தங்க நகை சேர பரிகாரம்

kalsam murugan
- Advertisement -

அந்தக் காலம் முதல் இந்த காலம் வரை தங்க நகையின் மீது இருக்கும் ஆர்வம் ஒவ்வொரு நாளும் ஒவ்வொருவருக்கும் பெருகிக் கொண்டே தான் செல்கிறது.. அது மட்டும் இன்றி இந்த தங்கம், வெள்ளி போன்ற ஆபரணங்கள் மகாலட்சுமி தாயாரின் அம்சம் நிறைந்த பொருளாக பார்க்கப்படுகிறது. அத்தகைய தங்கத்தை சேர்க்க பல தாய்மார்கள் பெரிதும் துன்பப்படுகிறார்கள். இன்றளவும் ஒரு பொட்டு தங்கத்தை கூட சேர்க்க முடியாமல் கஷ்டப்படும் பெண்கள் எத்தனையோ பேர் இருக்கத் தான் செய்கிறார்கள்.

அப்படியே பாடுபட்டு ஒரு நகையை வாங்கினால் அது வீட்டில் தங்காமல் ஏதாவது ஒரு காரணத்திற்காக அடகு சென்று விடும். இப்படியான சூழ்நிலையில் தங்கத்தை சேர்ப்பதெல்லாம் அவர்களுக்கு எப்பொழுதுமே கேள்வி குறி தான். இந்த சூழ்நிலையை சரி செய்ய அற்புதமான ஒரு எளிய பரிகார முறையை தான் ஆன்மீகம் குறித்த இந்த பதிவில் இப்போது நாம் தெரிந்து கொள்ளப் போகிறோம்.

- Advertisement -

தங்கம் சேர

தங்கம் சேர வேண்டும் என நினைப்பவர்கள் தங்கம் வாங்கியவுடன் அதை மரப்பெட்டியில் சிகப்பு நிற துணியில் வைக்க வேண்டும். அது ஒரு குண்டுமணி தங்கமாக இருந்தாலும் இந்த முறையில் தான் வைக்க வேண்டும். இப்படி வைக்கும் தங்கத்துடன் பச்சைக் கற்பூரம், ஏலக்காய், துளசி இவைகளை வைக்கும் போது தங்கத்தை ஈர்க்கும் தன்மை அதிகரிக்கும்.

இவற்றுடன் நாம் செய்யும் இன்னொரு பெரிய தவறையும் திருத்திக் கொள்ள வேண்டும். பலரும் தங்கத்தை இரவலாக கொடுப்பார்கள். அதை ஒரு காலமும் செய்யக் கூடாது. ஏனெனில் தங்கத்திற்கு தோஷத்தை ஈர்க்கும் சக்தி அதிகம். அது மட்டும் இன்றி அது தாயாரின் அம்சமாக பார்க்கப்படுகிறது. ஆகையால் எந்த காரணத்திற்கும் தங்கம், வெள்ளி போன்ற ஆபரணங்களை பிறருக்கு இரவலாக கொடுக்கவோ நாம் இரவலாக வாங்கியும் பயன்படுத்தக்கூடாது.

- Advertisement -

இப்போது வீட்டில் தங்கம் சேராமல் போவதற்கான காரணம் பொவாது எனில் அது ஸ்வர்ணதோஷமாகத் தான் இருக்கும். இந்த தோஷம் இருக்கும் வீட்டில் தங்கம் நிச்சயம் நிலைக்காது. அதை சரி செய்யக் கூடிய எளிய பரிகாரத்தை இப்போது பார்க்கலாம். இந்த பரிகாரத்தை செவ்வாய்க்கிழமையில் வரும் அவிட்ட நட்சத்திரத்தில் செய்ய வேண்டும். அப்படி இரண்டும் ஒன்று சேர்ந்து வராத பட்சத்தில் ஏதேனும் ஒரு செவ்வாய்க்கிழமை தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்.

சொர்ண தோஷம் நீங்க பரிகாரம்

செவ்வாய்க்கிழமை அன்று ஒரு கலச சொம்பை தயார் செய்யுங்கள். அந்த சொம்பில் துவரம் பருப்பு, கொண்டைக்கடலை, அரிசி மூன்றையும் சம அளவு எடுத்து அத்துடன் ஒரு ஏலக்காயும் சேர்த்து அந்த கலசத்தை நிரப்பிக் கொள்ளுங்கள். அதற்கு மேல் ஒரு தேங்காயை வைத்து கலசத்தை தயார் செய்ய வேண்டும்.இந்த கலசத்தை அருகில் உள்ள முருகன் ஆலயத்திற்கு சென்று அங்கு முருகனின் பாதத்தில் இந்த கலச சொம்பை வைத்து வீட்டில் உள்ளவர்களின் பெயருக்கு ஒரு அர்ச்சனை செய்ய வேண்டும்.

- Advertisement -

அடுத்து முருகப் பெருமானிடம் மனதார வேண்டிக் கொண்டு இந்த கலசத்தை வீட்டிற்கு கொண்டு வந்து பூஜை அறையில் வைத்து வைத்து விடுங்கள். அதன் பிறகு கொண்டைக்கடலையை நெய்வேத்தியமாக வைத்து வழிபாடு செய்ய வேண்டும்.இந்த பரிகாரத்தை செய்பவர்கள் கலச சொம்பு தயார் செய்ய ஆரம்பித்தது முதல் கோவிலுக்கு சென்று வீடு திரும்பும் வரை யாரிடமும் பேசக் கூடாது. அடுத்தவருக்கு தெரியவும் கூடாது. இது இந்த பரிகாரத்தில் மிகவும் முக்கியமான ஒன்று.

இதையும் படிக்கலாமே: வீட்டில் பணம் சேர வாஸ்து

அதன் பிறகு கலசத்தில் இருக்கும் பொருட்களை நம் வீட்டு பயன்பாட்டிற்கு உபயோகப்படுத்திக் கொள்ளுங்கள். இந்த பரிகாரத்தை செய்வதன் மூலம் சொர்ண தோஷம் நீங்குவதுடன், தங்க நகை பல மடங்கு பெருகும். நம்பிக்கை உள்ளவர்கள் இந்த பரிகாரத்தை செய்து பலன் அடையலாம்.

- Advertisement -