்தின் ஆசிர்வாதத்துடன் ஐஸ்வர்யமும் சேரும்.

இன்றைய காலத்திலும் கூட ஒரு போட்டு தங்கம் கூட வாங்க முடியாத எண்ணற்றோர் இருக்கத் தான் செய்கிறார்கள். அப்படி ஆனவர்கள் கூட இந்த வழிபாடை மாதத்திற்கு ஒரு முறை செய்து வரும் பொழுது அவர்கள் தங்கம் வாங்குவதற்கான யோகம் நிச்சயம் கிடைக்கும் என்று சொல்லப்பட்டிருக்கிறது. நம்பிக்கையுடன் இந்த பரிகாரத்தை செய்து தங்க நகையை அதிக அளவில் சேர்த்து மகிழ்ச்சியாக வாழுங்கள்.

- Advertisement -