இந்த குங்குமத்தை தினம் தோறும் இப்படி நெற்றியில் வைத்துக் கொண்டால் தீர்க்க சுமங்கலி பிராப்த்தம் கிடைக்கும்.

kungumam-kumkum
- Advertisement -

ஒவ்வொரு பெண்ணுக்குமே தன்னுடைய வாழ்நாள் முழுவதும் தீர்க்க சுமங்கலையாக வாழ வேண்டும். தன்னுடைய கணவர் தன்னுடைய குடும்பம், தன்னுடைய குழந்தைகள் நன்றாக இருக்க வேண்டும் என்ற ஆசை நிச்சயம் இருக்கத்தான் செய்யும். தீர்க்க சுமங்கலியாக வாழ்ந்து தன்னுடைய பிள்ளைகளுக்கு திருமணம் செய்து முடித்துவிட்டு, சந்தோஷமாக சிவலோக பதவியை அடைவது என்பது அவ்வளவு சுலபமான காரியம் அல்ல. கண்முன்னே எத்தனை போராட்டங்கள். இதை எல்லாவற்றையும் தாண்டி சந்தோஷமான குடும்பத்தை நடத்தி இறுது வரை சுமங்கலி பிராப்தத்தை பெற பெண்கள் தினம் தோறும் நெற்றியில் குங்குமத்தை எப்படி வைத்துக் கொள்வது என்பதை பற்றி ஒரு சிறு குறிப்பை இன்று நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். முழு நம்பிக்கையோடு இந்த பரிகாரத்தை பின்பற்றி வருபவர்களுடைய கணவனின் ஆயுள் நிச்சயம் அதிகரிக்கும்.

தினம்தோறும் நாம் நெற்றியில் வைக்கக்கூடிய குங்குமமானது சாதாரணமாக கடையிலிருந்து வாங்கி வந்த குங்குமமாக இருப்பதை விட, ஏதாவது அம்மன் கோவிலில் இருந்து வாங்கப்பட்ட குங்குமமாக இருக்க வேண்டும். பிரசாதமாக அம்மன் கோவிலில் இருந்து வாங்கக்கூடிய குங்குமத்தை சேகரித்தும் நெற்றியில் வைத்துக் கொள்ளலாம், அல்லது அம்மன் கோவில்களுக்கு சன்னிதானத்திற்கு உள்ளேயே தாழம்பூ குங்குமம் மணக்க மணக்க விற்கும். அதை வாங்கி அம்மனின் பாதங்களில் வைத்து அர்ச்சனை செய்து அந்த குங்குமத்தை வீட்டிற்கு கொண்டு வந்து ஒரு டப்பாவில் கொட்டி வைத்துக்கொண்டு நெற்றியில் இட்டுக் கொள்ளலாம்.

- Advertisement -

சில பெண்கள் இன்றைய சூழ்நிலையில் காலையில் எழுந்து குளிக்கின்ற பழக்கத்தை விட்டு விட்டார்கள். காலையில் குளிக்கின்ற பழக்கம் படிப்படியாக குறைந்து வருகிறது. ஆனால் பெண்கள் காலையில் எழுந்த உடனே குளித்து முடித்துவிட்டு பொட்டு இட்டுக்கொண்டு பூஜை அறைக்கு வந்து குலதெய்வத்தை வேண்டி அதன் பின்பு குங்குமத்தை எடுத்து முதலில் நெற்றியில் வைக்க வேண்டும். பிறகு வகுட்டில் வைக்க வேண்டும். பிறகு உங்களுடைய கணவர் நீண்ட ஆயுளோடு ஆரோக்கியத்தோடு நன்றாக இருக்க வேண்டும் என்று ஏதாவது ஒரு இஷ்ட அம்மனையும் குலதெய்வத்தையும் வேண்டிக் கொண்டு திருமாங்கல்யத்திற்கு குங்குமத்தை வைத்துக்கொண்டு பூஜை அறையில் விழுந்து நமஸ்காரம் செய்யுங்கள். பெண்கள் சாஷ்டாங்கமாக விழுந்து நமஸ்காரம் செய்யக்கூடாது என்பதை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்.

இப்படி பூஜை அறைக்கு சென்று தினம் தோறும் நெற்றிலும் வகுடிலும் தாலி கொடியிலும் குங்குமத்தை வைத்து பிரார்த்தனை செய்து கொண்டால் உங்களுடைய மாங்கல்யத்தின் பலம் இரட்டிப்பாக அதிகரிக்கும். அதோடு மட்டுமல்லாமல் உங்களுடைய கணவனின் முன்னேற்றமும் அதிகரிக்கும். கணவன் செய்யக்கூடிய வேலையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். தொழிலில் நல்ல லாபம் பெருகும். ஏனென்றால் கணவனின் பாதி மனைவி. மனைவியின் பாதி கணவர். ஒருவருக்கு ஒருவர் அடுத்தவர்களுக்காக வேண்டுதலை வைக்கும் போது அந்த வேண்டுதலுக்கான பலம் இரட்டிப்பாக இந்த பிரபஞ்சம் உங்களுக்கு கொடுக்கும்.

- Advertisement -

முடிந்தால் கணவன் மனைவி இருவரும் சேர்ந்து காலையில் இறைவழிபாடு செய்து வேண்டுதல் வைக்கும் பழக்கத்தை கொண்டு வாருங்களேன். தம்பதி சரீரமாக இறைவனிடம் வைக்கக்கூடிய வேண்டுதலுக்கு என்ன ஒரு மகிமை என்பதை நீங்களே புரிந்து கொள்வீர்கள்.

உங்களுடைய குடும்பம் மேலும் மேலும் சந்தோஷமாக வாழ்வாங்கு வளர்ந்து கொண்டே செல்ல நம்பிக்கையோடு மேல் சொன்ன சின்ன சின்ன விஷயங்களை பின்பற்றி வந்தாலே போதுங்க. நம்பிக்கை உள்ளவர்கள் முயற்சி செய்து பார்த்து பலன் பெறலாம் என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -