மூக்குத்தி பூச்செடிக்கு இத்தனை மகத்துவமா? இது தெரிந்தால் இந்த செடியை, ரோட்டோரத்தில் யாரும் விட்டு வைக்கவே மாட்டார்களே!

thatha-thalaivetti-poo4
- Advertisement -

மூக்குத்தி பூச்செடி என்றால் பல பேருக்கு தெரியாது. தாத்தா தலைவெட்டி பூ என்றால் எல்லோருக்கும் தெரியும். ஏனென்றால் இந்தப் பூவை வைத்து சிறுவயதில் விளையாடியதை யாரும் கண்டிப்பாக மறக்க முடியாது. ஆனால் இந்தச் செடிக்கு இத்தனை மகத்துவம் இருப்பது நம்மில் பல பேருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. தெரிந்திருந்தால் இந்த செடியை ரோட்டோரத்தில் விட்டு வைத்திருப்பார்களா? அப்படி என்னதான் இந்த செடிக்கு மகத்துவம் இருக்கிறது என்பதைப்பற்றி நீங்களும் தெரிந்து கொள்ள வேண்டுமா?

thatha-thalaivetti-poo

இந்தச் செடியை பற்றிய மகத்துவத்தை தெரிந்துகொள்வதற்கு முன்பு, முதலில் இந்த செடியில் இருக்கும் காய்க்கு விஷத்தன்மை உண்டு என்பதை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். கட்டாயம் இந்தச் செடியில் இருக்கும் காயை சாப்பிட கூடாது என்பதை மறந்துவிடாதீர்கள். இந்த மூக்குத்திப்பூ செடியானது மஞ்சள் நிறப் பூ, வெள்ளை நிறப் பூ, ஊதா நிற பூ என்ற மூன்று விதமான நிறங்களில் பூக்கும் செடிகள் மூன்று வகையில் உள்ளது.

- Advertisement -

தலைவலிக்கு நிவாரணம்:
இந்த மூக்குத்திப் பூ செடி இலைகளை பறித்து நன்றாக கழுவி, மிளகு ரசத்தில் போட்டு ஒரு கொதிவிட்டு, அந்த ரசத்தை குடித்தால் உடம்பில் இருக்கும் சீத்தளத்தை வெளியேற்றி விடும். அதாவது சளி பிரச்சனை, தலை பாரம், தலையில் நீர் கோர்த்தல், இப்படிப் பட்ட பிரச்சினைக்கு நிவாரணமாக இந்த ரசம் இருக்கும் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை.

thatha-thalaivetti-poo1

இரத்த காயத்திற்கு மருந்து:
நம்முடைய உடலில் கீழே விழுந்தாலோ அல்லது ஏதாவது வெட்டு காயம் பட்டு ரத்தம் இடைவிடாமல் வந்துகொண்டே இருக்கும் சமயத்தில், இந்த மூக்குத்தி பூவின் செடியின் இலையை பறித்து உள்ளங்கைகளை வைத்து கசக்கினால் சாறு வரும். அந்த சாறை காயத்தின் மீது போட்டால் ரத்தம் உடனடியாக நிற்கும்.

- Advertisement -

நீண்ட நாட்களாக உடலில் ஆறாத புண் ஏதும் இருந்தால், அதன் மீது இந்த மூக்குத்திப்பூ இலையை சிறிது தண்ணீர் விட்டு அறைத்து, அந்த விழுதை பூசி வந்தால் கூடிய விரைவில் அந்த புண் ஆறிவிடும்.

thatha-thalaivetti-poo2

சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு ஏற்படும் காயம் சீக்கிரமாக ஆறாது என்பது நாம் எல்லோரும் அறிந்த ஒன்று. அப்படிப்பட்டவர்கள் உடம்பில் ஏற்படும் காயத்தை கூட சரி செய்யும் அளவிற்கு மருத்துவ குணம் கொண்டதுதான் இந்த மூக்குத்திப்பூ இலை என்பது குறிப்பிடத்தக்கது. இதேபோல் உடம்பில் ஏற்படும் தோல் பிரச்சனையான தேமல் சொறி இவைகள் சரியாக இந்த மூக்குத்தி பூ இலையின் சாரை கசக்கி தடவி வந்தாலே போதும். இரண்டே நாட்களில் மறையும்.

- Advertisement -

முட்டி வலி நீக்கும்:
இந்த மூக்குத்தி பூ செடியில் இருக்கும் பூ, வேர், இலை இவற்றையெல்லாம் ஒன்றாக சேகரித்து, ஒரு கடாயில் போட்டு, ஒரு ஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றி லேசாக வதக்கி கொள்ள வேண்டும். வதங்கிய அந்த விழுதை எடுத்து, முட்டியில் மீது வைத்து வெள்ளைத் துணி போட்டு கட்டி விட்டால் அந்த பிரச்சனை உடனடியாக ஒரு முடிவுக்கு வந்துவிடும். கை மூட்டு வலியா இருந்தாலும் சரி. கால் மூட்டு வலியா இருந்தாலும் சரி.

thatha-thalaivetti-poo3

ரோட்டோரத்தில் இதுநாள்வரை நாம் கவனிக்காமல் இருந்த இந்த ஒரு செடிக்கு இத்தனை மகத்துவமா? கொஞ்சம் ஆச்சரியப்படக் கூடிய விஷயம்தான். நம் கண்களுக்கு தெரியாமல் எத்தனையோ விஷயங்கள், இன்னும் எந்தெந்த பொருட்களில் மறைந்துள்ளதோ! மறைந்த முன்னோர்களுடன் சேர்த்து, இப்படிப்பட்ட பலவகையான அற்புதமான மருத்துவ குறிப்புகளும் மறந்தே போய்விட்டது என்றுதான் சொல்ல வேண்டும்.

இதையும் படிக்கலாமே
வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பதன் மூலம் இத்தனை பயன் உள்ளதா?

இது போன்ற மேலும் பல ஆரோக்கியம் சார்ந்த குறிப்புகளை அறிந்து கொள்ள எங்களோடு இணைந்திருங்கள்.

English Overview:
Here we have Thatha thala vetti poo in Tamil. Thatha poo chedi. Mookuthi poo. Mookuthi poo benefits. Mookuthi poo plant uses in Tamil.

- Advertisement -