சுக்கிரனின் அருள் ஆசியை பெற்றுத் தரும் விளக்கு

sukkiran1
- Advertisement -

பொதுவாகவே ஒவ்வொரு வண்ணங்களுக்கும் ஒவ்வொரு சிறப்பு இருக்கிறது. ஒவ்வொரு ஆடையை நாம் உடுத்திக் கொண்டு ஒவ்வொரு செயல்பாடுகளை செய்யும் போது ஒவ்வொரு விதமான பலன் நமக்கு கிடைக்கும். அந்த வரிசையில் கோவிலுக்கு செல்லும்போது எந்த நிற ஆடையை உடுத்தினால், என்ன பலன் கிடைக்கும் என்பதை பற்றியும், வெள்ளிக்கிழமை சுக்கிர பகவானின் அருள் ஆசியை முழுமையாக பெறுவதற்கு எந்த நிறத்தில் ஆடையை அணிய வேண்டும் என்பதை பற்றிய தகவலையும் இந்த ஆன்மீகம் சார்ந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள போகின்றோம்.

சுக்கிரனின் அருள் கிடைக்க

நீங்கள் எந்த கிழமையில் கோவிலுக்கு சென்று இறைவழிபாடு செய்தாலும் சரி, மஞ்சள் நிறத்தில் ஆடையை அணிந்து கொள்வது பொதுப்படையாக உங்களுக்கு நன்மையை கொடுக்கும். மங்களகரத்தை கொடுக்கும். இது எல்லோருக்கும் தெரிந்த விஷயம் தான். எல்லோருக்கும் தெரிந்த விஷயமாக இருந்தாலும் இதை இந்த இடத்தில் பதிவு செய்து கொள்வோம்.

- Advertisement -

அடுத்தபடியாக பச்சை நிற ஆடையை அணிந்து செல்லலாம். தொழிலில் வெற்றி பெற, நன்றாக கல்வியில் சிறந்து விளங்க, நல்ல லாபத்தை பெற்று தரக்கூடிய ஆடை பச்சை நிற ஆடை. கூடுமானவரை சிவப்பு நிற ஆடையை உடுத்திக் கொண்டு கோவிலுக்கு சென்று இறைவழிபாடு செய்வதை தவிர்த்துக் கொள்வது நல்லது.

சிவப்பு அப்படி என்பது கெட்ட நிறம் அல்ல. சிவப்பு நிற ஆடையை உடுத்திக் கொண்டு கோவிலுக்கு சென்றால் ஏற்ற இறக்கங்கள், நன்மை தீமைகள் எல்லாம் உங்களுக்கு அடுத்தடுத்து ஏருக்கு மாறாக நடந்து கொண்டே இருக்கும் என்பது குறிப்பிடத்தக்க ஒரு விஷயமாக சொல்லப்பட்டுள்ளது.

- Advertisement -

வெள்ளிக்கிழமை வெள்ளை நிற பட்டு ஆடை போட்டுக்கோங்க. ஆண்களாக இருந்தாலும் சரி பெண்களாக இருந்தாலும் சரி. வீட்டிலேயே வெள்ளிக்கிழமை என்றால் மகாலட்சுமிக்கு பூஜை செய்வீர்கள். அது சுக்கிர பகவானுக்கும் உரிய பூஜையும் தான். வெள்ளிக்கிழமை என்பது சுக்கிரனுக்கும் உரிய நாளாக நமக்கு சொல்லப்பட்டுள்ளது.

இந்த நாளில் வெள்ளை நிற பட்டு ஆடையை அணிந்து கொண்டு, வீட்டில் ஒரு விளக்கில், ஆறு திரிகளை போட்டு விளக்கு ஏற்ற வேண்டும். 6 திரிகளை தனித்தனியாக போடுங்கள். நான்கு திசையை பார்த்து நான்கு திதி இருக்கும். அதற்கு இடையிடையே இன்னும் இரண்டு திரியை வைத்து விடுங்கள். அவ்வளவுதான்.

- Advertisement -

இந்த அகல் விளக்குக்குள் 6 வெள்ளை மொச்சையை போட்டுவிட்டு இந்த தீபத்தை ஏற்றி வைத்து, வெள்ளிக்கிழமை வழிபாடு செய்தால் அந்த சுக்கிர பகவானின் அனுகிரகம் உங்களுக்கு ஒட்டுமொத்தமாக கிடைக்கும். அல்லது உங்களுக்கு ஆறு முகங்கள் கொண்ட விளக்கு கிடைத்தால் இன்னும் சிறப்பு. பித்தளையிலேயே அப்படி ஒரு விளக்கை வாங்கி சுக்கிரனுக்காக தனியாக வெள்ளிக்கிழமை பூஜை அறையில் ஏற்றி வாருங்கள்.

இதில் இன்னும் மிக மிக சிறப்பான பலன் நமக்கு கிடைக்க வேண்டும் என்றால் வெள்ளியில் இருக்கக்கூடிய விளக்கில், நெய் ஊற்றி தீபம் ஏற்ற வேண்டும். இதற்கு கொஞ்சம் செலவு அதிகமாக ஆகும். உங்களால் முடியும் எனும் பட்சத்தில் இந்த வழிபாட்டை பின்பற்றலாம். உங்களுடைய செல்வ வளம் மேலும் மேலும் உயர இந்த எளிமையான பரிகாரம் உங்களுக்கு பயன்படும்.

எங்களிடம் வெள்ளை நிற பட்டாடையே கிடையாது என்று ஒரு நிலைமை உங்களுக்கு இருந்தால் கூட, வெள்ளை நிறத்தில் சுத்தமான பட்டில், ஒரு சின்ன துண்டு வாங்கிக்கோங்க. அதை உங்களுடைய இடுப்பில் கட்டிக்கொண்டு தீபம் ஏற்றினாலும் சுத்திரனின் அனுகிரகம் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்கலாமே: பண வரவை அதிகரிக்க வெள்ளிக்கிழமை விநாயகர் வழிபாடு

வாரந்தோறும் தொடர்ந்து வெள்ளிக்கிழமை இந்த வழிபாட்டை செய்தால் சுக்கிர பகவான் உங்கள் வீட்டில் செல்வக் கடாட்சத்தை நிறைவாக கொடுத்துக் கொண்டே இருப்பார் என்ற தகவலுடன் இந்த ஆன்மீகம் சார்ந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -