தரித்திரம் பீடை நீங்க பரிகாரம்

bedroom water
- Advertisement -

நம் முன்னோர்கள் பின்பற்றிய பல விஷயங்களில் குறிப்பான ஒன்றுயெனில் அது நம் வீட்டில் தரித்திரம் பீடை பிடிக்காமல் பாதுகாத்தது. வீட்டில் இருக்கும் கண் திருஷ்டி தீய சக்தி போன்றவை எல்லாம் பிறரால் நமக்கு வரக்கூடியதாக இருக்கும். ஆனால் இந்த தரித்திரம் பீடை போன்றவைகள் பெரும்பாலும் நம்மால் நமக்கே வரக் கூடியவை தான். ஆகையால் தான் நம்முடைய வாழ்வியல் முறையில் நம் முன்னோர்கள் பல விஷயங்களை முறையாக பின்பற்றி வந்தார்கள்.

இப்போதைய கால மாற்றத்தில் நாம் அனைத்தையும் மறந்து நவீன காலத்திற்கு ஏற்றவாறு மாறி விட்டோம். இதனாலேயே பல வீடுகளில் தரித்திரம் தாண்டவம் ஆடுகிறது. அந்த வீடுகளில் எந்நேரமும் சண்டை சச்சரவு நோய் நொடி என்று ஏதேனும் ஒன்றினால் பாதிக்கப்பட்டு கொண்டும் இருக்கிறார்கள். இவற்றையெல்லாம் நீக்க எளிய பரிகார முறையும் அவர்களே சொல்லி வைத்திருக்கிறார்கள். அதைப் பற்றி ஆன்மீகம் குறித்த இந்த பதிவில் இப்போது நாம் தெரிந்து கொள்வோம்.

- Advertisement -

தரித்திரம் பீடை நீங்க
இந்த தரித்திரம் என்பது ஒருவருடைய வாழ்வில் வந்து விட்டால் அதிலிருந்து மீள்வது மிகவும் சிரமமாகி விடும். எல்லாவற்றிற்கும் துன்பப்பட வேண்டியது இருக்கும். குறிப்பாக சொல்ல வேண்டும் எனில் உண்ணும் உணவிற்கே கூட தட்டுப்பாடு ஏற்படக்கூடிய நிலை வந்து விடும். இவர்கள் எப்பொழுதும் சோம்பேறித்தனமாக இருப்பார்கள். வேலைகள் அனைத்தும் அடுத்த நாள் என ஒதுக்கி கொண்டே செல்வார்கள். இதனால் அவர்களுடைய முன்னேற்றம் தடைப்படுவதுடன் வருமான பற்றாக்குறையும் ஏற்படும்‌‌. இதன் மூலம் வீட்டில் அனைத்து பிரச்சனைகளையும் சமாளிக்க வேண்டியது வரும். இதனால் குடும்பத்தில் நிம்மதி இல்லாத சூழ்நிலை வரும்.

இன்னும் பலருக்கு ஏதேனும் ஒரு உடல் உபாதைகள் வந்து அவர்களே நினைத்தாலும் வேலையை செய்யவே முடியாத நிலையில் ஆளாகும். இதனால் தான் நம் முன்னோர்கள் காலை மாலை வீட்டில் விளக்கு ஏற்ற வேண்டும் காலையில் சீக்கிரம் எழுந்து விட வேண்டும்‌ பகல் உறக்கம் கூடாது என்பன போன்ற பல விதிமுறைகளை பின்பற்றி வந்தார்கள். இப்போது இதையெல்லாம் யாரும் பின்பற்றுவதில்லை.

- Advertisement -

இதை சரிசெய்வதற்கான எளிய பரிகாரத்தை இப்போது பார்க்கலாம். நம்மில் பலருக்கும் இரவு உறங்கும் போது படுக்கை அறையில் தண்ணீர் வைத்து உறங்கும் பழக்கம் உண்டு. ஆனால் இந்த தண்ணீரை எந்த காரணத்திற்காகவும் நம் தலைக்கு பின்புறம் வைக்கக் கூடாது அப்படி வைக்கும் போது நம்முடைய உடம்பில் இருக்கும் எதிர்மறை ஆற்றல் அந்த தண்ணீரில் இறங்கி விடும். அந்தத் தண்ணீரை நாம் அருந்தும் போது அது இன்னும் அதிகப்படியான எதிர் விளைவு ஏற்படுத்தும்.

இதற்கு நீங்கள் படுக்கும் இடத்தை விட்டு சற்று தொலைவில் ஏதேனும் ஒரு பாத்திரத்தில் மூடி போட்டு தண்ணீர் வைக்க வேண்டும். அதே போல் ஒரு சிறிய மண் குடுவையில் தண்ணீர் ஊற்றி அதை படுக்கும் அறையில் நீங்கள் தலை வைத்து படுக்கும் திசைக்கு சற்று மேலே தூக்கி இந்த பானையை வைக்க வேண்டும். இந்த குடுவையை மூட கூடாது இது மிக மிக முக்கியம். இந்த மண் குடுவையை மறுநாள் காலையில் எழுந்தவுடன் முதல் வேலையாக வீட்டிற்கு வெளியில் எடுத்துச் சென்று கீழே போட்டு உடைத்து விட வேண்டும்.

இதையும் படிக்கலாமே: அதிர்ஷ்டம் பெருக செய்ய வேண்டிய தானம்

நம்முடைய பீடை தரித்திரம் நீங்க நம் முன்னோர்கள் சொல்லி வைத்த மிக மிக எளிய அதே நேரத்தில் சக்தி வாய்ந்த பரிகாரம் இது. இதை எந்த நாளில் வேண்டுமானாலும் செய்யலாம். தினமும் ஒரு மண் குடுவை உங்களால் உடைக்க முடியும் என்றால் இதை தினமும் கூட செய்யலாம். குறிப்பாக சனிக்கிழமை இரவு வைத்து விட்டு ஞாயிற்றுக்கிழமை இதை உடைப்பது அதிக பலனை தரும் என்று சொல்லப்படுகிறது. நம்மை பாடாய்படுத்தும் இந்த தரித்திரம் பீடை நம்மை விட்டு விலகி ஓட செய்யும் இந்த பரிகார முறையில் உங்களுக்கு நம்பிக்கை இருப்பின் நம்பிக்கையுடன் செய்து பலன் அடையுங்கள்.

- Advertisement -