தீராத பிரச்சனைகள் தீர தை மாதம் முடிவதற்குள் இந்த குறிப்பிட்ட வழிபாடுகளை மட்டும் தவறாமல் செய்து பாருங்கள். உங்களுக்கு சங்கடங்கள் அனைத்தும் முழுவதுமாக மறைந்து விடும்

arasa-ilai
- Advertisement -

கணவன், மனைவி, தாய், தந்தை, மகன், மகள் இவர்கள் அனைவரும் சேர்ந்தது தான் ஒரு குடும்பமாகும். இந்த குடும்பத்தில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமான குணத்துடன் இருப்பார்கள். எனவே அந்த குடும்பத்தில் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து இருந்தால் மட்டுமே சந்தோஷம் நிலைத்திருக்கும். என்னதான் குடும்பத்திற்குள் நல்ல புரிதல் இருந்தாலும் சில பிரச்சனைகள் மூலம் குடும்பத்தில் நிம்மதி இல்லாமல் இருக்கும்.

அந்த குடும்பத்தில் ஏதேனும் ஒரு குறை இருந்து கொண்டே இருக்கும். ஒன்று வேலை இல்லாமல் இருப்பது, குழந்தை இல்லாமல் இருப்பது அல்லது வீட்டில் உள்ளவர்களுக்கு அடிக்கடி உடல்நலக் குறைபாடு ஏற்படுவது, இது போன்ற ஏதாவது ஒரு பிரச்சனை ஒவ்வொரு குடும்பத்திலும் இருந்து கொண்டுதான் இருக்கிறது. இது போன்ற மன உளைச்சல் கொடுக்கும் துன்பத்திலிருந்து விடுபடுவதற்கு இந்த தை மாதத்தில் செய்ய வேண்டிய வழிபாடுகளை பற்றிதான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

- Advertisement -

நம் வாரம் இருமுறை வீட்டில் பூஜை செய்தாலும், பல கோவில்களுக்கு சென்று வந்தாலும் நமக்கு ஒரு துன்பம் என்ற பொழுது முதலில் வந்து நிற்பது குல தெய்வம் தான். எனவே ஆறு மாதத்திற்கு ஒரு முறையாவது தவறாமல் குலதெய்வ கோவிலுக்கு சென்று வர வேண்டும். அதற்கு மிகவும் உகந்த மாதம் தைமாதம். தை மாதத்தில் எந்த ஒரு விஷயமாக இருந்தாலும் அதில் வரும் என்பது ஐதிகம்.

எனவே இந்த தை மாதத்தில் முதலில் குடும்பத்துடன் குல தெய்வ கோவிலுக்கு சென்று வரவேண்டும். பின்னர் நடப்பவை அனைத்தும் நன்மையாக நடக்கும். அதுபோல வியாபாரத்தில் பிரச்சனை இருப்பவர்களும், வெகுநாளாக நினைத்த விஷயம் நடக்காமல் தள்ளிப் போய்க் கொண்டிருந்தாலும் அரச மரத்திற்கு பூஜை செய்ய வேண்டும் என்று.

- Advertisement -

அதாவது முறையாக அரசமரத்திற்கு அபிஷேகம் செய்து மஞ்சள் குங்கும பொட்டு வைத்து பூஜை செய்து 108 முறை சுற்றி வர வேண்டும். இந்த பூஜை செய்வதன் மூலம் நினைத்த காரியம் நிறைவேறும். அடுத்ததாக வேலை இல்லாதவர்களும், நல்ல வேலை கிடைக்க வேண்டுமென்றாலும், அரசாங்க வேலை கிடைக்க வேண்டுமென்றறாலும், பணி உயர்வு வேண்டும் என்பவர்களும், குழந்தை பெற வேண்டுமென்று உள்ளவர்களும் இந்த சிறப்பு பூஜையை செய்ய வேண்டும்.

இதற்காக அரச மரமும் வேப்ப மரமும் ஒன்றாக இருக்கும் தளத்திற்கு சென்று அந்த இரண்டு மரத்திற்கும் அபிஷேகம் செய்து மஞ்சள் குங்கும பொட்டு வைத்து தீப தீப ஆராதனை செய்து பூஜிக்க வேண்டும் என மதத்தினர் 108 முறை சுற்றி வர வேண்டும்.

இவ்வாறு என்பதை மாதத்தில் இந்த பூஜை, பரிகாரங்களை செய்வதன் மூலம் உங்கள் வேண்டுதல்கள் அனைத்தும் நிச்சயம் நிறைவேறும். தை மாதம் ஒரு புதிய காரியத்தை தொடங்குவதற்கு சிறந்த மாதமாகும். இந்த மாதத்தில் செய்யப்படும் அனைத்து விஷயங்களும் மிகவும் சிறப்புடன் அமையும். எனவே நீங்கள் செய்யும் இந்த பரிகாரங்களுக்கும் நிச்சயம் நல்ல பலன் கிடைக்கும்.

- Advertisement -