தரித்திரங்கள் விலகி தயக்கமே இல்லாமல் மகாலட்சுமி உங்கள் வீட்டிற்குள் காலடி எடுத்து வைக்க வேண்டுமா? இந்த தண்ணீரில் முகத்தை கழுவுங்கள் போதும்.

mahalakshmi-vilakku
- Advertisement -

சில வீடுகளில் கண்ணுக்கே தெரியாமல் கஷ்டங்கள் ஒன்றன்பின் ஒன்றாக வந்து குவிந்து இருக்கும். ஒரு நாள் பார்த்தால், நம்மை சுற்றி ஒரு இருட்டு வளையமும் வந்திருக்கும். அந்த வளையம் கண்ணுக்கு தெரியாது. அந்த வளையத்தை தான் தரித்திரம் என்று சொல்லுவார்கள். இந்த தரித்திரம் நம்மை வந்து தொற்றிக் கொண்டால், தானாக மகாலட்சுமி கட்டு விழுந்துவிடும். மகாலட்சுமி நம் வீட்டிற்குள் நுழைய முடியாது. பணக்கஷ்டம் வரும், வீட்டில் நிம்மதி வெளியே போகும். மன அழுத்தம் உண்டாகும். கடன் கொஞ்சம் கொஞ்சமாக வீட்டிற்குள் நுழைந்து விட்டால், முடிந்தது நம் சந்தோஷம் வெளியே சென்று விடும்.

இதை எல்லாம் படிக்கும் போதே நமக்கு பதறுகிறது. இவை எதுவும் யாருடைய வாழ்க்கையிலும் நடக்கக்கூடாது தான். ஒருவேளை கெட்ட நேரம் நம்மை இந்த சூழ்நிலைக்கு தள்ளி விட்டால் என்ன செய்வது. கஷ்டங்களை வெளியே விரட்டி அடித்து, மகாலட்சுமியை நிரந்தரமாக நம் வீட்டிற்குள் தங்க வைக்க, செய்ய வேண்டிய ஒரு சில ஆன்மீகம் சொல்லும் பரிகாரங்களை தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

- Advertisement -

மகாலட்சுமி கட்டை உடைக்கும் பரிகாரங்கள்:
முதல் பரிகாரமாக நம் உடம்பில் இருக்கும் பீடையை வெளியேற்ற வேண்டும். சில பேர் சொல்லி நாம் கேள்வி பட்டிருப்போம். உன்னுடைய முகம் ஏன் இப்படி தரித்திரம் பிடித்தது போல இருக்குது. மூதேவி அடைந்தது போல இருக்குது. முகத்தை போய் கழுவு என்று சொல்லுவார்கள். முகத்தை கழுவினாலே முகத்தில் இருக்கும் மூதேவி தரித்திரம் விலகும் என்பது நம்பிக்கை.

இப்படி நீங்கள் சோர்வாக இருந்தாலும், உங்களை சோம்பேறித்தனம் பிடித்து இருந்தாலும் அதை விலக்கி வைத்தால் தான் மகாலட்சுமி தேவி உங்களுக்குள் வாசம் செய்வாள். அடிக்கடி பன்னீர் கலந்த தண்ணீரில் முகத்தை கழுவுங்கள். அடிக்கடி பன்னீர் கலந்த தண்ணீரில் குளியுங்கள்.

- Advertisement -

பன்னீர் ரோஜா கிடைத்தால் அந்த பன்னீர் ரோஜாவை கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி மிக்ஸி ஜாரில் அரைத்து, அந்த தண்ணீரை குளிக்கின்ற தண்ணீரில் ஊற்றி கலந்து குளித்தால், உடம்பை பிடித்த தரித்திரம் விலகும். மகாலட்சுமி தானாக உங்கள் உடம்பில் வந்து குடியேறி கொள்வாள். நீங்கள் சுறுசுறுப்பாக வேலை செய்து சம்பாதிக்க தொடங்கி விடுவீர்கள். வேலைக்கு செல்லாத பெண்களாக இருந்தால் சுறுசுறுப்பாக செயல்பட்டு வீட்டை சுத்தமாக வைத்து, மகாலட்சுமியை வீட்டிற்குள் வரவேற்பீர்கள். இது ஒரு பரிகாரம்.

அடுத்தபடியாக தினமும் ஒரு ஏலக்காய் சாப்பிட வேண்டும். ஏலக்காய் பணத்தை ஈர்க்கக்கூடிய ஒரு பொருள். மகாலட்சுமிக்கும் பெருமாளுக்கும் உரிய பொருள். இந்த ஏலக்காயை சாப்பிட்டு வரும்போது நிச்சயமாக உங்களுக்கு பணம் சேரும். அதேபோல வாரம் ஒரு முறை, ஒரே ஒரு நெல்லிக்காய், வெள்ளிக்கிழமை அன்று சாப்பிட்டு வந்தால் பண தடை உடையும்.

- Advertisement -

இதையும் படிக்கலாமே: நாளை வெள்ளிக்கிழமையோடு சேர்ந்து வரும் வைகாசி அமாவாசை! இந்த 1 பொருளை மட்டும் வாங்கி பூஜை அறையில் வைத்து விட்டால் போதும். கழுத்தை நெரிக்கும் கடனை கூட கஷ்டப்படாமல் அடைத்து விடலாம்.

வெள்ளிக்கிழமை என்று வந்துவிட்டாலே சுத்த பத்தமாக குளித்துவிட்டு மங்களகரமாக நெத்தியில் பொட்டு, ஆண்களாக இருந்தால் விபூதி இட்டுக்கொண்டு, பெண்களாக இருந்தால் தலையில் பூ வைத்துக்கொண்டு, அழகான பிங்க் நிற ஆடையை உடுத்திக் கொள்ளுங்கள். இந்த ஒட்டு மொத்த அழகும் உங்களுக்கு மகாலட்சுமி கடாட்சத்தை கொடுத்து விடும். எவ்வளவு பெரிய மகாலட்சுமி கட்டு வீட்டில் இருந்தாலும், அது உடையும்.

கூடவே இதோடு சேர்த்து ஆடை அலங்காரத்தோடு வீட்டில் மகாலட்சுமிக்கு சிறியதாக வெள்ளிக்கிழமை பூஜையும் செய்து விடுங்கள். வீட்டை எந்த தரித்திரமும் அண்டாது. மகாலட்சுமி தேவி விரும்பி வந்து உங்கள் வீட்டிற்குள் அமர்ந்து கொள்வாள். இது எல்லாமே எளிமையான பரிகாரம் தான். நம்பிக்கை உள்ளவர்கள் செய்து பார்த்து மகாலட்சுமியை வீட்டில் வரவேற்கலாம்.

- Advertisement -