தங்கம் வாங்கும் யோகம் பெற பரிகாரம்

nellikai
- Advertisement -

நிறைய தங்க நகை வாங்க வேண்டும் என்ற ஆசை பெண்களுக்கும் இருக்கும். ஆண்களுக்கு இருக்கும். ஆனால் ஆண்களை ஒப்பிட்டு பார்க்கும்போது, இந்த ஆசை பெண்களுக்கு அதிகமாக தான் இருக்கும். உங்களுடைய வீட்டிலும் நிறைய தங்க நகை வாங்க வேண்டும் என்ற ஆசை இருக்குதா. உங்க வீட்டு தங்க நகையோடு இந்த ஒரு பொருளை எப்போதும் சேர்த்து வையுங்க போதும்.

தங்கம் வாங்கும் யோகத்தை அந்த ஸ்வர்ணலட்சுமி உங்களுக்கு கொடுத்துக் கொண்டே இருப்பாள். அது என்ன ஒரு பொருள். அந்த பொருளை எப்படி கொண்டு வந்து நகை வைக்கும் பெட்டியில் வைப்பது. ஆன்மீகம் சார்ந்த பதிவை தொடர்ந்து படித்து தெரிந்து கொள்வோம் வாருங்கள்.

- Advertisement -

தங்க நகை சேர பரிகாரம்

இந்த பரிகாரத்திற்கு நமக்குத் தேவை நெல்லிக்கொட்டை. அருகம்புல் பொடி. இது இரண்டு மட்டும்தான். நெல்லி கொட்டையை நாம் எப்படி எடுப்பது. பெரிய நெல்லிக்காய் வாங்கி அதை வெட்டி உள்ளே இருக்கும் கொட்டைகளை எடுத்து நிழலிலேயே உலர வைத்து, அந்த கொட்டைகளை பரிகாரத்திற்கு பயன்படுத்தலாம். இல்லை நாட்டு மருந்து கடைகளில் நெல்லிக்கொட்டை விற்கிறது.

அதை வாங்கியும் பரிகாரத்திற்கு பயன்படுத்திக் கொள்ளலாம். இந்த நெல்லிக்கொட்டையை வாங்கி ஒரு வெள்ளிக்கிழமையில் மகாலட்சுமியின் பாதங்களில் வைத்து பூஜை செய்யுங்கள். மேலும் மேலும் தங்கம் சேரனும் என்று வேண்டிக் கொள்ளுங்கள். பூஜை செய்த இந்த நெல்லிக்கட்டையை எடுத்து ஒரு நூலில் கோர்த்து தங்க நகை கழுத்தில் அணிந்திருப்பீர்கள் அல்லவா, அதில் கட்டிக் கொண்டாலும் சரி, உங்களோடு இந்த நெல்லிக்கொட்டை இருக்கும். 

- Advertisement -

அப்படி செயினில் போட முடியாது என்றால் இந்த நெல்லிக்கோட்டையை பீரோவில், நகை வைக்கும் பட்டியில் வைக்கணும். நெல்லிக்குட்டை தங்கத்தோடு இருந்தால் தங்கம் இரண்டு மடங்கு அதிகமாக சேரும் என்று சொல்லப்பட்டுள்ளது. நெல்லி கொட்டையில் செய்த ஆபரணத்தை பெண்கள் அணிந்து கொண்டால் தங்கம் சீரும் அவ்வளவுதான். அதை ஒரு நூலால் கட்டி கழுத்தில் போட்டாலும் சரி அது உங்கள் சௌகரியம். கையில் பிரேஸ்லெட் போல கூட அணிந்து கொள்ளலாம். இந்த குறிப்பை முயற்சி செய்து பாருங்கள்.

சரி, இந்த அருகம்புல் பொடி எதற்கு. அருகம்புல் என்றாலே தடைகளை தகர்க்க கூடிய ஒரு விஷயம் தான். இந்த அருகம்புல் பொடியில் வெள்ளிக்கிழமை தூபம் போட வேண்டும். சாம்பிராணி தூபம் வழக்கம் போல போடுவீங்க. அந்த புகையில் இந்த அருகம்புல் பொடியை போட்டு அந்த வாசம் வீடும் முழுவதும் நிரம்பி இருந்தாலும், ஐஸ்வர்ய கடாட்சம் பெருகும் என்று சொல்லப்பட்டுள்ளது.

இதையும் படிக்கலாமே: கெட்ட நேரத்தையும் நல்ல நேரமாக மாற்றும் மிளகு பரிகாரம்

எப்போதும் இரண்டு அருகம்புல் பூஜை அறையில் இருக்கட்டும். அது காய்ந்து போய் இருந்தால் கூட அதனுடைய மகத்துவம் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. காரியத்த தடையை சரி செய்யும். உங்களோடு இரண்டு அருகம்புல் வைத்திருந்தாலும் அது நல்லது தான். மேல் சொன்ன ஆன்மீகம் சார்ந்த இந்த இரண்டு விஷயங்களில் உங்களுக்கு நம்பிக்கை இருந்தால் பின்பற்றி பலன் பெறலாம்.

- Advertisement -