நீங்கள் வைக்கும் சாம்பாரின் சுவை இன்னும் அதிகரிக்க இப்படி தஞ்சாவூர் பக்குவத்தில் ஒருமுறை சாம்பார் வைத்து பாருங்கள்

saambar
- Advertisement -

எப்பொழுதும் நம் வீட்டில் சமைக்கும் உணவை விட நமது பக்கத்து வீட்டில் சமைக்கும் உணவுகளின் சுவை பலருக்கும் பிடிக்கும். பள்ளியில் குழந்தைகள் ஒன்றாக அமர்ந்து சாப்பிடும் பொழுது ஒருவர் மற்றொருவரின் உணவைத்தான் விருப்பமாக சாப்பிடுவார்கள். அவ்வாறு ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட கை பக்குவம் இருக்கிறது. அது போல ஒவ்வொரு ஊரிலும் ஒவ்வொரு விதமான சுவைகளில் அங்கு சமைக்கப்படும் உணவுகள் இருக்கும். இவ்வாறு தான் ஒவ்வொரு ஊரிலும் ஒவ்வொரு விதமான உணவுகள் அந்த ஊருக்கு என்று பெயர் போனதாக இருக்கும். அப்படி கல்யாண சாம்பார் என்பது அனைத்து இடங்களிலும் மிகவும் விரும்பிக் கேட்கப்படும் ஒரு சமையல் வகையாகும். அவ்வாறு தஞ்சாவூர் ஸ்பெஷல் கல்யாண வீட்டு சாம்பார் செய்வது எப்படி என்பதைப்பற்றி தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

தேவையான பொருட்கள்:
துவரம் பருப்பு – 50 கிராம், தனியா – 50 கிராம், கடலைப் பருப்பு – 25 கிராம், வரமிளகாய் – 100 கிராம், மிளகு – 2 ஸ்பூன், வெந்தயம் – ஒரு ஸ்பூன், பெருங்காயம் சிறிய துண்டு – 2, கருவேப்பிலை – ஒரு கைப்பிடி, துவரம் பருப்பு – 100 கிராம், புளி – நெல்லிக்காய் அளவு, வெங்காயம் – 3, தக்காளி – 3, பரங்கிக்காய் – 100 கிராம், மஞ்சள் தூள் – அரை ஸ்பூன், கடுகு – அரை ஸ்பூன், வெந்தயம் – அரை ஸ்பூன், பச்சை மிளகாய் – 4, உப்பு – ஒரு ஸ்பூன், மிளகாய்தூள் – ஒரு ஸ்பூன், எண்ணெய் – 4 ஸ்பூன், கொத்தமல்லி தழை – ஒரு கொத்து.

- Advertisement -

செய்முறை:
முதலில் அடுப்பை பற்ற வைத்து, அதன் மீது ஒரு கடாயை வைத்து வேண்டும். பிறகு ஒரு ஸ்பூன் எண்ணெய் ஊற்ற வேண்டும். பின்னர் 50 கிராம் தனியாவை சேர்த்து பொன்னிறமாக வறுத்து தனியாக எடுக்க வேண்டும். பிறகு கடலைப்பருப்பு சேர்த்து வறுத்தெடுக்க வேண்டும். பின்னர் 50 கிராம் துவரம் பருப்புடன், மிளகு, வெந்தயம் ஒன்றாக சேர்த்து வறுக்க வேண்டும். பிறகு இதனுடன் சிறிய துண்டு பெருங்காயம், ஒரு கொத்து கறிவேப்பிலை சேர்த்து வறுத்தெடுக்க வேண்டும்.

பின்னர் நூறு கிராம் துவரம் பருப்பை நன்றாகக் கழுவி குக்கரில் சேர்த்து, இதனுடன் 3 டம்ளர் தண்ணீர் சேர்த்து 4 விசில் வரும் வரை வேக வைத்து கடைந்து வைக்க வேண்டும். இறுதியாக வரமிளகாய் சேர்த்து வறுத்து, இதனையும் அவற்றுடன் சேர்க்க வேண்டும். பிறகு இவற்றை ஆற வைத்து மிக்ஸியில் சேர்த்து பொடியாக அரைத்துக்கொள்ள வேண்டும். பிறகு மறுபடியும் கடையை அடுப்பின் மீது வைத்து மூன்று ஸ்பூன் எண்ணெயை ஊற்ற வேண்டும். எண்ணெய் நன்றாக காய்ந்ததும் அரை ஸ்பூன் கடுகு, அரை ஸ்பூன் வெந்தயம் சேர்த்து தாளிக்க வேண்டும்.

- Advertisement -

பின்னர் வெங்காயம், தக்காளி, பரங்கிக்காய் மற்றும் பச்சை மிளகாய் இவற்றை பொடியாக நறுக்கி சேர்க்கவேண்டும். இவை அனைத்தும் நன்றாக வதங்கிய பின்னர் 2 டம்ளர் தண்ணீர் ஊற்றி, அதனுடன் ஒரு ஸ்பூன் மிளகாய்தூள், ஒரு ஸ்பூன் உப்பு சேர்த்து கொதிக்க விட வேண்டும். பிறகு இவற்றுடன் நெல்லிக்காய் அளவு புளியை ஊறவைத்து, கரைத்து, புளிக் கரைசலையும் சேர்த்து கொதிக்க விட வேண்டும்.

பிறகு மஞ்சள் தூள் சேர்த்து கலந்துவிட்டு, இதனுடன் கடைந்து வைத்துள்ள பருப்பையும் சேர்த்து கொதிக்க விட வேண்டும். இப்பொழுது அரைத்து வைத்துள்ள சாம்பார் பொடியை 2 ஸ்பூன் அளவு சேர்த்து கலந்துவிட்டு, இறுதியாக கருவேப்பிலை, கொத்தமல்லித் தழை சேர்த்து ஒரு கொதி வந்ததும் அடுப்பை அனைத்துவிட வேண்டும்.

- Advertisement -