மகாலட்சுமி தாயாருக்கு உங்கள் கையால் இந்த மாலையை கட்டி போட்டால் நீங்கள் மனதில் நினைத்தது 48 நாட்களுக்குள் நடக்கும்.

mahalakshmi-vilakku
- Advertisement -

மனதில் நினைத்த வேண்டுதல் நல்லபடியாக நிறைவேற வேண்டுமா. தாயாரின் பாதங்களை நம்பிக்கையோடு பற்றி கொண்டு வீட்டில் இருக்கும் பெண்கள் இந்த பரிகாரத்தை செய்து பாருங்கள். எவ்வளவு பெரிய வேண்டுதலாக இருந்தாலும் சரி அதை 48 நாட்களுக்குள் நிறைவேற்றி தரக்கூடிய சக்தி வாய்ந்த பரிகாரம் இது. வீட்டில் இருக்கும் பெண்கள் தான் இந்த பரிகாரத்தை செய்ய வேண்டும். ஏதாவது ஒரு வேண்டுதலாக வைத்துக் கொள்ளுங்கள்.

உங்கள் பிள்ளைகளுக்கு திருமணம் நடக்க வேண்டும். பிள்ளைகள் நன்றாக படிக்கும் திறன் அதிகரிக்க வேண்டும். கணவரின் நன்மைக்காக கூட இந்த பரிகாரத்தை செய்யலாம். அல்லது உங்களுக்கே நல்ல வேலை கிடைக்க வேண்டும், நல்ல கணவன் கிடைக்க வேண்டும் என்று கூட வேண்டிக் கொள்ளலாம். கடன் சுமை குறைய, வருமானம் அதிகரிக்க எதுவாக இருந்தாலும் சரி, நம்பிக்கையுடன் 48 நாட்கள் தொடர்ந்து இந்த பரிகாரத்தை செய்யும் போது உங்களுக்கான பலன் நிச்சயம் கை மேல் கிடைக்கும்.

- Advertisement -

இந்த பரிகாரத்திற்கு நமக்கு விரலி மஞ்சள் கட்டாயம் தேவை. சில இடங்களில் இதை கொம்பு மஞ்சள் என்றும் சொல்லுவார்கள். அந்த விரலி மஞ்சள் 48 என்ற கணக்கில் வாங்கி வைத்துக் கொள்ளுங்கள். முனை உடையாத விரலி மஞ்சள் ஆக இருக்கட்டும். ஒவ்வொரு விரலி மஞ்சளின் மேலே ஒரு குங்கும பொட்டை வைத்து விடுங்கள். இந்த 48 விரலி மஞ்சளை ஒரு தட்டில் போட்டு அந்த தட்டை மகாலட்சுமி தாயாரின் பாதங்களில் வைத்து விடுங்கள்.

தினமும் காலையில் எழுந்து சுத்தபத்தமாக குளித்துவிட்டு பூஜை அறையில் தீபம் ஏற்றி வைத்துவிட்டு, மகாலட்சுமி தாயாருக்கு இரண்டு ஏலக்காய்களை நிவேதியமாக வைத்து விட வேண்டும். எடுத்து வைத்திருக்கும் 48 விரலி மஞ்சளிலிருந்து ஒவ்வொன்றாக எடுத்து தாயாருக்கு அர்ச்சனை செய்ய வேண்டும். குங்கும அர்ச்சனை செய்வோம் அல்லவா. அதேபோல ஒவ்வொரு விரலி மஞ்சள் ஆக எடுத்து தாயாரின் பாதங்களில் வைத்து விடுங்கள். ஒவ்வொரு முறை இந்த மஞ்சளை எடுத்து தாயார் பாதத்தில் வைக்கும் போதும் உங்களுடைய வேண்டுதலை மனதார ஒருமுறை சொல்ல வேண்டும். (வேண்டுதலை ஒரு வரியில் சொல்லுங்கள்.)

- Advertisement -

இறுதியாக தாயாருக்கு கற்பூர ஆராதனை காண்பித்து பூஜையை நிறைவு செய்து கொள்ளுங்கள். பூஜை முடிந்து சிறிது நேரம் கழித்து தாயாரின் பாதத்தில் இருக்கும் மஞ்சள் கொம்புகளை எடுத்து தாம்பூல தட்டிலேயே பத்திரப்படுத்தி வைத்துக் கொள்ளுங்கள். தினம் தோறும் மகாலட்சுமி தாயாருக்கு இந்த விரலி மஞ்சளால் 48 நாட்கள் மேல் சொன்னபடி உங்கள் வேண்டுதலை சொல்லி, விரலி மஞ்சள் அர்ச்சனை செய்ய வேண்டும். பிரசாதமாக வைத்த ஏலக்காய்களை பாலில் போட்டு குடித்துக் கொள்ளலாம். இல்லை என்றால் அப்படியேவும் பிரசாதமாக சாப்பிடலாம்.

48 வது நாள் மகாலட்சுமி தாயாருக்கு பால் பாயாசம் மணக்க மணக்க நெய் ஊற்றி முந்திரி பருப்பு ஏலக்காய் திராட்சை போட்டு செய்து வைத்து, பூஜையை நிறைவு செய்து கொள்ளுங்கள். தாயாருக்கு தினம் தோறும் அர்ச்சனை செய்த 48 விரலி மஞ்சளை ஒரு மஞ்சள் நூலால் கட்டி உங்கள் வீட்டின் அருகில் இருக்கும் தாயார் சன்னதிக்கு எடுத்துச் சென்று அதை மாலையாக போட்டுவிட்டு உங்கள் பெயரைச் சொல்லி அர்ச்சனை செய்து கொள்ள வேண்டும்.

பெருமாள் கோவிலில் இருக்கும் தாயாருக்கு இந்த மாலையை போடலாம். 48 நாட்கள் கழித்து உடனடியாக இந்த மாலையை கொண்டு போய் செலுத்த வேண்டும் என்ற அவசியம் கிடையாது. உங்கள் வீட்டின் அருகில் பெருமாள் கோவில் இல்லை என்றாலும் கூட, ஒருநாள் பெருமாள் கோவில் இருக்க கூடிய கோவிலுக்கு சென்று சிரமம் பார்க்காமல் இந்த மாலையை தாயாருக்கு அணிவித்து விட்டு வாருங்கள். இந்த மாலையை லட்சுமி தாயாருக்கு அணிவித்த ஒரு சில நாட்களிலேயே நீங்கள் மனதில் நிறைத்த வேண்டுதல் நிச்சயம் நிறைவேறும் என்பது நம்பிக்கை. (பெண்களால் 48 நாட்கள் இந்த பூஜையை தொடர்ந்து செய்ய முடியாது. இடையில் பூஜை செய்ய முடியாத ஐந்து நாட்களை தவிர்த்துக் கொள்ளலாம் தவறு கிடையாது.) நம்பிக்கை உள்ளவர்கள் பரிகாரத்தை செய்து பலன் பெறலாம் என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -