10 தலைமுறைக்கு பஞ்சமே இல்லாமல் தங்கம் உங்கள் வீட்டில் தங்க வேண்டுமா? தென்மேற்கு மூலையில் எப்போதும் இந்த முடிச்சை கட்டி வையுங்கள்.

- Advertisement -

இன்றைக்கு தங்கம் விற்கக்கூடிய விலைக்கு ஒரு குண்டுமணி தங்கத்தை கூட, சராசரி வருமானத்தில் குடும்பம் நடத்துபவர்களால் வாங்க முடியாது. இருப்பினும் கல்யாணம் காதுகுத்து போன்ற சுப நிகழ்ச்சிகள் என்றால், தங்கத்துக்கே முன்னுரிமை. அதுமட்டுமில்லாமல் தங்கம் வாங்குவது என்பது வீட்டுக்கு ஐஸ்வர்ய கடாச்சம். நமக்கு மட்டுமல்லாமல் நமக்கு அடுத்து வரக்கூடிய சந்ததியினருக்கு கூட தங்கம் வாங்கக்கூடிய யோகம் கிடைக்க வேண்டும் என்றால், நாம் செய்ய வேண்டிய ஒரு பரிகாரத்தை தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

அந்த பெருமாளையும் மகாலட்சுமி தாயையும் மனதில் நிறுத்தி இந்த முடிச்சினை உங்களுடைய வீட்டில், உங்கள் வீட்டுப் பெண் குழந்தையின் கையால் கட்டி வைத்து பாருங்கள். தங்கம் வாங்கக்கூடிய யோகம் ஏதாவது ஒரு ரூபத்தில் உங்களுக்கு வந்து கொண்டே இருக்கும். அதற்கான அனுகிரகத்தை ஆசீர்வாதத்தை அந்த மகாலட்சுமி தாய் நிச்சயம் வழங்குவாள்.

- Advertisement -

தங்கம் வாங்க தென்மேற்கு மூலையில் வைக்க வேண்டிய முடிச்சு:
இந்த பரிகாரத்தை புதன்கிழமை அன்று செய்ய வேண்டும். புதன் கிரகம் பெருமாளுக்கு உரிய கிரகமாக சொல்லப்பட்டுள்ளது. பொன் பொருள் சேர்க்கைக்கு புதன்கிழமை வழிபாடு சிறப்பினை தரும். பொன் கிடைத்தால் கூட, புதன் கிடைக்காது என்று சொல்லுவார்கள் அல்லவா. அதற்கு இணையாக சொல்லப்பட்டுள்ள ஒரு பரிகாரம் தான் இது.

ஒரு மஞ்சள் துணியை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் கொஞ்சம் மஞ்சள், கொஞ்சம் குங்குமம் உங்கள் வீட்டில் இருக்கக்கூடிய ஏதாவது ஒரு குண்டுமணி தங்கம், தங்க திருகாணி இருந்தால் கூட போதும். அந்த முடிச்சில் வைத்து சிறிய மூட்டையாக மஞ்சள் நூலில் கட்டி, இதை அப்படியே உங்கள் வீட்டு தென்மேற்கு மூலையில் வைத்து விட வேண்டும். உள்ளே இருக்கும் தங்கத்தை அடிக்கடி வெளியே எடுத்து பயன்படுத்தக் கூடாது. அந்த தங்கம் அப்படியே தென்மேற்கு மூலையில் இருக்கட்டும்.

- Advertisement -

இந்த முடிச்சை வீட்டில் இருக்கும் பெண்கள் கையால் கட்ட வேண்டும். வீட்டில் இருக்கும் பெண் குழந்தைகளின் கையால் செய்ய சொல்லுங்கள். குலதெய்வத்தை வேண்டி பெருமாளை வேண்டி மகாலட்சுமி தாயை வேண்டி முடிச்சை கட்டிக் கொள்ளுங்கள். உங்கள் வீட்டில் பெண் பிள்ளைகள் இல்லை என்றால், அம்மாவின் கையால் இதை செய்து வைக்கலாம். பெண்கள் மகாலட்சுமியின் அம்சம் பொருந்தியவர்கள் என்பதால் பெண்கள் கையால் இந்த பரிகாரத்தை செய்வது சிறப்பு. அதைப்போல தென்மேற்கு மூலையில் நீங்கள் எந்த ஒரு விஷயத்தை வேண்டி, எந்த பொருளை வைக்கிறீர்களோ, அந்த பொருள் மேலும் மேலும் சேரும் என்பது நம்பிக்கை.

மங்களகரத்தை கொடுக்கும் மஞ்சள் குங்குமத்தோடு சேர்ந்து தங்கம் தென்மேற்கு இருக்கின்றது. உங்களுடைய வீட்டில் மங்கள நிகழ்சிகளுக்கு வாங்க வேண்டிய தங்கம் மேலும் மேலும் பெருக வேண்டும் என்பதற்காகவே இந்த பரிகாரத்தை செய்கின்றோம். மன நிறைவோடு இந்த பரிகாரத்தை செய்து வையுங்கள். வீட்டில் இருக்கும் தங்கம் நிலையாக தங்கும். அதே சமயம் புதுசாக தங்கம் வாங்கக்கூடிய யோகத்தையும் அந்த பெருமாள் மகாலட்சுமி தாயார் உங்களுக்கு கொடுத்துக் கொண்டே இருப்பார்கள்.

இதையும் படிக்கலாமே: மண் சட்டியை பூஜை அறையில் இப்படி வைத்து பூஜை செய்து பாருங்களேன். பணம், நகை எல்லாம் அட்சய பாத்திரத்தில் வைத்து போல பல மடங்கு பெருகிக் கொண்டே இருக்கும்.

எல்லோர் மனதிலும் நிச்சயமாக ஒரு எண்ணம் தோன்றும். இப்போது விக்கிற விலை வாசிக்கு தங்கம் வாங்கக்கூடிய வாய்ப்பே கிடையாது என்று. அப்படி தவறாக எண்ணக்கூடாது. உங்கள் வீட்டு குழந்தைக்கு திருமணம் நடக்கும்போது மாங்கல்யம் செய்வதற்கு தங்கம் கட்டாயம் தேவைப்படும். அந்த தங்கத்தை சிறக சிறுக சேர்க்கவும் இந்த பரிகாரம் நிச்சயம் உங்களுக்கு கை மேல் பலனை கொடுக்கும். தேவை என்பவர்கள் இந்த ஆன்மீகம் சார்ந்த பரிகாரத்தை செய்து பலன் பெறலாம் என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -