தங்கு தடையின்றி தங்கம் வாங்கும் கொடுப்பினையை நீங்கள் பெற வேண்டுமா? மஞ்சள் துணியில் மகாலட்சுமியை வேண்டி இதை முடிந்து வைத்தாலே போதும்.

mudichu
- Advertisement -

தங்கம் வாங்குவதற்கு மட்டுமல்ல, நமக்கு எந்த ஒரு நல்ல விஷயம் நடக்க வேண்டும் என்றாலும் அதற்கான கொடுப்பினை நமக்குத் தேவை. அதாவது பிராப்தம். பிராப்தம் இருந்தால் தான் நமக்கு நடக்க வேண்டிய நல்லது நடக்கும். பிராப்தம் இல்லாமல் போய்விட்டால் கைகூடிவரும் நல்ல விஷயம் கூட, கடைசி சமயத்தில் நம் கையை நழுவி விட்டு போய்விடும். அப்போது நம்முடைய மனது நம்மை அறியாமலே பதபதைக்க தொடங்கிவிடும். எல்லா நன்மைகளும் நமக்கு நல்லபடியாக நடக்க, அதற்கு உண்டான பிராப்தத்தை பெற வேண்டும் என்றால், இறைவனின் பரிபூரண ஆசீர்வாதம் தேவை. அதே போல் தான் தங்கு தடையின்றி தங்கம் நம் கையில் சேர மகாலட்சுமியின் பரிபூரண ஆசிர்வாதம் பெற வேண்டும். அதற்காக நாம் பின் சொல்லக்கூடிய இந்த விஷயத்தை செய்தாலே போதும். தங்கம் வாங்கும் கொடுப்பினை நமக்கு வந்து விடும்.

gold-coins

குறிப்பாக உங்களுடைய வீட்டில் மங்கள காரியம் நடக்கப் போகின்றது. அதற்கான தங்கத்தினை நீங்கள் வாங்க வேண்டும். எந்த தடையும் இல்லாமல் தங்கத்தை வாங்கி உங்களுடைய வீட்டில் சேர்க்க வேண்டும் என்றால் முதலில் இதை மட்டும் செய்து விடுங்கள். அதன்பின்பு தடங்கல் இல்லாத தங்கம் உங்களை வந்து சேரும்.

- Advertisement -

ஒரு வெள்ளிக்கிழமை, பூஜை அறையில் சுவாமி படங்களுக்கு அலங்காரம் செய்துவிட்டு மகா லட்சுமி தாயாரை மனதார வேண்டிக்கொண்டு ஒரு மஞ்சள் துணியை எடுத்துக்கொள்ளுங்கள். அதில் 101, ஒரு ரூபாய் நாணயங்களை வைக்க வேண்டும். ஒரு சிறிய கிண்ணத்தில் நாணயங்களை எடுத்துக் கொள்ளுங்கள். ஒவ்வொரு நாணயங்களாக எடுத்து அந்த மஞ்சள் துணியில் வைக்க வேண்டும். ஒவ்வொரு முறை நாணயத்தை எடுத்து மஞ்சளில் வைக்கும்போதும் ‘ஓம் ஸ்ரீ மகாலட்சுமி தாயே தங்கம் வாங்கும் பிராப்தம் எனக்கு கிடைக்க வேண்டும்’ என்று சொல்லி 101, ஒரு ரூபாய் நாணயங்களையும் அந்த மஞ்சள் துணியில் வைத்து முடிச்சு போட்டு இதை அப்படியே மகாலட்சுமி தாயாரின் பாதங்களில் வைத்து விடுங்கள்.

