இவரது ஆட்டமே அணி தோல்விக்கு காரணம். அங்கேயே ஆட்டம் நமது கைகளில் இருந்து சென்றது – விராட் கோலி விரக்தி

Kohli
- Advertisement -

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான முதலாவது டி20 போட்டி நேற்று (24-02-2019) விசாகப்பட்டினத்தில் நடந்து முடிந்தது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பீல்டிங் செய்ய தேர்வு செய்தது. அதன்படி விளையாடிய இந்திய விளையாடத்துவங்கியது.

Toss

இந்திய அணி தனது இன்னிங்க்ஸை 20 ஓவர்களில் வெறும் 126 ரன்கள் மட்டுமே சேர்த்தது. இந்திய அணி சார்பில் ராகுல் மட்டுமே அரைசதம் 50 அடித்து ஆறுதல் அளித்தார். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினர். பிறகு ஆடிய ஆஸ்திரேலிய அணி ஆட்டத்தின் கடைசி பந்தில் பவுண்டரி அடித்து வெற்றி பெற்றது. அந்த அணி சார்பாக மேக்ஸ்வெல் அதிரடியாக ஆடி 53 ரன் குவித்தார்.

- Advertisement -

இந்த தோல்வி குறித்து பேட்டியளித்த விராட் கோலி :நமது அணி தொடக்கத்தில் சிறப்பாகவே துவங்கியது. ராகுல் மற்றும் எனக்கு இடையே நல்ல பாட்னர்ஷிப் இருந்தது. அவர் சிறப்பாகவே ஆடினார். இறுதியில் விக்கெட்டுகளை இழந்துவிட்டோம். இந்த மைதானம் பேட்டிங்க்கு நல்ல மைதானமே. 150 ரன்கள் அடித்திருந்தால் இந்திய அணிக்கு வெற்றி வாய்ப்பு இருந்திருக்கும்.

இருப்பினும் பவுலிங் சிறப்பாகவே இருந்தது. மார்கண்டே நடு ஓவர்களில் சிறப்பாக வீசினார். குறைந்த இலக்கு கொண்ட போட்டிகள் எப்போதுமே சுவாரசியமாக இருக்கும். இந்த போட்டியில் ஆஸ்திரேலிய வீரர்கள் சிறப்பாக ஆடினர். மேக்ஸ்வெல் எங்களது வெற்றியை எங்களிடம் இருந்து பறிக்க முக்கிய காரணமாகி வெற்றியை ஆஸ்திரேலிய அணிக்கு பெற்று தந்துவிட்டார் என்று கூறினார் கோலி.

- Advertisement -

இதையும் படிக்கலாமே :

தோனியின் பொறுமையான ஆட்டமே இந்திய அணியின் தோல்விக்கு காரணம் மேலும் ஓய்வு பெற வேண்டும் என கூறி – ரசிகர்கள் பொறுமை இழப்பு

மேலும் கிரிக்கெட் செய்திகள் குறித்து உடனடி தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்து இருங்கள்

- Advertisement -