தரித்திரம் நீங்கி சரித்திரம் படைக்க வேண்டும் என்ற ஆசை உங்களுக்கு இருக்குதா? அதிசக்திவாய்ந்த 5 வார்த்தை மந்திரம் இதோ உங்களுக்காக.

boghi-manthiram
- Advertisement -

கடவுளுக்கு எப்போதுமே ஒரு பொருளை உடைத்து, அதன் பின்பு அதை அழகாக மாற்றத்தான் பிடிக்கும். உங்களுடைய மனது உடையும் படியான சில சம்பவங்கள், கஷ்டங்கள் நடந்தால் அதை கண்டு நீங்கள் பயப்படாதீர்கள். உதாரணத்திற்கு உடைந்த மேகங்கள் தான் நமக்கு மழை பொழிவை தரும். உடைந்த நிலம் தான் உழுது விளைச்சல் நிலமாக மாற்றப்படும். உடைந்த விதையில் இருந்து தான் புதிய செடிகள் வளர்கின்றது. எனவே நீங்களும் உடைந்து நொறுங்கிப் போனால், மனதார நம்புங்கள். கடவுள் உங்களை ஏதோ ஒரு பெரிய விஷயத்திற்கு தயார் செய்கின்றார் என்று.

கஷ்டங்களைக் கொடுத்து கொடுத்து அதன் பின்பு நம்மை பக்குவப்படுத்துவதில் கடவுளுக்கு ஆர்வம் அதிகம். சரி உடைந்துபோன உங்களுடைய மனதை சரி செய்து, உங்களிடமுள்ள தரித்திரத்தை நீக்க சித்தர்களால் அருளிய ஒரு சுலபமான மந்திரத்தை தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். இதை மந்திரங்கள் என்று கூட சொல்ல வேண்டாம். 5 வார்த்தைகள் என்று வைத்துக்கொள்ளலாம். அவ்வளவு சுலபமாக இருக்கும்.

- Advertisement -

எப்போதும் போல காலையில் எழுந்து அந்த ஈசனை மனதார பிரார்த்தனை செய்து கொண்டு சுத்தமாக குளித்துவிட்டு பூஜை அறையில் தீபம் ஏற்றி வைத்து விடுங்கள். குலதெய்வத்தை மனதார பிரார்த்தனை செய்து கொண்டு பூஜை அறையில் ஒரு விரிப்பை விரித்து அதன் மேல் அமர்ந்து கொண்டு உங்களுக்கு பிடித்த ஏதாவது ஒரு மகான், ஏதாவது ஒரு சித்தரின் பெயரை உச்சரித்து விட்டு இந்த நான்கு வார்த்தைகளை சொல்லுங்கள்.

ஏகம், சௌஜன்யம், சௌவுகரியம், சௌபாக்கியம், அநேகம்.

- Advertisement -

உங்களுடைய உடம்பில் மூடப்பட்டு இருக்கும் நேர்மறை ஆற்றல் அத்தனையும் வெளிவரும். உங்களை செயல்படுத்த விடாமல் உங்களை கட்டி வைத்திருக்கும் எதிர்மறை ஆற்றல்கள் அனைத்தும் உடைந்து போகும். உங்களுடைய ஆரா சக்தி எப்போதும் பாசிட்டிவ் எனர்ஜி யோடு செயலாற்றிக் கொண்டிருக்கும்‌. இந்த வார்த்தைகளுக்கு அத்தனை சக்தி. சித்தர்கள் நமக்கு அருளிய நிறைய நல்ல விஷயங்களில் இதுவும் ஒன்று.

உங்களைப் பிடித்துக் கொண்டிருக்கும் தரித்திரம் எல்லாம் நீங்கி உங்கள் வாழ்க்கையில் ஏதாவது ஒரு சரித்திரத்தைப் படைக்க வேண்டும் என்ற லட்சியத்தை உடையவர்கள் மேல் சொன்ன விஷயத்தை பின்பற்றி வாருங்கள். பிறகு உங்களுடைய முயற்சிகள் அனைத்தும் வெற்றி தரும். நிச்சயமாக ஒரு நாள் இல்லை என்றாலும் ஒரு நாள் உங்கள் பெயரை இந்த ஊரை சொல்லும் அளவிற்கு வளர்ந்து நிற்பீர்கள். நம்பிக்கை உள்ளவர்களை பரிகாரம் என்றைக்குமே கைவிட்டதில்லை என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -