தரித்திரத்தை விரட்டி அடிக்கும் சக்தி கொண்ட இரண்டு இலைகள்

amman7
- Advertisement -

இன்று நாம் பார்க்கப்போகும் இரண்டு இலைகளுக்கும் மருத்துவ குணமும் இருக்கிறது. மகத்துவமும் இருக்கிறது. இந்த ஆன்மீக பதிவில் நாம் பார்க்கப்போவது இந்த இரண்டு இலைகளின் மகத்துவத்தை பற்றி தான். இந்த இரண்டு இலைகள் மருத்துவத்தில், உடம்பில் இருக்கும் கழிவை எல்லாம் எப்படி வெளியேற்ற பயன்படுகிறதோ, அதே போல நம் வீட்டில் இருக்கும் தேவையற்ற பிரச்சனைகளையும் வெளியே விரட்டி அடிக்கும் என்று சொல்லப்பட்டுள்ளது.

அந்த இரண்டு இலைகள் என்ன. அந்த இரண்டு இலைகளை வீட்டிற்குள் எப்படி கொண்டு வர வேண்டும். எப்படி பரிகாரம் செய்யணும் என்பதை பற்றிய ஆன்மீகம் சார்ந்த பதிவு இதோ உங்களுக்காக. தரித்திரத்தை விரட்டும் இலைகள்.

- Advertisement -

தரித்திரத்தை விரட்டும் இலைகள்

அம்மான் பச்சரிசி, குப்பைமேனி இலை இந்த இரண்டு இலைகள் தான் நமக்கு பரிகாரத்துக்கு தேவைப்படுகிறது. கிராமப்புறங்களில் இருக்கும் நிறைய பேருக்கு இந்த இலைகளைப் பற்றி தெரிந்திருக்கும். இந்த செடிகளும் கிராமப்புறங்களில் வீட்டு பக்கத்திலேயே மண்பாங்கான இடங்களில் வளர்ந்திருக்கும். நகர்ப்புறங்களில் இருப்பவருக்கு ஒரு சிலருக்கு இது தெரியாது.

தெரியாதவர்கள் நாட்டு மருந்து கடைகளில் சொல்லி வைத்து இந்த இலை எங்கு கிடைக்கும் என்று விசாரித்து, நீங்களே போய் அந்த இலையை உங்கள் கையால் எடுத்து வருவது ரொம்ப ரொம்ப சிறப்பு. மூலிகை சார்ந்த செடிகளை வேரோடு பிடுங்குவதாக இருந்தால் சாப நிவர்த்தி செய்ய வேண்டும். நாம் இதை வேரோடு எடுக்கப் போவது கிடையாது.

- Advertisement -

மேலே சின்ன கிளைய மட்டும் தான் பறித்து வரப் போகின்றோம். இரண்டு செடிகளில் இருந்து, கிளைகளை பறிப்பதற்கு முன்பு இது என்னுடைய குடும்ப நன்மைக்காக செய்யக்கூடிய பரிகாரம். எங்களுடைய குடும்பம் சிறக்க இந்த இலையை பறிக்கின்றேன் என்று சொல்லி, குலசாமியை நினைத்து செடியில் இருந்து சின்ன கிளையை உடைத்து எடுத்துக் கொள்ளுங்கள்.

அம்மான் பச்சரிசி செடியிலிருந்தும், குப்பைமேனி செடியில் இருந்தும். எடுத்து வந்த இந்த இலைகளை தண்ணீரில் கழுவி விட்டு நன்றாக உலர வைத்துவிட்டு, ஒரு சிறிய கிண்ணியில் போட்டு திறந்தபடி ஏதாவது ஒரு அலமாரிக்கு மேல் வரவேற்பு அறையில் வைத்து விடுங்கள். அவ்வளவுதான். பரிகாரம் முடிந்தது.

- Advertisement -

15 நாட்களுக்கு ஒரு முறை இந்த பழைய இரண்டு இலைகளையும் எடுத்து கால் படாத இடத்தில் போட்டுவிட்டு மீண்டும் புதிய இலைகளை வைக்க வேண்டும். இந்த இரண்டு செடிகளிலிருந்து எடுக்கப்பட்ட சின்ன சின்ன கிளைகளில் இருந்து வெளி வரக்கூடிய அந்த வாசம் உங்கள் வீட்டில் கண்ணுக்கு தெரியாமல் மறைந்திருக்கும்.

இதையும் படிக்கலாமே: தங்க நகை சேர பரிகாரம்

துர் சக்திகளை, தோஷங்களை எல்லாம் வெளியே துரத்தி அடித்து விடும் என்று சொல்லப்பட்டுள்ளது. தொடர்ந்து இந்த இலை உங்க வீட்ல 48 நாள் இருக்கணும். அது காய்ந்த பிறகு 15 நாட்களுக்கு ஒரு முறை மாற்றம் மறக்காதிங்க. 48 நாட்களுக்கு மேலும் இந்த இலையை தொடர்ந்து வீட்டில் வைத்தால் தவறு ஒன்றும் கிடையாது. நம்பிக்கை உள்ளவர்கள் மேல் சொன்ன ஆன்மீகம் சார்ந்த இந்த பரிகாரத்தை செய்து பலன் பெறலாம்.

- Advertisement -