தங்கம் கிடுகிடுன்னு சேர பரிகாரம்

vilakku1
- Advertisement -

தங்கத்தோட விலை தான் கிடுகிடுன்னு உயருது. நம்மால் அந்த தங்கத்தை கிடுகிடுன்னு வாங்கி சேர்ப்பது ஒன்றும் அவ்வளவு சுலபமான விஷயம் அல்ல. அது எல்லோருக்கும் தெரியும். ஆனால் வீட்டில் இருக்கும் பெண் பிள்ளைக்கு திருமணம் செய்து வைக்க வேண்டும் என்றாலோ அல்லது காதுகுத்து விசேஷம் என்றாலோ நிச்சயமாக அந்த தங்கம் நமக்கு தேவைப்படும்.

புதுசாக தங்கம் வாங்க வேண்டிய சூழ்நிலை உண்டாகும். அது மட்டும் இல்லாமல் நம் வீட்டில் இருக்கும் தங்கம் அடமானத்தில் இருந்தால் அதை மீட்கவும் இந்த பரிகாரத்தை நீங்கள் செய்யலாம். நம்பிக்கையோடு 12 ஞாயிற்றுக்கிழமைகள் இந்த விளக்கை ஏற்றுங்கள். நிச்சயம் உங்களுடைய தங்கம் வாங்கும் கோரிக்கை நிறைவேறும். அடமானத்தில் இருக்கும் தங்கத்தை திரும்பவும் மீட்டு எடுப்பீர்கள்.

- Advertisement -

தங்கம் வாங்க தீப வழிபாடு

ஞாயிற்றுக்கிழமை மாலை நேரத்தில் இந்த விளக்கை நிலை வாசல் படியில் ஏற்றலாம். இரண்டு மண் அகல் விளக்குகள் எடுத்துக்கோங்க. ஒரு சின்ன தட்டில் இந்த இரண்டு விளக்குகளையும் வைத்துக் கொள்ளவும். இந்த மண் அகல் விளக்கில் சுத்தமான பசு நெய் ஊற்றி, திரி போட்டு, விளக்கு ஏற்றி வைத்து விடுங்கள்.

விளக்கு ஏற்றிய பின்பு விளக்கெண்ணையிலிருந்து ஒவ்வொரு சொட்டு எடுத்து இந்த இரண்டு விளக்கின் உள்ளே இருக்கும் நெய்யில் விட வேண்டும். அவ்வளவுதான் விளக்கை ஏற்றி வைத்துவிட்டு மனதார உங்களுடைய பிரார்த்தனையை செய்து கொள்ளுங்கள். நிலை வாசலுக்கு வெளியில் இந்த விளக்கை ஏற்றி வைத்தால் போதும்.

- Advertisement -

குறைந்தபட்சம் இந்த விளக்கு ஒரு மணி நேரம் எரிந்து முடியட்டும். ஒரு மணி நேரத்துக்கு பிறகு இந்த விளக்கு தானாக மலையேறட்டும். நீங்களே இந்த விளக்கை குளிர வைக்க வேண்டாம். தொடர்ந்து பன்னிரண்டு ஞாயிற்றுக்கிழமை இந்த விளக்கை நீங்கள் ஏற்றி முடிப்பதற்குள்ளாகவே தங்கத்தை பற்றிய ஒரு நல்ல செய்தி உங்கள் குடும்பத்திற்கு கிடைக்கும்.

புதுசாக தங்கம் வாங்கும் யோகம் கிடைக்கலாம், இல்லை என்றால் அடமானத்தில் வைத்த நகையை மீட்டெடுக்கும் வாய்ப்புகளும் கிடைக்கலாம். நம்பிக்கையோடு செய்யும் பட்சத்தில் இந்த பரிகாரம் நிச்சயம் உங்களுக்கு பலன் தரும்.

- Advertisement -

ஞாயிற்றுக்கிழமை என்றாலே நம்முடைய நினைவுக்கு வருவது அசைவ சாப்பாடு தான். அசைவம் சாப்பிட்டு விட்டு இந்த விளக்கை ஏற்றலாமா என்று யோசிக்காதீங்க. அசைவம் சாப்பிட்டு விட்டு இந்த விளக்கை ஏற்றுவது தவறு. அசைவம் சாப்பிடாமல் 12 ஞாயிற்றுக்கிழமை இந்த விளக்கை ஏற்றி பாருங்கள். நடக்கும் மாற்றத்தை நீங்களே புரிந்து கொள்வீர்கள்.

இதையும் படிக்கலாமே: சுக்கிரனின் அருள் ஆசியை பெற்றுத் தரும் விளக்கு

உங்களுக்கு பலன் கிடைத்த ஒரு சில வாரங்களில் இந்த பரிகாரத்தை, நீங்கள் உங்களுக்குத் தெரிந்தவர்களுக்கு பகிரும் அளவுக்கு நம்பிக்கை வந்துவிடும். மேல் சொன்ன பரிகாரத்தை பல பேர் செய்து பலன் அடைந்துள்ளார்கள் என்பதையும் இந்த இடத்தில் உங்களோடு பகிர்ந்து கொண்டு இந்த ஆன்மீகம் சார்ந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -