வீட்டில் தங்க மழை பொழிய இந்த ஒரு பரிகாரத்தை செய்தாலே போதும். என்றும் நிரந்தரமாக சுவர்ணலட்சுமி இல்லத்தில் குடியேறி சந்தோஷமாக இருப்பாள்.

thangam sera
- Advertisement -

யாருக்கு தான் தங்கத்தின் மீது ஆசை இல்லாமல் இருக்கும். அதுவும் குறிப்பாக பெண்களுக்கு தங்க நகைகள் அணிய வேண்டும் என்ற ஆசை அதிகமாகவே இருக்கும். பாரம்பரியமான நகைகள் என்று பல நகைகள் இருந்தாலும் வருடத்திற்கு ஒரு முறையாவது புதிதாக நகைகளை வாங்கி சேர்க்க வேண்டும் என்று தான் ஆசைப்படுவார்கள். இந்த ஆசையை நிறைவேற்றுவதற்கு நமக்கு குரு பகவானின் அருளும் ஸ்வர்ணலட்சுமி ஆன மகாலட்சுமி தாயாரின் அருளும் பரிபூரணமாக வேண்டும். இவர்களின் அருள் இருந்தால்தான் நம்மால் தங்க நகைகளை வாங்க முடியும் அதே சமயம் அந்த தங்க நகைகளை நம்முடன் தக்க வைத்துக் கொள்ளவும் முடியும். இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் தங்க நகை சேரவும் அது என்றும் நிரந்தரமாக நம்முடன் இருக்கவும் செய்ய வேண்டிய எளிய பரிகார முறையை தான் பார்க்கப் போகிறோம்.

குரு பார்க்க கோடி நன்மை என்று கூறுவார்கள். குரு பகவானின் அருள் இருந்தால்தான் நமக்கு நன்மைகள் கிடைக்கும் என்றும் கூறப்படுகிறது. குரு பகவானின் அருள் மட்டும் இருந்தால் போதுமா? மகாலட்சுமி தாயாரின் அருளும் நமக்கு வேண்டும். அப்படி இருந்தால் தான் செல்வ செழிப்புடன் வாழ முடியும். தங்கத்தை வாங்குவதற்கு பணம் தேவைப்படும். பணத்தை தருபவள் மகாலட்சுமி தாயார். பணம் நம்மிடம் இருந்தால் அந்த பணத்தை வைத்து தங்கத்தை நாம் சேர்க்கலாம். அந்த தங்கம் நிரந்தரமாக நிலைத்திருக்க பல வழிமுறைகள் இருக்கின்றன. அதில் ஒன்றை தான் இன்று நாம் பார்க்க போகிறோம்.

- Advertisement -

குரு பகவானின் அருள் வேண்டும் என்பதால் நாம் குருவாரமான வியாழக்கிழமை தான் இந்த பரிகாரத்தை செய்ய வேண்டும். அதுவும் குரு ஹோரையான காலை 6:00 மணி முதல் 7:00 மணிக்குள் இந்த பரிகாரத்தை செய்து விட வேண்டும். இந்த பரிகாரத்திற்கு நமக்கு தேவைப்படுவது ஒரு மஞ்சள் நிற துணி. கடையிலிருந்து மஞ்சள் நிற துணியை அப்படியே வாங்கி வரலாம். அவ்வாறு இல்லாவிட்டால் வெள்ளை நிற துணியை வாங்கி வந்து மஞ்சள் மற்றும் பன்னீரில் நனைத்து காய வைத்தும் எடுத்துக் கொள்ளலாம்.

குரு பகவானின் ஆதிக்க எண்ணாக கருதப்படுவது 3. இந்த மஞ்சள் நிற துணியில் 3 ஜாதிக்காய் வைக்க வேண்டும். ஜாதிக்காய்க்கு தங்கத்தை வசப்படுத்தும் தன்மை இருக்கிறது. அடுத்ததாக அதனுடன் 3 மல்லிகை பூவை வைக்க வேண்டும். மல்லிகை பூ மகாலட்சுமியின் அம்சம் என்பது நம் அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான். இதனுடன் நாம் எந்த பொருளை வைக்கிறோமோ அந்த பொருள் நமக்கு பல மடங்கு அதிகரிக்கும் என்பதால் இதனுடன் நாம் உபயோகப்படுத்தாத புதிதாக வாங்கிய ஒரு குண்டு மணி தங்கமாவது வைக்க வேண்டும். புதிதாக உபயோகப்படுத்தாத தங்கம் இல்லாத பட்சத்தில் நாம் ஏற்கனவே உபயோகப்படுத்திய தங்கத்தை கல் உப்பு கலந்த நீரில் சுத்தம் செய்துவிட்டு இதில் வைத்துக் கொள்ளலாம்.

- Advertisement -

பிறகு பேப்பர் மடிப்பது போல் இந்த மஞ்சள் நிற துணியை நாம் மடிக்க வேண்டும். மடித்த இந்த துணியை நாம் நகை வைக்கும் இடத்தில் வைக்கலாம் அல்லது பணம் வைக்கும் இடத்தில் வைக்கலாம். வாரத்திற்கு ஒரு முறை மட்டும் இதில் இருக்கும் மல்லிகை பூவை மாற்றிவிட்டு புதிதாக மல்லிகை பூவை வைக்கலாம். ஜாதிக்காயில் ஏதேனும் பூச்சி ஏற்பட்டு இருந்தால் அப்பொழுது அந்த ஜாதிக்காயை மாற்றி விடலாம்.

இதையும் படிக்கலாமே: பிள்ளைகள் கவனச் சிதறலால் படிப்பில் சிறந்து விளங்க முடியவில்லையா? அவர்கள் மனதை ஒருநிலைப்படுத்துவதற்கு இந்த வழிமுறைகளை பின்பற்றி பாருங்கள். படிப்பில் சிறந்து விளங்குவதோடு வாழ்க்கையில் பல வெற்றிகளை அடைவார்கள்.

இவ்வாறு செய்வதன் மூலம் குரு பகவானின் அருளும் மகாலட்சுமி தாயாரின் அருளும் பரிபூரணமாக பெற்று நம் வீட்டில் தங்கமானது நிலையாக நிலைத்து நின்று மேலும் அதிகரித்துக் கொண்டே இருக்கும்.

- Advertisement -