வாரம் ஒரு முறை இதை தலையை சுத்தி போட்டுக்கோங்க, கணவன் மனைவிக்குள்ள சண்டையே வராது! குடும்பத்தில் என்றும் அமைதி நிலைக்க செய்ய வேண்டிய எளிய பரிகாரம்.

door-tharpai
- Advertisement -

எல்லோருடைய வீட்டிலும் அமைதி இருக்கிறதா? என்று கேட்டால் கண்டிப்பாக இல்லை என்பது தான் பதிலாக இருக்கும். கணவன் மனைவிக்குள் சண்டை அல்லது மாமியார் மருமகளுக்குள் சண்டை என்று யாருடன் ஆவது சண்டை போட்டு நிம்மதியை கெடுத்துக் கொண்டிருக்கும் குடும்பங்கள் பலவும், இந்த ஒரு பரிகாரத்தை செய்யும் பொழுது அதிலிருந்து விடுபட முடியும் என்கிறது சாஸ்திர குறிப்புகள்! அப்படியான எளிய பரிகாரத்தை பற்றி தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள இருக்கிறோம்.

குடும்பம் என்பது தனித்து நிற்பது அல்ல! எல்லோரும் சேர்ந்து இருப்பது தான் குடும்பம் என்று கூறப்படுகிறது எனவே இங்கு சுயநலத்திற்கு இடம் கொடுக்காமல், எல்லாரும் எப்படி நிம்மதியாக இருக்க வேண்டும்? எல்லோருடைய அன்பையும் எப்படி பெற வேண்டும்? என்பதை தான் கணவனும், மனைவியும் நினைக்க வேண்டும்.

- Advertisement -

பெண் தான் குடும்பத்தை தாங்கி இருக்க வேண்டும் என்கிற அவசியம் இல்லை. பெண்கள் சில சமயத்தில் கோபப்படும் பொழுது, ஆண்கள் அந்த பொறுப்பை ஏற்று அவர்களை வழிநடத்தி செல்ல வேண்டும். எப்படியோ போய் தொலையுங்கள் என்று விட்டுவிட்டால், குடும்பத்தில் பிரச்சினைகள் அதிகரிக்க துவங்குகிறது. எனவே இவ்வகையில் ஒரு ஆணும் குடும்பத்தில் பிரச்சினை நடப்பதற்கு காரணமாக இருக்கின்றான்.

கணவன், மனைவி இருவருமாக சேர்ந்து தான் குடும்பத்தை அமைதியாக கொண்டு செல்ல முடியும். தனியாக ஒருவரை விட்டு, ஒருவர் மட்டும் இதை செய்ய வேண்டும் என்று நினைப்பது தவறு. குடும்ப அமைதிக்கு மாதம் ஒருமுறை வெண்கடுகு போட்டு தூபம் ஏற்றுங்கள். இது கண் திருஷ்டிகளையும், துஷ்ட சக்திகளையும் உங்கள் வீட்டில் இருந்து விரட்டி அடிக்கும் அற்புதமான பரிகாரம் ஆகும். அதே போல வாரம் ஒரு முறை உங்களுடைய தலையை சுற்றி திருஷ்டி கழிப்பது போல, இந்த ஒரு விஷயத்தை கையில் வைத்து கொண்டு செய்ய வேண்டும். இது ரொம்பவே சக்தி வாய்ந்த எளிய பரிகாரமாக இருக்கிறது.

- Advertisement -

இதை செய்வதால் கணவன், மனைவிக்குள் சண்டை என்பதே வராதாம். அவ்வளவு அன்னோன்யம் ஏற்படுத்தக்கூடிய இந்த ஒரு பரிகாரத்தை எந்த நேரத்தில் வேண்டுமானாலும் செய்து கொள்ளலாம். வாரம் ஒரு முறை ஞாயிற்றுக்கிழமை அல்லது திங்கள்கிழமையில் உங்களுக்கு வசதியான நேரத்தில் இந்த பரிகாரத்தை செய்யுங்கள். கையில் சிறிய துண்டு தர்ப்பை புல் ஒன்றை வைத்துக் கொள்ளுங்கள். தர்ப்பை புல் பூஜை பொருட்கள் விற்கும் கடைகளில் கிடைக்கும். ஹோமங்கள் செய்ய பயன்படுத்தும் இந்த தர்பை ரொம்பவும் புனிதமானது. இதை கையில் வைத்துக் கொண்டு சிறிதளவு கடுகு மற்றும் சிறிதளவு கல் உப்பை சேர்த்துக் கொள்ளுங்கள்.

பின்னர் உங்களுடைய தலையை சுற்றி வலது புறம் இருந்து இடது புறமாக மூன்று முறையும், இடது புறம் இருந்து வலது புறமாக மூன்று முறையும் சுற்றிக் கொள்ளுங்கள். உங்கள் கையில் இருப்பதை அப்படியே வைத்துக் கொண்டு உங்களுடைய கணவனுக்கும் இதே போல சுற்றிக் கொள்ளுங்கள். யார் வேண்டுமானாலும் இதை செய்யலாம். இப்படி யாருடன் சண்டை நடக்கக் கூடாது என்று நினைக்கிறீர்களோ, அவர்களுக்கெல்லாம் இது போல தலையை சுற்றி பின்னர் வீட்டை விட்டு வெளியே வந்து யாருடைய கால்களிலும் படாதபடி நெருப்பில் இட்டு விட வேண்டும். நெருப்பில் படபடவென பொரியும் இந்த திருஷ்டி பரிகாரம், உங்களுடைய குடும்பத்தில் இருக்கும் திருஷ்டிகளையும் முழுமையாக நீக்கி, குடும்ப பிரச்சினைகளை தீர்க்கும்.

- Advertisement -