தட்டைப்பயிறு குழம்பை ஒரு முறை இந்த மசாலா அரைத்து ஊற்றி வைத்து பாருங்க. நல்ல கம கமன்னனு இருக்கும் இதோட வாசத்துக்கு பக்கத்து வீட்டுக்காரங்க கூட எனக்கும் கொஞ்சம் குழம்பு தாங்களேன் கேட்டு வந்துருவாங்க.

karaamani kuzhambhu
- Advertisement -

பயிறு வகைகளை நாம் அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்வது உடலுக்கு மிகவும் ஆரோக்கியத்தை தரும். அந்த வகையில் மற்ற பயிறு வகைகளை உணவில் பெரும்பாலும் சேர்ப்பதில்லை என்றாலும் இந்த தட்டைப் பயிரை பொறுத்த வரை அடிக்கடி எல்லோரும் குழம்பு சேர்த்து சமைப்பார்கள். அப்படி செய்யும் குழம்பை ரொம்பவே ருசியாக அதே நேரத்தில் சுலபமாக எப்படி செய்வது என்று தான் இந்த சமையல் குறிப்பு பதிவில் இப்போது நாம் தெரிந்து கொள்ளப் போகிறோம்.

செய்முறை

இந்த குழம்பு செய்ய முதலில் ஒரு கப் தட்டை பயிரை இரவு முழுவதும் ஊற வைத்து மறுநாள் தண்ணீர் வடித்து விட்டு அலசி குக்கரில் சேர்த்து பயிறு மூழ்கும் வரை தண்ணீர் ஊற்றி நான்கு விசில் விட்டு எடுத்து விடுங்கள். இது ஒரு புறம் அப்படியே இருக்கட்டும். இந்த நேரத்தில் இந்த குழம்பிற்கு ஒரு சிறிய எலுமிச்சை அளவு புளியை ஊற வைத்து கரைத்து வடிகட்டி எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். அதே போல் ஒரு முருங்கைக்காய், ஒரு உருளைக்கிழங்கு, ரெண்டு கத்திரிக்காய் மீடியம் சைஸில் நறுக்கி தண்ணீரில் போட்டு வைத்து விடுங்கள்.

- Advertisement -

இப்போது இந்த குழம்புக்கு ஒரு மசாலாவை தயார் செய்து விடுவோம். அதற்கு அடுப்பில் கடாய் வைத்து ஒரு டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானவுடன் 10 சின்ன வெங்காயம், ஒரு மீடியம் சைஸ் தக்காளி, ரெண்டு ஸ்பூன் தனியா, அரை ஸ்பூன் மிளகு, அரை ஸ்பூன் சீரகம், நான்கு காய்ந்த மிளகாய் அனைத்தையும் சேர்த்து ஒரு முறை நன்றாக வதக்கிக் கொள்ளுங்கள். அதன் பிறகு நான்கு டேபிள் ஸ்பூன் துருவிய தேங்காயை சேர்த்து அதையும் ஒரு முறை நன்றாக வதக்கிய பிறகு அடுப்பை அணைத்து விடுங்கள்.

இப்போது வதக்கிய இந்த வெங்காயம், தக்காளி அனைத்தையும் தட்டில் கொட்டி ஆற வைத்த பிறகு மிக்ஸி ஜாரில் சேர்த்து தண்ணீர் ஊற்றாமல் நல்ல நைசாக அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள். இப்பொழுது குழம்பை தாளித்து விடுவோம். அடுப்பில் ஒரு கடாய் வைத்து இரண்டு டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானவுடன் ஒரு ஸ்பூன் கடுகு, கால் ஸ்பூன் வெந்தயம் சேர்த்து பொரிய விடுங்கள். அதன் பிறகு ஒரு பெரிய வெங்காயத்தை பொடியாக நறுக்கி சேர்த்து ஒரு கொத்து கருவேப்பிலையும் சேர்த்து நன்றாக வதக்கிக் கொள்ளுங்கள்.

- Advertisement -

இப்போது நறுக்கி வைத்த காய்கறிகளை சேர்த்து ஒரு முறை நன்றாக கலந்து கால் டீஸ்பூன் மஞ்சள் தூள், அரை ஸ்பூன் உப்பு சேர்த்த பிறகு ஒரு கப் தண்ணீர் ஊற்றி ஐந்து நிமிடம் இந்த காய்கறிகளை வேக விடுங்கள். காய்கள் பாதி அளவு வெந்த பிறகு அரைத்து வைத்திருக்கும் மசாலா, புளி தண்ணீர் அனைத்தையும் சேர்த்து இப்போது இன்னும் கொஞ்சம் தண்ணீரும் இந்த குழம்பிற்கு தேவையான உப்பையும் சரி பார்த்து சேர்த்த பிறகு நன்றாக கலந்து 10 நிமிடம் கொதிக்க விட்டால் அருமையான தட்டைப்பயிறு குழம்பு தயார்.

இதையும் படிக்கலாமே: இட்லியை கொஞ்சம் வித்தியாசமா தேங்காய் பாலில் அதுவும் கோன் இட்லியாக செய்யலாமா? இந்த இட்லி மட்டும் செஞ்சு பாருங்க உங்க வீட்டு குட்டீஸ் ஜாலியா என்ஜாய் பண்ணி சாப்பிடுவாங்க.

இந்த குழம்பு செய்வது மிக மிக எளிது. ஆனால் சுவையோ அட்டகாசமாக இருக்கும். ஒரு முறை இப்படி தட்டைப்பயிறு குழம்பு வைத்துப் பாருங்கள் இனி அடிக்கடி இதை செய்ய சொல்லி கேட்பார்கள். அந்த அளவிற்கு சுவை பிரமாதமாக இருக்கும்.

- Advertisement -