இந்த முடிச்சை முடிந்த அன்றைய தினமே உங்கள் வீட்டின் அருகில் இருக்கும் தாயாரின் கோவிலுக்கு செல்லவேண்டும். பெருமாள் கோவிலில் நிச்சயமாக மகாலட்சுமி தாயார் இருப்பார்கள். தாயாரின் சன்னிதிக்குச் சென்று மனதார பிரார்த்தனை செய்து தங்கம் வாங்கும் யோகம் வரவேண்டும். தங்கம் வாங்குவதற்கு எங்கள் வீட்டில் எந்த தடையும் இருக்கக் கூடாது. தங்கம் வாங்குவதற்கான வருமானத்தை நீ தான் கொடுக்க வேண்டும் என்று பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள்.

- Advertisement -

நாற்பத்தி எட்டு நாட்கள் உங்கள் வீட்டு பூஜை அறையில் மஞ்சள் முடிச்சு அப்படியே இருக்கட்டும். தினமும் தீபம் ஏற்றும்போது அதற்கு ஒரு ஊதுவத்தி மட்டும் காண்பித்து தினமும் தங்கம் வாங்க வேண்டும் என்ற பிரார்த்தனையை மகாலட்சுமி தாயாரிடம் வையுங்கள். நாற்பத்தி எட்டு நாட்களுக்குள் தங்கம் வாங்கும் யோகம் நிச்சயமாக உங்களுக்கு கிடைக்க நிறையவே வாய்ப்புகள் உள்ளது.

one rupee

நம்பிக்கையோடு தங்கம் வாங்குவதற்கான முயற்சியில் நீங்களும் ஈடுபடவேண்டும். பரிகாரத்தை மட்டும் செய்துவிட்டு பலனை எதிர்பார்க்க கூடாது. பரிகாரத்தோடு சேர்ந்து நம்முடைய விடாமுயற்சியும் தான் நமக்கு வெற்றியைத் தரும். சில பேர் கையில் நிறைய காசு வைத்திருப்பார்கள் ஆனால் தங்கம் வாங்கும் யோகம் இருக்காது. அந்தத் தங்கத்தை வாங்கி வீட்டில் ஒரு நல்ல காரியத்தை நடத்த முடியாமல் திணறி வருவார்கள். இப்படிப் பட்டவர்களும் இந்த பூஜையை செய்து பலனடையலாம்.

mahalakshmi1

தங்கம் வாங்க காசு கையில் இல்லை என்பவர்களும் மேல் சொன்ன பூஜையை செய்தால் தங்கம் வாங்குவதற்கான சேமிப்பு தொகை உங்களிடத்தில் உயரும். நாற்பத்தி எட்டு நாட்கள் தான் இந்த முடிச்சை வீட்டில் வைத்திருக்க வேண்டுமா? என்றால் நிச்சயம் கிடையாது. உங்களுடைய கோரிக்கை நிறைவேறும் வரை இந்த முடிச்சை பூஜை அறையில் வைத்து விட்டு, தங்கம் வாங்கிய பின்பும் கூட அந்த முடிச்சை கொண்டுபோய் மகாலட்சுமி தாயாரின் உண்டியலில் சேர்த்து விடலாம். அதில் எந்த ஒரு தவறும் கிடையாது.

Today Gold rate

மகாலட்சுமியின் பெயரை சொல்லி முடிந்த முடிச்சை அவளுடைய கோவிலில் சேர்த்துவிடுங்கள். அதை எப்போது சேர்க்க வேண்டும் என்பது உங்கள் கையில்தான் உள்ளது. எவ்வளவு சீக்கிரம் முயற்சி செய்து, எவ்வளவு சீக்கிரம் பணத்தை சேர்த்து, எவ்வளவு சீக்கிரம் தங்கத்தை வாங்குகிறீர்கள் அவ்வளவு சீக்கிரம் அந்த முடிச்சை மகாலட்சுமிக்கு சொந்தமாக்கி விடுங்கள். நம்பிக்கையோடு இந்த பரிகாரத்தை செய்தால் உங்கள் வீட்டில் தங்கம் தங்குதடையின்றி சேரும் என்ற நம்பிக்கையோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -