வெள்ளிக்கிழமை, வெள்ளியை வெற்றிலையோடு சேர்த்து இப்படி வைத்தால் தங்கம் தானாக வந்து சேரும்.

vetrilai-lakshmi
- Advertisement -

நிறைய தங்கத்தை வாங்க வேண்டும் என்ற ஆசை எலலோருக்கும் இருக்கும். ஆனால் தங்கம் வாங்க கையில் காசு பணம் இருக்காது. எப்படியாவது கஷ்டப்பட்டு காசு பணத்தை சேர்த்து வீட்டில் தங்கத்தை சேர்ப்பது வீட்டிற்கு ஐஸ்வர்யத்தை கொண்டு வந்து சேர்க்கும். இது ஒரு பக்கம் இருக்க, நம் கையில் பணமாக வைத்திருந்தால் அந்த பணம் செலவாகி விடும். அதையே தங்கமாக வாங்கி வைத்தால் அந்த தங்கம் வீட்டிற்கு லட்சுமி கடாட்சத்தை கொடுப்பதோடு, அவசரத் தேவைக்கு மட்டும் அந்த தங்கத்தை மீண்டும் பணமாக மாற்றவும் வசதியாக இருக்கும்.

எல்லா விதத்திலும் இந்த தங்கம் நமக்கு பயனுள்ள ஒரு உலோகமாக தான் இருக்கின்றது. வீட்டில் நிறைய தங்கத்தை சேர்க்க வேண்டும் என்று நினைப்பவர்கள் சுலபமான இந்த தாந்திரீக பரிகாரத்தை செய்து பாருங்கள். தங்கத்தை விட விலை குறைவானது தான் வெள்ளி. ஆனால் மதிப்பில் தங்கத்தை விட பல மடங்கு உயர்ந்தது இந்த வெள்ளி. தங்கத்தை ஈர்க்கக் கூடிய சக்தி இந்த வெள்ளிக்கு உள்ளே அடங்கி இருக்கிறது.

- Advertisement -

வெள்ளிக்கிழமை உங்களுடைய வீட்டில் எப்போதும் போல பூஜையை செய்யது முடித்து விடுங்கள். பூஜை அறையில் தீபம் எரிந்து கொண்டிருக்கும் அல்லவா. அப்போது ஒரு சிறிய தட்டில் மேலே ஒரு வெற்றிலையை வைத்து, அந்த வெற்றியின் மேலே ஒரு வெள்ளி பொருளை வைக்க வேண்டும். வெள்ளி நாணயம், வெள்ளி மோதிரம், கம்மல், வெள்ளி டாலர், இப்படி எதுவாக இருந்தாலும் சரி அதை நீங்கள் பயன்படுத்தி இருந்த வெள்ளையாக இருந்தாலும் மஞ்சள் தண்ணீரில் அந்த வெள்ளியை கழுவிவிட்டு இந்த பரிகாரத்திற்க்கு பயன்படுத்திக் கொள்ளலாம்.

வெற்றிலைக்கு மேலே வைத்த வெள்ளி பொருளுக்கு மஞ்சள் பொட்டு வைக்க வேண்டும். மஞ்சளில் கொஞ்சமாக பன்னீர் ஊற்றி குழைத்து வாசனையாக தயார் செய்து கொள்ளுங்கள். அந்த மஞ்சளை சிறிய உருண்டையாக பிடித்து எடுத்து வெள்ளி பொருளுக்கு மேலே வைத்து விடுங்கள். இதை அப்படியே பூஜை அறையில் வைத்து மகாலட்சுமியை வேண்டிக்கொள்ள வேண்டும். இந்த ஒரு சிறிய வெள்ளி பொருளை மஞ்சள் வைத்து பூஜித்து மகாலட்சுமி தாயாரிடம் வேண்டிக் கொண்டால், உங்கள் வீட்டில் தங்கம் தானாக வந்து சேரும்.

- Advertisement -

பூஜையை முடித்துவிட்டு சிறிது நேரம் கழித்து வெற்றிலையோடு அந்த வெள்ளி நகையை உங்கள் வீட்டு பீரோவில் வைத்து விடுங்கள். மறுநாள் காலை வெற்றிலையை எடுத்து கால் படாத இடத்தில் போட்டுவிட்டு, வெள்ளி நகையை தேவைப்பட்டால் நீங்கள் அணிந்து கொள்ளலாம். இல்லை என்றால் அதை அப்படியே பீரோவில் வைத்துக் கொள்ளலாம்.

வாரம் தோறும் வெள்ளிக்கிழமை அன்று வெள்ளிக்கு மஞ்சள் போட்டு வைத்து பூஜை அறையில் வழிபாடு செய்து வரும் போது உங்களுடைய வீட்டில் தங்கம் மேலும் மேலும் சேரும். நீங்கள் வேண்டும் என்றால் முயற்சி செய்து பாருங்கள். தொடர்ந்து ஏழு வாரங்கள் இந்த பூஜையை செய்து வர உங்களுடைய வீட்டில் ஒரு குண்டுமணி தங்கம் ஆவது நிச்சயம் சேரும். தங்கம் வாங்க வேண்டும் என்ற ஆசையும் கனவும் உங்கள் ஆழ்மனதில் இருக்கவேண்டும். கூடவே சேர்ந்து இந்த பரிகாரத்தை செய்யும் போது அந்த கனவு நிச்சயம் பலிக்கும்.

- Advertisement -