குளிக்கும்போது இந்த ஒரு வார்த்தையை சொன்னால் நம் உடம்பை பிடித்த தரித்திரம், பீடை, கண் திருஷ்டி விலகும். சுறுசுறுப்பாக வேலை செய்ய எதுவும் தடையாக வந்து நிற்காது.

murugan1
- Advertisement -

சில சமயம், சில பேருக்கு உடம்பு அடித்துப் போட்டது போல வலி இருக்கும். எந்த ஒரு வேலையுமே சுறுசுறுப்பாக செய்ய முடியாது. தூக்கம் தூக்கமாக வரும். பார்ப்பதற்கு இது ஒரு சின்ன பிரச்சினையாகத்தான் இருக்கும். ஒரு நாளிலோ, இரண்டு நாளிலோ இந்த பிரச்சனை சரியாகிவிட்டால் ரொம்ப ரொம்ப நல்லது. ஆனால், தொடர்ந்து தினம் தினம் சோம்பேறித்தனத்தோடு இருந்தால், வேலைக்கு எப்படி செய்வது, எப்படி பணம் சம்பாதிப்பது. நம்முடைய உடம்பு சோர்வு அடைவதற்கு பலவகையான காரணங்கள் இருக்கலாம். உடம்பு சரி இல்லை என்றால் இரண்டு மூன்று நாட்களில் அந்த சோர்வு சரியாகிவிடும்.

அதுவே கண்ணுக்குத் தெரியாத எதிர்மறை சக்தியால் நம்முடைய உடம்புக்கு ஏதோ ஒரு பிரச்சனை என்றால் அதை சரி செய்ய ஆன்மீக ரீதியாக நாம் ஏதாவது ஒரு பரிகாரத்தை செய்வது நல்ல பலனை கொடுக்கும். உதாரணத்திற்கு சில பேர் திருஷ்டி சுற்றி போட்டு இப்படிப்பட்ட பிரச்சனையை சரி செய்வார்கள். சில பேர் ஏதாவது அருவிக்கு பொய் குளித்து இப்படிப்பட்ட பிரச்சனைகளை சரி செய்து கொள்ளுவார்கள். சமுத்திரத்தில் குளித்து கூட இப்படிப்பட்ட பிரச்சனைக்கு ஒரு முடிவு கட்டலாம்.

- Advertisement -

சரிதான். மேல் சொன்ன முறையில் பரிகாரங்களை செய்தாலும் நம் உடம்பை பிடித்த எதிர்மறை ஆற்றல் விலகும். அதில் எந்த சந்தேகமும் கிடையாது. இதையெல்லாம் தாண்டி, இன்னொரு பரிகாரமும் ஆன்மீகத்தில் நமக்கு சொல்லப்பட்டுள்ளது அதை தான் இப்போது தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

குளிக்கும் தண்ணீரில் இந்த மூன்று பொருட்களை சேர்த்து, இந்த ஒரு வார்த்தையை சொல்லி குளித்து பாருங்கள். உங்களுடைய உடம்பை பிடித்த எதிர்மறை சக்தி எல்லாம் விலகிவிடும். சுறுசுறுப்பாக இயங்குவதற்கு எந்த ஒரு தடையும் இருக்காது.

- Advertisement -

உடல் சோர்வு நீங்க உடம்பை பிடித்த தரித்திரம் விலக குளிக்கும் போது சொல்ல வேண்டிய மந்திரம்:
வெதுவெதுப்பான தண்ணீரிலும் இந்த மூன்று பொருட்களை சேர்க்கலாம், அல்லது பச்சை தண்ணீரிலும் இந்த மூன்று பொருட்களை சேர்த்து குளிக்கலாம். தவறு கிடையாது. 2 கொத்து வேப்ப இலை, 2 சிட்டிகை மஞ்சள் தூள், ஒரு கைப்பிடி கல்லுப்பு, போட்டு தண்ணீரில் நன்றாக கரைத்து விடுங்கள். 10 நிமிடம் கழித்து இந்த தண்ணீரில் குளிக்க வேண்டும். குளிக்கும்போது ‘ஓம் சரவணபவ, ஓம் சரவணபவ, ஓம் சரவணபவ’ என்ற இந்த மந்திரத்தை மூன்று முறை சொல்லிவிட்டு கிழக்கு பார்த்தவாறு தலைக்கு ஸ்நானம் செய்தால், உங்கள் உடம்பை பிடித்த பீடை கண் திருஷ்டி எல்லாம் விலகும். குறிப்பாக இந்த குளியலை காலை 6:00 மணிக்கு மேற்கொண்டால்தான் நல்ல பலன் கிடைக்கும்.

கண்ணுக்குத் தெரியாத ஏதாவது ஒரு துர் சக்திகள் உங்கள் உடம்பில் வந்து உட்கார்ந்து பிரச்சனை செய்தாலும் அவையும் உங்கள் உடம்பை விட்டு நீங்குவதற்கு இந்த எளிமையான பரிகாரமும், இந்த ஒரு வரி மந்திரமுமே போதும்.

நீங்கள் ஆண்களாக இருந்தால் சனிக்கிழமை இந்த குளியலை மேற்கொள்ளலாம். நீங்கள் பெண்களாக இருந்தால் வெள்ளிக்கிழமை இந்த குளியலை மேற்கொள்ளும் போது நல்ல பலன். நம்பிக்கை உள்ளவர்கள் பரிகாரத்தை செய்து பலன் பெறுங்கள்.

- Advertisement -